கிழிஞ்ச செருப்புடன் சீன அதிபரைச் சந்திக்க வந்த அமைச்சர்

இலங்கை அதிபர் ராஜபக்சே முன்னிலையில் சீன அதிபருடன் இலங்கை அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட வந்த அமைச்சர், அதுவும் நாட்டு கலாச்சார அமைச்சர், பிய்ந்து போன ஷூவுடன் வந்தது பெரும் களேபரத்தை ஏற்படுத்தியுள்ளது. (more…)

9 ஆண்டுகள் சிறையில் வாடிய தமிழ் பெண் : வருத்தம் தெரிவித்த நீதிமன்றம்

தமிழ்ப் பெண் ஒருவருக்கு தவறுதலாக ஆயுள் தண்டனை விதித்தமைக்காக இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் வருந்துவதாகத் தெரிவித்துள்ளது. (more…)
Ad Widget

வடமாகாண தொழிற்சந்தை அடுத்த மாதத்தில்

வடமாகாணத்தில் தொழில் சந்தையொன்றை அடுத்த மாதம் 7ம்திகதி யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடாத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் முகாமையாளர் கோடீஸ்வரன் தெரிவித்தார். (more…)

நாம் நண்பர்கள் ஏற்பாட்டில் யாழில் மென்பந்து கிரிக்கெட்!

வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நிதி திரட்டும் நோக்குடன் 'நாம் நண்பர்கள்' அமைப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் எதிர்வரும் சனியன்று காலை முதல் நடத்தும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் பல கழக அணிகள் மோதவிருக்கின்றன. (more…)

வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணை

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இரகசிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.பி.எல்.துஸ்மந்த, நேற்று புதன்கிழமை (17) தெரிவித்தார். (more…)

வயல்களிற்கு குப்பை ஏற்றுவோருக்கு பொலிசாரின் அறிவுரை

சாவகச்சேரி தெற்கு பிரதேச வயல்களிற்கு குப்பை ஏற்றிச்செல்லும் உழவு இயந்திரங்களை பொலிசார் வழி மறித்து வைத்திருப்பதாக நெற் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர். (more…)

விலை குறைப்பு: மக்கள் விரோதச் செயற்பாடுகளை மூடி மறைக்கும் உபாயம்

அரசின் கடந்த கால மக்கள் விரோதச் செயற்பாடுகளை மூடி மறைக்கும் உபாயம் தான் எரிபொருள், மின்சாரக் கட்டணங்களின் விலை குறைப்பு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொது செயலாளர் மாவை சேனாதிராசா குற்றஞ்சாட்டியுள்ளார். (more…)

நாம் ஒட்டுண்ணிகளாக மாறியிருப்பதே மூல காரணம்! – பொ.ஐங்கரநேசன்

பூமித்தாயுடன் கொடுத்து வாங்கும் உறவைப் பேணி வாழ்ந்த நாம், இன்று பூமித்தாய்க்கு எதனையுமே வழங்காமல் அவளுடலில் இருந்து எல்லாவற்றையுமே உறிஞ்சும் ஒட்டுண்ணிகளாக மாறியிருக்கிறோம், இதுவே இன்றைய சூழல் அனர்த்தங்களுக்கெல்லாம் மூல காரணம் (more…)

பளுதூக்கும் போட்டியில் பதக்கங்கள் வென்ற மாணவர்கள் கௌரவிப்பு!

இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் பதங்கங்களை வென்ற யாழ்.இந்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் வேம்படி மகளிர் கல்லூரி மாணவி ஆகியோரைக் கௌரவிக்கும் நிகழ்வுகள் நேற்று அந்தந்தப் பாடசாலைகளில் இடம்பெற்றன. (more…)

பொலிஸார் விதித்த ‘புதிய தண்டம்’

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன சாரதிகளுக்கு தண்டபணச்சீட்டு பதிலாக நாடகம் பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டை வழங்கிய சம்பவமொன்று கம்பஹா மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் புதன்கிழமை (17) இடம்பெற்றுள்ளது. (more…)

மாவை எம்.பிக்கு வரவேற்பு விழா

காங்கேசன்துறை தொகுதி தமிழரசுக் கட்சி கிளையின் ஏற்பாட்டில் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவுசெய்யப்பட்ட மாவை சேனாதிராஜாவிற்கு வரவேற்பு விழா நடாத்தப்பட்டது. (more…)

காரைநகர் சிறுமி வன்புணர்வு; நவம்பர் 4 மீண்டும் விசாரணை

காரைநகர் சிறுமி வன்புணர் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. (more…)

பாடத்தெரிவுக்கு பல்கலை அனுமதி

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் தாம் விரும்பிய துறைகளில் பாடங்களை கற்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதாக கலைப்பீட பதில் பீடாதிபதி ப.புஸ்பரட்ணம் தெரிவித்தர். (more…)

யாழில் ஐஸ்கிறீமால் ஆபத்து

யாழ்.மாவட்ட முன்னணியிலுள்ள மூன்று பிரபல ஐஸ்கிறீம் உற்பத்தி நிறுவனங்களின் மலத்தொற்று காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (more…)

மைன் ஹூன் ரஜினிகாந்த் படத்திற்கு எதிராக நடிகர் ரஜினிகாந்த் வழக்கு

இந்தியில் வெளிவரவிருக்கும் மை ஹூன் ரஜினிகாந்த் படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவின் பேரில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. (more…)

என் உடல் நிலையை வைத்து நாடகம்: வருத்தங்களுடன் கமல்

எனது உடல் நிலையை வைத்து நாடகமாட நினைத்தவர்களை ஏமாற்றியதற்காக நான் வருந்துகிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். (more…)

மகேஷ் பாபு, அமீர்கானுக்கு சூர்யா சவால்

உலகம் முழுவதும் ஐஸ் பக்கெட் குளியல் சவால் புகழ்பெற்றது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தது. (more…)

கேட்பாரின்றிக் கிடந்த மோட்டார் சைக்கிள் மீட்பு

திருநெல்வேலி - கேணியடி வைரவர் ஆலயத்திற்கு அருகில் அநாதரவாகக் கிடந்த மோட்டார் சைக்கிள் ஒன்றினை பொலிசார் நேற்று இரவு மீட்டுள்ளனர். (more…)

நோர்வே தூதுவர் – வட மாகாண ஆளுநர் சந்திப்பு!

யாழ்ப்பாணம் விஜயத்தை மேற்கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரேட் லோட்சன் வட மாகாண ஆளுநர் ஜி ஏ சந்திரசிறியை இன்று(17) பி.ப 12 மணியளவில் சந்தித்தார். வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. (more…)

புதிய மின் கட்டணக் குறைப்பு அமுலாகப் போவது இப்படித்தான்!

மாதாந்தம் பெறப்படும் கட்டணப் பட்டியலின் அடிப்படையிலேயே 25 வீத மின்சாரக் கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் டப்ளியூ.பி.கனேகல தெரிவித்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts