Ad Widget

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என எச்சரிக்கை!

பலவீனமான விவசாய உற்பத்தி, விலைவாசி உயர்வு மற்றும் தொடரும் பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என உணவு மற்றும் விவசாய அமைப்பும் உலக உணவுத் திட்டமும் எச்சரித்துள்ளன.

6.3 மில்லியன் மக்கள் மிதமான மற்றும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாகவும், போதுமான உயிர்காப்பு மற்றும் வாழ்வாதார உதவிகள் வழங்கப்படாவிட்டால் அவர்களின் நிலைமை மோசமடையக்கூடும் என்றும் கூறியுள்ளன.

ஏறக்குறைய 30% மக்கள் ஏற்கனவே உணவுப் பாதுகாப்பின்றி உள்ளனர், எனவே அவசர உதவி தாமதமானால், இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை மோசமடையக்கூடும் என இலங்கை உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிரதிநிதி விமலேந்திர சரண் கூறியுள்ளார்.

ஏறக்குறைய இரண்டு பருவகாலமாக பயிர்ச்செய்கை தோல்வியடைந்துள்ளமை காரணமாக இலங்கையில் உணவு உற்பத்தி கிட்டத்தட்ட 50% குறைந்துள்ளது மற்றும் அன்னிய செலாவணி நெருக்கடி காரணமாக உணவு மற்றும் தானியங்களின் இறக்குமதியும் குறைந்துள்ளது.

Related Posts