Ad Widget

தென்னிந்தியப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வவுனியாவுக்கு விஜயம்!

தென்னிந்தியப் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வவுனியாவுக்கு விஜயம் செய்துள்ளார்.அங்கு அவர் வவுனியா பறண்நட்டகல் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை கண் வைத்தியசாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.

லண்டன் புனர்வாழ்வும் புதுவாழ்வும் அமைப்பின் ஸ்தாபகர் வேலாயுதம் சர்வேஸ்வரனின் தலைமையில் 150 மில்லியன் ரூபாய் நிதியில் இந்த கண் வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.

இதன்போது கருத்து தெரிவித்த அதன் நிறுவுனர் சர்வேஸ்வரன், வன்னி மாவட்டத்தில் உள்ள மூவின மக்களும் உயர்தரமான கண் சிகிச்சையினை மேற்கொள்வதற்கு வசதியாக இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலை கட்டடம் அமைக்கப்பட்ட பின்னர் 50 வீதம் இலவசமாக உயர்தர கண் சிகிச்சைகள் வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் மாவட்ட அரச அதிபர் எம்.கனீபா, பிரதேச செயலாளர் கா.உதயராஜா, முன்னாள் மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், பிரதி பொலிஸ்மா அதிபர் அபேரட்ண, உபநகரபிதா சு.குமாரசாமி, கிராமமக்கள், பொது அமைப்பினர் என பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts