ஆயுதங்களைக் கைவிட்டு ஓடிய ரஷ்ய வீரர்கள் – 6 மாத கால போரில் திருப்புமுனை

உக்ரேனிய எதிர்த்தாக்குதல் காரணமாக ரஷ்ய வீரர்கள் மிக வேகமாக தப்பி ஓடுகிறார்கள் என்று உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். போர் தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியுள்ள நிலையில், நாட்டின் கிழக்கில் உக்ரைன் படைகளின் கணிசமான வெற்றிகள் ரஷ்யாவைச் சுற்றி வளைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக பிராந்தியத்தில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெற நிர்ப்பந்தித்தன. உக்ரேனிய உள்நாட்டு விவகார அமைச்சின்...

மகசின் சிறையில் உண்ணாவிரதமிருக்கும் 13 அரசியல் கைதிகள் குறித்து சட்டமா அதிபருடன் பேச்சு

மகசின் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக தமது விடுதலையை முன்வைத்து உண்ணாவிரதமிருந்துவரும் 13 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சட்டமா அதிபருடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர். சந்திப்பின்போது, 13 அரசியல் கைதிகள் 2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர்...
Ad Widget

திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் இடம்பெறும் செயற்பாடுகள் குறித்து டக்ளஸ் அமைச்சரவையில் பிரஸ்தாபிப்பு

வரலாற்று சிறப்புமிக்க திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியில் ஆலயத்தின் புனிதத்தினை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதான செய்திகள் தொடர்பாக இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். கடற்றொழில் அமைச்சரின் கருத்தினை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி,...

அலி சப்ரியின் கருத்துக்கு கடும் கண்டனம்!

ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியின் கருத்துக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதோடு தமக்கு சர்வதேச விசாரணையே தேவை எனவும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல்...

அரசியல் தீர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!

வடக்கு – கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டத்தின் 44 நாளாவது நாள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு – கிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுத்தர வேண்டும் எனக் கோரிய குறித்த போராட்டம் மன்னர் மாவட்டத்தில் ஆரம்பமாகி 44 ஆவது நாளான இன்று கிளிநொச்சி கோரக்கன்கட்டு பிரதேசத்தில் இடம்பெற்றது. வடக்கு...

இறக்குமதி தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும்!

அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக சில இறக்குமதிகளுக்கு விதிக்கப்பட்ட தடை இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை திருத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போது, ​​அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை தெரிவித்தார். தற்காலிக நடவடிக்கையாக சில பொருட்களின் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ்...

மலசல கூடம் பராமரிப்பி இன்றி, பாவனைக்கு உதவாத நிலையில்!!

நெல்லியடி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள மலசல கூடம் பராமரிப்பின்றி, பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுவதனால் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறித்த பேருந்து நிலையத்திற்கு பேருந்துக்களில் நீண்ட தூரங்களில் இருந்து பலர் வருகை தருகின்றனர். மலசல கூடம் பராமரிப்பின்றி பாவனைக்கு உதவாத நிலையில் உள்ளமையால் இயற்கை உபாதைகளுக்கு உள்ளாவோர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இது...

ஆசியக் கிண்ணத்தை சுவீகரித்த கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகள் நாட்டை வந்தடைந்தன!

ஆறாவது தடவையாக ஆசியக் கோப்பையை சுவீகரித்த இலங்கை கிரிக்கட் வீரர்களும், ஆறாவது தடவையாக ஆசிய வலைப்பந்தாட்டத்தில் ராணியாக முடிசூடிய இலங்கை வலைப்பந்தாட்ட வீரர்களும் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்தனர். இவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் இரண்டு விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாட்டை வந்தடைந்த இரு குழுக்களும்...

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என எச்சரிக்கை!

பலவீனமான விவசாய உற்பத்தி, விலைவாசி உயர்வு மற்றும் தொடரும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத் திட்டமும் எச்சரித்துள்ளன. 6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், போதுமான உயிர்காப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலைமை...

இலங்கையில் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறை!

இலங்கையில் எதிர்வரும் 19ஆம் திகதி விசேட அரசாங்க விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கைக் குறிக்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பொது நிர்வாகம் மற்றும் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது. என்ற போதும், அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு குறித்த அரசாங்க விடுமுறை தினம் தடையாக இருக்கமாட்டாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....

ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவிய உக்ரைன் இராணுவம்!!

உக்ரைனின் இராணுவம் வடக்கில் உள்ள கிராமங்களை கைப்பற்றி ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவியதாக கெர்கீவ் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் உயர்மட்ட அதிகாரி விட்ராலி கான்செவ் தெரிவித்துள்ளார். அத்துடன் உக்ரைன் படைகள் கைப்பற்றிய பகுதிகளில் பதில் தாக்குதல்களை மேற்கொண்டுவருவதாக கூறியுள்ள ரஷ்யா, கெர்கீவ் பிராந்தியத்திலுள்ள இரண்டு நகரங்களில் இருந்து தமது படைகள் பின்வாங்கியுள்ளதையும் உறுதி செய்துள்ளது. உக்ரைனில் கடந்த...

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா.பதில் ஆணையாளர்

நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார். ஐநா மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தண்டனையிலிருந்து விடுபடுவதை எதிர்த்துப் போராடுவதற்கான முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான ஆழமான நிறுவன,...

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக்கோரி நாடு தழுவிய கையெழுத்து போராட்டம் இன்றும் தொடர்கிறது

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை நீக்க கோரி நாடு தழுவிய ஊர்தி வழி கையெழுத்து போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம், மாவட்டபுரம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (12) வல்லை வெளி முனீஸ்வரர் ஆலயம் முன்பாக தேங்காய் உடைத்து ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியும், சர்வஜன...

8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!!

இந்த வருடத்தின் கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கருத்து தெரிவிக்கையில், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டில் வெளியேறி உள்ளார்கள். சுகாதார துறையில்...

மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரேமலால் ஜயசேகர இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு!

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக பிரேமலால் ஜயசேகர பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பிரேமலால் ஜயசேகர பொதுதேர்தலில் வெற்றிபெற்றதை அடுத்து விடுதலை செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேறிருந்தார். 2015 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றின் போது நபரொருவரை சுட்டுக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றங்களுங்காக பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு...

கிளிநொச்சியில் தற்கொலைகள் அதிகரிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் என கடந்த ஆய்வுகளில் இனங்கான ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார் . உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் நடைபெற்றுள்ளது. குறித்த நிகழ்வில் கலந்து...

யாழில் அண்ணன் செய்த செயலால் தங்கை தற்கொலை!

போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால் மனவிரக்திக்கு உள்ளாகிய இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 20 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது....

51 ஆவது ஜெனிவா கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத் தொடர் இன்று (12) ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்றையதினம் இலங்கை தொடர்பான விவாதமும் நடைபெறவுள்ளது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்று இலங்கை தொடர்பான விபரமான எழுத்து மூல அறிக்கையை மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் வெளியிடவுள்ளதுடன் அதன் சாரம்சத்தையும் வாசிப்பார். இலங்கை அரசாங்த்தை பிரதிநிதித்துவப்படுத்தி...

திருக்கோணேஸ்வர ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவது தொடர்பாக யாழில் விசேட சந்திப்பு!

வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. யாழ். – நல்லூரில் உள்ள இந்து மாமன்றனத்தின் அலுவலககத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்த விடயம் தொடர்பாக...

45 இலட்சம் பேர் தொழிலை இழக்கும் அபாயம்!!

அரச மற்றும் தனியார் வங்கிகள் கடன் மற்றும் வட்டி வீதங்களில் சலுகைகளை வழங்காத நிலையில் பாரியளவிலான நபர்கள் தொழிலை இழக்க நேரிடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு வணிக பாதுகாப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சுமார் 45 இலட்சம் பேர் இவ்வாறு தொழிலை இழக்க நேரிடுமென உள்நாட்டு வணிக பாதுகாப்புச் சபை தெரிவித்துள்ளது....
Loading posts...

All posts loaded

No more posts