காணாமலாக்கப்பட்டோர் மரணிக்கவில்லை – மஹிந்த அணி

காணாமலாக்கப்பட்டோர் மரணிக்கவில்லை என மஹிந்த அணி தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘காணாமலாக்கபட்டோர் என்று குறிப்பிடுபவர்கள் உண்மையில் காணாமலாக்க்கப்படவும், மரணிக்கவும் இல்லை. காணமலாக்கப்பட்டோர் அலுவலகம் அரசியல் தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டது...

யாழில் தொடர் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று யாழ்.சங்கிலியன் பூங்காவில் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போது பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதுடன், புதிய நிர்வாகமும் தெரிவு செய்யப்பட்டது. இந்தநிலையில் குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின்...
Ad Widget

பொது அமைப்புக்களுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு!!

எழுக தமிழ் தொடர்பாக வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுடனான கலந்துரையாடலுக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. போர்க்குற்ற விசாரணையை நடாத்து, அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை செய், வடக்கு- கிழக்கில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் குடியமர்த்து போன்ற...

கோதுமை மாவின் விலை அதிகரிப்புடன் பாண் விலையும் கூடியது

கோதுமை மாவின் விலையை இன்று முதல் பிறிமா நிறுவனம் அதிகரித்துள்ளது. இதன்படி கோதுமை மாவின் ஒரு கிலோவின் விலை 5.50 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த அதிகரிப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென நுகர்வோர் அதிகார சபை அறிவிப்பு விடுத்துள்ளது. இதேவேளை, இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் நிறையுடைய பாண் விலையை 2 ரூபாயினால் அதிகரிக்கவுள்ளதாக...

வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டோர் போராட்டம்!

வவுனியாவில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாளுக்கு எதிராக காணாமலாக்கப்பட்டோரின் போராட்டம் இடம்பெற்றுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட எவரும் உயிருடன் இல்லை என வவுனுயாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் வரதராஜப்பெருமாள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வவுனியாவில் கடந்த 930ஆவது நாட்களாக போராட்டம் மேற்கொண்டு வரும்...

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் யாரும் உயிருடன் இல்லை!! கோட்டாவை ஆதரிப்பதே ஒரே வழி!!!- வரதராஜபெருமாள்

சர்வதேச விசாரணை என எதுவும் நடக்கப்போவதில்லை. தமிழர்கள் கோட்டாபயவை ஆதரிக்க வேண்டிய தேவையுள்ளது எனவும் வடக்கு – கிழக்கு இணைந்த மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும், தமிழர் சமூக ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமாகிய வரதராஜபெருமாள் தெரிவித்துள்ளார். வவுனியா விருந்தினர் விடுதி ஓன்றில் நேற்று முன்தினம் (4) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்....

பலாலி விமான நிலைய தொழில்வாய்ப்பில் வடக்கிற்கு முக்கியத்துவம் – அமைச்சர் அர்ஜுன ரணதுங்க உறுதி

பலாலி விமான நிலையத்துடன் தொடர்புபட்ட தொழில்வாய்ப்புக்களை வழங்கும் பொழுது வடமாகாணத்தில் உள்ளவர்களுக்கு கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். அத்துடன், பலாலியில் இருந்து இந்தியா வரையில் ஆரம்பிக்கப்படவுள்ள விமான சேவைகளை வழங்குவதில் உள்ளூர் நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பலாலி விமான நிலையத்தின்...

கோண்டாவிலில் வீடு புகுந்து வாள்வெட்டுக் கும்பல் அடாவடி!!

கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. கோண்டாவில் உடும்பிராய் மேற்கு வீட்டிற்குள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இரண்டு மோட்டார்...

அரச வேலை பெற்றுத்தருவதாக இளம் பெண்களிடம் சேட்டை செய்த வலி. மேற்கு பிரதேச சபை உறுப்பினர் சிக்கினார்!!

அரச வேலை பெற்றுத் தருவதாகக் கூறி இளம் பெண்களை அழைத்து தகாத முறையில் நடந்துகொண்ட அரசியல்வாதி சித்தன்கேணி இளைஞர்களிடம் கையும் மெய்யுமாக சிக்கிக்கொண்டார். வலி. மேற்கு பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரே இவ்வாறு பிடிபட்டார். அவர் இளைஞர்களால் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்றது. ஐக்கிய தேசியக்...

தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கும் யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர்கள்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று வெள்ளிக்கிழமை(06) நண்பகல்-12 மணி முதல் அரைநாள் தொழிற்சங்கப் போராட்டத்தையும், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்படி போராட்டங்களுக்கான அழைப்பினை விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் தவிர்ந்த சகல கல்விசாரா ஊழியர்களையும், இணைந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்...

அர்ஜுன ரணதுங்க தலைமையிலான குழுவினர் பலாலி விஜயம்!!

பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பில் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இன்று நேரில் ஆராய்ந்தார். அமைச்சர் தலைமையில் 80 பேர் கொண்ட குழுவினர் இதுதொடர்பில் ஆராய்ந்தனர். யாழ்ப்பாணம் பலாலி விமானத் தளம் பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பலாலி பிராந்திய...

வடக்கு, கிழக்கில் பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது – தமிழ் மக்கள் பேரவை

வடக்கு, கிழக்கு பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பௌத்தர்களின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை குற்றம் சுமத்தியுள்ளது. தமிழ் மக்கள் பேரவை நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக சுட்டிக்காட்டியுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ...

நல்லாட்சி அரசாங்கத்தின் பிளவே புதிய அரசியலமைப்பு முடங்க காரணம் – சுமந்திரன்

நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட பிளவே புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடங்குவதற்கு காரணமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த செவ்வியில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முடக்கப்பட்டதற்கான காரணம் என்னவென கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “2015ஆம் ஆண்டு தேர்தலுக்குப்...

சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் கைவிடப்பட்டது!

வடக்கு ஆளுநர் சுரேன் ராகவனின் உறுதிமொழியையடுத்து சுகாதாரத் தொண்டர்களின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட சுகாதாரத் தொண்டர்களுக்கு இன்று ஆளுநர் தலைமையில் நியமனங்கள் வழங்கப்படவிருந்தன. இந்நிலையில் சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனத்தை மீள்பரிசீலணை செய்யுமாறு கோரி புறக்கணிக்கப்பட்ட சுகாதாரத் தொண்டர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதனையடுத்து நேர்முகத்தேர்வுக்கு தோற்றியும் இந்த நியமனம் தொடர்பாக பெயர் குறிப்பிடப்படாதவர்களின் மாவட்ட பிரதிநிதிகள்...

மாவை சேனாதிராஜாவை கண்டதும் தீ குளிக்க முயற்சி செய்த நபரால் பரபரப்பு!!

யாழ்.சாவகச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சுகாதாரத் தொண்டர்களை நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேரில் சென்று சந்தித்துள்ளார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒருவர் தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்ட முயற்சித்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியுள்ளது. மேலும் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், நியமனம் பெறவுள்ள சுகாதாரத்...

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இருவர் மீது வாள்வெட்டு

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. பிடாரி...

முறிகண்டி விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் உயிரிழப்பு!

முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் புலம்பெயர்ந்த பிரித்தானிய தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய ஆதரவாளர் என அறியப்படுகிறது. முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முறிகண்டி யாழ். பல்கலைக்கழக வளாகச் சந்தி அருகில நேற்று (புதன்கிழமை) மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தென்னிலங்கையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும்...

கோட்டா தேர்தலில் போட்டியிட கூட்டமைப்பே காரணம் – கஜேந்திரன்

இறுதி யுத்தத்தின்போது தமிழர்களை இன அழிப்புச் செய்த கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதான காரணம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய...

வேலையற்ற பட்டதாரிகள் யாழில் போராட்டம்!

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்குமாறு வலியுறுத்தி போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபைக்கு முன்பாக அவர்கள் இன்று (புதன்கிழமை) காலை இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாகாண ஆளுநரின் பொதுமக்கள் தினம் கைதடியில் அமைந்துள்ள மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நடைபெற்ற நிலையிலேயே, இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகம் முன்பாக...

தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வவுனியாவுக்கு விஜயம்!

தென்னிந்தியப் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வவுனியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.அங்கு அவர் வவுனியா பறண்நட்டகல் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை கண் வைத்தியசாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். லண்டன் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பின் ஸ்தாபகர் வேலாயுதம் சர்வேஸ்வரனின் தலைமையில் 150 மில்லியன் ரூபாய் நிதியில் இந்த கண் வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த அதன் நிறுவுனர்...
Loading posts...

All posts loaded

No more posts