யாழ்ப்பாணம் விஜயத்தை மேற்கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரேட் லோட்சன் வட மாகாண ஆளுநர் ஜி ஏ சந்திரசிறியை இன்று(17) பி.ப 12 மணியளவில் சந்தித்தார். வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
வட மாகாணத்தில் அரசாங்கத்தினால் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரேட் லோட்சனும் வட மாகாண ஆளுநரும் கலந்துரையாடினர்.