Ad Widget

தொழிற்சங்கப் போராட்டத்தில் குதிக்கும் யாழ். பல்கலை கல்விசாரா ஊழியர்கள்

யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இன்று வெள்ளிக்கிழமை(06) நண்பகல்-12 மணி முதல் அரைநாள் தொழிற்சங்கப் போராட்டத்தையும், கவனயீர்ப்புப் போராட்டத்தையும் முன்னெடுக்கவுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் மேற்படி போராட்டங்களுக்கான அழைப்பினை விடுத்துள்ளது.

இந்தப் போராட்டத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் தவிர்ந்த சகல கல்விசாரா ஊழியர்களையும், இணைந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கேட்டுள்ளது.

Related Posts