Ad Widget

ஜெயலலிதா நீண்ட நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என மருத்துவமனை அறிவிப்பு

உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நலம் படிப்படியாக மேம்பட்டுவருவதாகவும், அவர் நீண்ட காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை வியாழக்கிழமையன்று மாலையில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து, படிப்படியாக மேம்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கு ஏற்கனவே அளிக்கப்பட்டுவரும்...

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெறவேண்டி அ.தி.மு.க. தொண்டர் தற்கொலை!!

முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பெறவேண்டி ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். கடலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறி வருகிறது. ஆனால் தேவையற்ற வதந்திகள் வெளியாவதால் கட்சியினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைகின்றனர்....
Ad Widget

எல்லை தாண்டுவதால் தான் விரும்பத்தகாத பிரச்சினைகள் ஏற்படுகின்றன!

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் கைதுசெய்யப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்தார். பின்னர் அந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை, ஐதராபாத் இல்லத்தில் வைத்து சந்தித்த ரணில், இலங்கையின் தற்போதைய...

முதல்வர் ஜெயாவின் உடல்நிலை முன்னேற்றம் : மருத்துவமனை வட்டாரம் தகவல்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தேறி வருவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் அப்பல்லோ மருத்துவமனையினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம், 22 ஆம் திகதி முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும் நுரையீரல் பாதிப்புக் காரணமாக அவருக்கு சுவாசிப்பதில் சிரமங்கள் இருந்ததாகவும் கூறப்பட்டது. இதேவேளை முதலவர் ஜெயாவுக்கு சிறப்பு...

போலி ஏ.டி.எம். அட்டைகள் மூலம் பாரிய மோசடியில் ஈடுபட்ட இலங்கையர் கைது

தானியங்கி பணம் வழங்கும் இயந்திரத்தின் (ATM) போலி அட்டைகளைப் பயன்படுத்தி பல நாடுகளில் பணத்தினை கொள்ளையிட்ட இலங்கையர் ஒருவரை தமிழகத்தின் காரைக்குடி பொலிசார் கைதுசெய்துள்ளனர். அவரிடமிருந்து 26 இலட்சம் இந்திய ரூபாய்கள், 25 பவுன் நகை, 48 தானியங்கி பணம் வழங்கும் இயந்திர அட்டைகள், போதை பொருட்கள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. காரைக்குடி கழனிவாசலை சேர்ந்த...

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் கைது!!

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்னிந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஸ்லீப்பர் செல்களாக ஊடுருவி உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐஎஸ் அமைப்பினர், பல்வேறு உலக...

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து புதிய தகவல்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா நலமாக இருப்பதாக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா குணமடைந்து வருவதாகவும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதலே,...

பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை தாக்குதல்

பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக ராணுவ அதிகாரி ரண்பிர் சிங் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தளங்களில் இருந்து புறப்பட்ட விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாகவும், இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாதிகள் முகாமில் பெரும் சேதம் ஏற்பட்டதாக தெரிவித்தார். இந்த திடீர் தாக்குதலில் முகாமில் பயிற்சியில்...

பிளாஸ்டிக் கேன்களை பிடித்தபடி தமிழகத்தை அடைந்த இலங்கையர்கள் இருவர் குறித்து விசாரணை!!

கடலில் பிளாஸ்டிக் கேன்களை பிடித்தபடி தமிழகத்தை அடைந்த இலங்கையர்கள் இருவர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டம், சோழியக்குடி கடல் பகுதியில், தேவிபட்டினம் மரைன் பொலிசார், நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது பிளாஸ்டிக் கேன்களை பிடித்து கரை சேர்ந்த, இருவர் சிக்கினர் என தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. விசாரணையில், அவர்கள்...

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி

முதல் அமைச்சர் ஜெயலலிதா திடீரென உடல் நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையான அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனை சார்பில் இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் நீர்ப்போக்கு காரணமாக...

தமிழகத்தில் ஈழ அகதி தீக்குளிக்க முயற்சி

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக இலங்கை அகதி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 33 வயதான சக்தி மகன் மனோஜ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே தீக்குளிப்பதற்கு முயற்சி செய்துள்ளதாக தமிழக தகவல்கள் குறிப்பிடுகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவிற்கு சென்ற குறித்த ஈழ அகதி ஏலச்சீட்டு நடத்தி...

இராமேஸ்வரம் கடற்பகுதி ஆய்வு செய்யப்பட்டதன் மர்மம் என்ன?

இந்திய மத்திய அரசின் உயர் அதிகாரி திடீரென்று இராமேஸ்வரம் அருகே கடல் ஆய்வு நடத்தியது, குளச்சல் துறைமுகத்திற்கு சாதகமாக அமையும் வகையில் மாற்றுப்பாதையில் சேது சமுத்திர திட்டமா, அல்லது தனுஷ்கோடி, தலைமன்னார் இடையே கடலில் 23 கி.மீ. பாலம் அமைக்கும் திட்ட ஆய்வா என்பது மர்மமாக உள்ளது. இராமேஸ்வரம் தீவு அருகே கடந்த வாரம் கடற்கரை...

“ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை!” போலீஸ் கூறிய தகவலால் புதிய பரபரப்பு

சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது மர்மமான முறையில் மரணமடைந்துள்ள ராம்குமாரின் வக்கீல் ராம்ராஜ், சிறை போலீஸ்காரருடன் பேசிய பேச்சில் ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று அந்த போலீஸ்காரர் கூறியது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறைத் தரப்பு எதையாவது மறைக்க முயல்கிறதா என்ற சந்தேகமும் இதனால் எழுந்துள்ளது. நேற்று நாலரை மணியளவில் ராம்குமார்...

’பிரபாகரனின் கடிதத்தை இப்போது வெளியிட்டது ஏன்? விளக்குகிறார் வைகோ

விடுதலைப் புலிகள்’ இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தை, 28 ஆண்டுகளுக்குப்பிறகு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டார். செப்டம்பர் 15-ம் தேதி, திருச்சியில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், வைகோ அந்தக் கடிதத்தை வெளியிட்டது ஏன்? என்ற கேள்வி அரசியல் பார்வையாளர்கள் தொடங்கி வெகுஜன மக்கள் வரை புரியாத புதிராக...

தண்ணீர் குடிக்கப் போன ராம்குமார் மின்வயரைக் கடித்து தற்கொலை-சிறை வார்டன்

தண்ணீர் குடிக்கப் போவதாக கூறிவிட்டு போன ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தன்னுடைய உடம்பில் மின்சாரத்தைப் பாய்ச்சிக்கொண்டு உயிரிழந்து விட்டதாக சம்பவம் நடந்த போது உடனிருந்த சிறைக்காவலர் கூறியதாக புழல் சிறை வார்டன் கூறியுள்ளார். மின்சாரம் தாக்கியதில் ராம்குமார் தூக்கி வீசப்பட்டதால் உடனிருந்த கைதிகள் யாரும் ராம்குமாரை காப்பற்றவில்லை என்றும் அவர் சிறைவார்டன் தெரிவித்துள்ளார். சுவாதி...

விக்னேஷ் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி

தீக்குளித்து உயிரிழந்த விக்னேஷ் உடலை நாம் தமிழர் கட்சி அலுவலகத்துக்கு கொண்டு செல்ல காவல்துறை அனுமதி வழங்கியது. கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் இளைஞர் விக்னேஷ் தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனை முடிந்ததும் விக்னேஷின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்னார்குடி கொண்டு செல்வதற்காக...

பெங்களூருவில் இயல்பு நிலை திரும்பியது!

காவிரி பிரச்சனையில் போர்க்களமாக காட்சியளிக்கும் பெங்களூரு நகரம் இன்று இயல்பு நிலைமைக்கு திரும்பியது. பெங்களூருவில் அரசு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இயங்குகின்றன. இருப்பினும் பல தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. அவ்வளவுதான் பெங்களூரு நகரம் பற்றி எரிந்தது. ஒரே நாளில் தமிழக பேருந்துகள், லாரிகள் 100க்கும்...

பேரறிவாளன் மீது தாக்குதல்: அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை சக கைதி ஒருவர் தாக்கியுள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை, செவ்வாய்க்கிழமையன்று காலையில் சக கைதியான ராஜேஷ் கண்ணா என்பவர் இரும்பு பைப் ஒன்றினால் தாக்கியதாக கூறப்படுகிறது. கொலை மற்றும் கடத்தில்...

பேரறிவாளனை கொலை செய்ய முயற்சி!!

வேலூர் சிறையில் பேரறிவாளனை கொலை செய்ய முயற்சி நடந்திருப்பதால் அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வேல்முருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: ராஜிவ் வழக்கில் வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளனை இன்று சக கைதி ராஜேஷ் என்பவர் இரும்புக் கம்பியால்...

இலங்கை அகதி முகாமில் மர்ம கும்பல் தாக்குதல்

புதுக்கோட்டை அருகே உள்ள தோப்புக்கொல்லை ஈழத்து தமிழர் அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்ட இலங்கை அகதிக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முகாமில் மர்ம நபர்கள் அரிவாளுடன் உள்ளே நுழைந்து முகாம் தலைவர் கமலநாதன் உள்ளிட்ட 5 பேரை தாக்கியுள்ளனர். இதில் 5 பேர் காயமடைந்து புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
Loading posts...

All posts loaded

No more posts