Ad Widget

8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!!

இந்த வருடத்தின் கடந்த 8 மாதங்களில் சுமார் 500 இலங்கை வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கருத்து தெரிவிக்கையில்,

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 8 மாதங்களில் 500 வைத்தியர்கள் நாட்டில் வெளியேறி உள்ளார்கள். சுகாதார துறையில் இது ஒரு மோசமான நிலையாகும்.

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டில் இருந்து வெளியேறிய வைத்தியர்கள் இலங்கை சுகாதார அமைச்சுக்கு தெரிவிக்காமல் நாட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

மேலும் கடந்த மாதங்களில் 50 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் இராஜினமாக்களை அனுப்பியுள்ளார்கள்.

மருத்துவர்களின் தொடர்ச்சியான வெளியேற்றத்தினால் நாட்டின் சுகாதாரத்துறை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களையும் கடுமையாக பாதித்திருக்கிறது என்றார்.

Related Posts