Ad Widget

ஜல்லிக்கட்டு அனுமதி: பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் ஓ.பி.எஸ்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதையடத்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார். இது குறித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,’தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த ஏதுவாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அரசியலமைப்புச் சட்டம் 213-வது பிரிவின்படி குடியரசுத் தலைவரின் வழிகாட்டுதல்கள் பெறப்பட்ட பின்னர் குறித்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது....

வீட்டுக்கு தீ வைத்த பெண் போலீஸ் சிக்கினார்!

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் வீட்டிற்கு தீ வைத்த பெண் காவலரும், ஆட்டோவுக்கு தீ வைத்த ஆண் காவலரும் யார் என்பதை காவல்துறை உயரதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு தடையைப் போக்க நிரந்தரச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, சென்னை மெரீனா கடற்கரையில் விவேகானந்தர் இல்லம் எதிரே கடந்த செவ்வாய்க்கிழமை (ஜன.17) முதல் மாணவர்கள், இளைஞர்கள்,...
Ad Widget

இலங்கையர்களின் இந்தியாவுக்கான ஊடுருவலுக்கு தடுப்பு

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் ஊடுருவுபவர்களைத் தடுப்பதற்காக, இந்தியப் பாதுகாப்புத் தரப்பினர், பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல்முனையில் இருந்து இலங்கை தலைமன்னார் வரையிலான கடற்பகுதியில், ஏராளமான மணல் திட்டுகள் உள்ளன. இவற்றில் ஐந்து மணல் திட்டுகள், இந்திய கடல் எல்லைக்குள் அமைந்துள்ளன. ஏனையவை, இலங்கை கடல்...

மும்பை விமான நிலையத்தில் வைத்து இரு இலங்கையர்கள் கைது

மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் 21 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் இல்லாதல் பணம் கொண்டு வந்ததாக இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இந்த...

குடியரசு தின கொண்டாட்டம்!! மெரினாவில் கோலாகலம்!!

இந்திய நாட்டின் 68வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் தேசியக் கொடியை ஏற்றினார். முப்படை அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றார். குடியரசு தினத்தன்று காமராஜர் சாலை காந்தி சிலை அருகே ஆளுநர் கொடியேற்றுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர்ராவ் தமிழக ஆளுநராக கூடுதல்...

தமிழகத்தில் மார்ச் முதல் பெப்சி, கோக் விற்கப்படாது!

தமிழகத்தில் மார்ச் 1 முதல் பெப்சி, கோக் விற்கப்படாது என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர். நேற்று முன்தினம் இரவு ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசர...

குடிசை, வாகனங்களுக்கு தீ வைத்த போலீசார்!

ஜல்லிக்கட்டு நடத்த கோரி சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த 7 நாட்களாக மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் சில விஷமிகள் புகுந்ததால் வன்முறை வெறியாட்டமாக மாறியது. மெரீனாவில் அமர்ந்திருந்தவர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டனர். மெரீனாவிற்கு வரும் அனைத்து சாலைகளும் அடைக்கப்பட்டன. இதனையடுத்து சென்னையில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. திருவல்லிக்கேணியில் உள்ள ஐஸ்ஹவுஸ் காவல்நிலையம் தீவைக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில்...

ஜல்லிக்கட்டு போராட்டம் தள்ளிவைப்பு: மெரினா போராட்டக்காரர்கள் 2 மாதம் காத்திருக்க முடிவு

மெரினா போராட்டத்தை தள்ளிவைப்பதாக இளைஞர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இரண்டு அல்லது மூன்று மாதங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். முன்னதாக, மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், மாணவர்களை போலீஸார் திங்கள்கிழமை காலை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதனால் கடலுக்குள் இறங்கி போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தை அறவழியில் தொடர்ந்தனர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று...

பெண்களின் உடைகளை கிழித்த போலீசார்! மாணவர்கள் குற்றச்சாட்டு

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மற்றும் பெண்களை வெளியேற்ற முயன்ற போலீசார் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களின் ஆடைகளை போலீசார் கிழித்ததாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் இயற்ற வலியுறுத்தி சென்னை மெரினாவில் 7வது நாளாக இளைஞர்கள் மற்றும் பெண்கள் என லட்ச க்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்பகுதியில் நேற்று...

மெரினா போராட்டக்களத்தில் உள்ள மாணவர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போலீசார்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில், காவல்துறையினரின் வேண்டுகோளை ஏற்க மறுத்த இளைஞர்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். தற்காலிக தீர்வு தங்களுக்கு வேண்டாம் என்றும் நிரந்தர தீர்வு தான் வேண்டும் என்றும்...

தோற்றுப் போனார் ஓ.பி.எஸ்! வெறும் கையுடன் சென்னை புறப்பட்டார்

அலங்காநல்லூர் கிராம மக்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாலும், ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாலும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் சென்னை திரும்புகிறார். மதுரையில் இருந்து பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட அவர் எதுவும் பலன் தராமல் போனதால் சென்னை புறப்பட்டார். ஜல்லிக்கட்டு இன்று நடைபெறும். வாடி வாசல் திறக்கும், காளைகள் துள்ளிக் குதித்து வரும்...

தமிழக மக்களுக்கு மரியாதையை உரித்தாக்குகிறேன்.. தமிழில் வாழ்த்திய சேவாக்

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு, கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். இரு தினங்கள் முன்பே தமிழர்களின் அறவழி போராட்டம் பாராட்டுக்குறியது என கூறி, ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு, சேவாக் தனது ஆதரவை அளித்திருந்தார். இந்நிலையில் நேற்று தமிழிலேயே, டிவிட் செய்து ஆதரவு தெரிவித்துள்ளார் சேவாக். "அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன். அமைதியை தொடருங்கள்....

ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து ஓடும் : ஓ.பன்னீர்செல்வம்

நாளை அல்லது நாளை மறுநாள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்பட்டு ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக துள்ளிக்குதித்து ஓடும் என்று தில்லியில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி அங்கு ஐந்தாவது நாளாக மாநிலத்தின் பல பகுதிகளில் தீவிரமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு மீதான...

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது: மோடி

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக அரசின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று (வியாழக்கிழமை) டெல்லியில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இலங்கை அகதிகள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்குமாறு, தமிழகத்தில் பரவலாக போராட்டங்களும், மத்திய அரசாங்கத்துக்கு எதிராக எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு முன்னெடுக்கப்படுகின்ற நிலையில், இலங்கை அகதிகளும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம், தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, ஜல்லிக்கட்டு நடத்தக்...

பள்ளிப்பேருந்து மீது லாரி மோதி 24 சிறுவர்கள் பலி

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஈடா மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியைச் சேர்ந்த பேருந்து இன்று காலையில் மாணவர்களுடன் வந்து கொண்டிருந்தது. ஆசாத்பூர் கிராமம் அருகே வரும் போது, திடீரென எதிர்பாரத விதமாக எதிரே வந்த லாரி மீது பேருந்து மோதியதில், பேருந்தில் இருந்த 24க்கும் மேற்பட்ட குழந்தைகள் பரிதாபமாக பலியாயினர். மேலும், பல குழந்தைகள் படுகாயமடைந்ததால்...

இலங்கை அகதி தற்கொலை

இந்தியாவின் இராயனூர் அகதிகள் முகாமில் இலங்கை அகதி குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. கரூர் - ராயனூர் இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர் தர்மாகுமார் (31). இவர் ஒரு பெயிண்டராகும். கடந்த சில நாட்களாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்ததாகவும், இதனால் அடிக்கடி மது அருந்துவதாகவும்...

எழுச்சி பெறும் மாணவர் போராட்டம்! கொந்தளிக்கும் தமிழகம்!!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மாணவர் போராட்டம் வரலாறு காணாத வகையில் எழுச்சி பெற்றுள்ளது. இன்று 3வது நாளாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுவான போராட்டம் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. சென்னை மெரினாவில் தொடங்கிய சிறு போராட்டம் அலங்காநல்லூரில் பரவி தற்போது மீண்டும் சென்னை மூலமாகவே விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி...

யாழ்ப்பாணத்தில் இந்தியா அமைக்கும் 3000 மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில், 3000 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கான உடன்பாட்டில், இந்தியாவும் சிறீலங்காவும் நேற்று கையெழுத்திட்டன. சிறீலங்காவின் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி முன்னிலையில், பதில் இந்தியத் தூதுவர் அரிந்தம் பக்சியும், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதியும் இந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். இந்தத் திட்டத்திற்காக 300 மில்லியன்...

இந்தியாவிற்கு படகில் சென்ற இலங்கையர் கைது

சட்டவிரோதமான முறையில் இலங்கையிலிருந்து படகொன்றில் தமிழகத்தின் தனுஷ்கோடியை அடைந்த இலங்கை இளைஞனை கைதுசெய்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்தனர். மன்னார் மாவட்டம், பேசாலைப் பகுதியைச் சேரந்த 36 வயதுடைய நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Loading posts...

All posts loaded

No more posts