கண் சத்திரசிகிச்சைக்காக கண்டிக்குச் செல்லும் யாழ்.வாசிகள்

யாழ்ப்பாணத்தில் கண் சத்திரசிகிச்சை போதிய திருப்தியில்லாமல் இருப்பதால் பெருமளவான மக்கள் கண்டிக்குச் செல்கின்ற நிலைமை அதிகரித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இதர தனியார் வைத்தியசாலைகளிலும் கண் சிகிச்சை மற்றும் கண் சத்திரசிகிச்சை என்பன இடம்பெறுகின்றன. எனினும், ஒப்பீட்டளவில் யாழ்ப்பாணத்தில் கண் சத்திரசிகிச்சை நிபுணர்கள் குறைவாகவுள்ளனர். இதனால், யாழ்ப்பாணத்தில் கண் சத்திரசிகிச்சை செய்பவர்கள் பலர் கண்டியிலுள்ள தனியார்...

வீட்டுக்குள்ளேயே நிர்வாண போல் நடன கிளப் நடத்தும் கிறிஸ் கெய்ல்

டி20 கிரிக்கெட் அல்லது சிக்ஸ் என்றாலே நமக்கு விரைவில் ஞாபகம் வரும் வீரர் வெஸ்ட்இண்டீசின் ஜமைக்கா வீரர் கிறிஸ் கெய்ல்தான். இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். தொடரில் இவர் பந்துகளை சிக்சராக பறக்க விடுவதை பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். மைதானத்தில் எவ்வளவு ஆக்ரோஷமாக விளையாடுகிறாரோ, அதேபோல் எதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் மனிதரும் இவர்தான். எந்தவொரு நேரத்திலும் தனது...
Ad Widget

நான்கு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கை அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நான்கு கைச்சாத்திடப்பட்டுள்ளன. இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் முன்னிலையிலேயே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சார்க் வலயத்தில் செய்மதி பரிமாற்றும் வேலைத்திட்டம், வவுனியா மாவட்ட வைத்தியசாலையை புனரமைக்கும் வேலைத்திட்டம், சிறிய அபிவிருத்திக்கு உதவி வழங்குதல், இந்தியாவில் 17 மாநிலங்களில்...

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களை மீள் மின்னேற்றலாம்

வாகனங்களை மீள் மின்னேற்றம் செய்வதற்கு அவசியமான உபகரணங்கள் மற்றும் மின்னேற்றல் கட்டமைப்பை அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாக கனியவள மற்றும் எரிவாயுத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். மின் பாவனையை மாத்திரம் கொண்ட வாகனங்களுக்கு தற்போது அதிக கேள்வி நிலவுவதால் இந்த திட்டம் அமுல்படுத்தவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். மின்னை மீள் நிரப்பும்...

மோடியை சந்தித்தார் ரணில்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, டெல்லியில் உள்ள ஐதராபாத் ஹவுசில் அந்த நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். மேலும் முன்னதாக அவர் டெல்லியில் இந்திய மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக...

தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி – திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்!

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வேறு சிறை முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 15 பேர் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி முகாம் சிறைகளில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் முகாம் சிறையில் உள்ள யுகப்பிரியன்...

கைதடியில் விபத்து இளைஞர் பலி! மற்றொருவர் படுகாயம்!!

வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மதிலுடன் மோதியதில் அதனை செலுத்தி வந்தவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். கைதடிச் சந்திக்கு அண்மையாக இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் கைதடியை சேர்ந்தவரான சிவலிங்கம் தீபன் (வயது 31) என்பவர் மரணமானார். ஜெகதீஸ்வரன் (வயது 31) என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

தமிழகத்தில் கரையொதுங்கிய மர்மப் படகு – இலங்கையைச் சேர்ந்ததா?

தமிழகத்தின் நாகை மாவட்டம் - வேதாரண்யத்தில் ஆளில்லா கண்ணாடியிழப் படகு ஒன்று கரை ஒதுங்கியது இன்று காலை தெரியவந்தது. பதிவு எண் போன்ற விபரங்கள் இல்லாத இந்த படகு இலங்கையைச் சேர்ந்ததாக இருக்கும் என கருதப்படுகிறது. வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரையில் இஞ்சின் பொறுத்தப்பட்ட நிலையில் ஒதுங்கிய இந்த படகை, கைப்பற்றிய கடலோரக் காவல் நிலைய பொலிசார்...

யாழ் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் கையெழுத்துப் போராட்டம்

இன்று செவ்வாய்க்கிழமை 15ம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைப்பீடத்தில் சர்வதேச விசாரணையை வலியூறுத்தியூம் உள்ளக விசாரணைப் பொறிமுறையை நிராகரித்தும் கையழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இப்போராட்டத்தில் பெருமளவான மாணவர்கள் ஊழியர்கள் மற்றும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு கையொப்பங்களை இட்டனர். மேலும் படங்களுக்கு..

ஈரானிய சினிமாவுக்கு இசையமைத்ததால் இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு… ஏ.ஆர்.ரஹ்மான் விளக்கம்

முகமது நபி பெயர் சூட்டப்பட்ட ஈரானிய படத்திற்கு இசையமைத்தால் பத்வா வெளியிடப்பட்டதையடுத்து, இது குறித்து அப்படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமான் விளக்கமளித்துள்ளார். முஹம்மது நபியின் பெயரை தலைப்பாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஈரானிய மொழி திரைப்படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு எதிராக பத்வா எனப்படும் மார்க்கத்தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக மும்பையைச் சேர்ந்த சன்னி பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். ஈரான் மொழி...

குடிநீர் இல்லாமல் 2,000 பாடசாலைகள்

இலங்கை முழுவதும் சுமார் 2,000 பாடசாலைகள் சுத்தமான குடிநீர் இல்லாத நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், நேற்று திங்கட்கிழமை(14) தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவிதமான மலசலகூட வசதிகள் இன்றி சுமார் 500 பாடசாலைகள் உள்ளதுடன், ஒரு மலசலகூடத்துடன் மாத்திரம் 2,000 பாடசாலைகள் உள்ளதாகவும் அவர் கூறினார். கணினி, ஆய்வுக்கூடம், நூலகம் இல்லதாக நிலையில்...

U-turn இல்லை

கடந்த காலங்களில் வழங்கப்பட்ட நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் அனுபவங்களையும் 'யு டேர்ண்'களையும் வைத்து, தம்மை எடைபோட வேண்டாமென, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமவீர கோரிக்கை விடுத்துள்ளார். ஜெனீவாவில் நேற்று ஆரம்பமான, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது அமர்வில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்வாண்டுமார்ச் மாதத்தில் இடம்பெற்ற 28ஆவது மனித...

சர்வதேச விசாரணையை வலியூறுத்தி நடைபெற்ற நடைபயணத்தின் இறுதி நிகழ்வு

சர்வதேச விசாரணையை வலியூறுத்தி நடைபெற்ற நடைபயணத்தின் இறுதி நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

கோப்பாயில் இராணுவம் மீண்டும் காணி அபகரிப்பு முயற்சி! – மக்களின் எதிர்ப்பினால் நிறுத்தம்

கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவில் இரா­ணுவத் தேவைக்­காக சுவீகரிப்பதற்கு, ஒன்­றரை ஏக்கர் காணியை அள­விடும் பணி மக்கள் எதிர்ப்புத் தெரி­வித்­த­மையால் கைவி­டப்­பட்­டுள்­ளது. கோப்பாய் பிர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள கோப்பாய் மத்தி கிராம அலு­வலர் பிரிவின் கீழ் கோப்­பாயில் இருந்து கைதடி செல்லும் வீதியில் சுமார் ஒரு ஏக்கர் காணியில் இரா­ணுவ முகாம் அமைந்­துள்­ளது....

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம் உதயம்

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம், 13ஆம் திகதி உதயமாகியுள்ளது. யாழ்ப்பாண ஊடக மையத்தில் ஊடகத்துறை ஊழியர் தொழிற்சங்க சம்மேளனச் செயலாளர் தர்மசிறி லங்காபேலி தலைமையில் இடம்பெற்ற செயலமர்வின் போதே இது உருவாக்கப்பட்டது. வடமாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகிய மாவட்ட ஊடக அமைப்புக்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். தகவல்...

நல்லூர் திருவிழா : யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம்

நல்லூர் உற்சவ காலத்தில் கடைகளுக்கான இடங்கள் வாடகைக்கு விடப்பட்டதின் மூலம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு 14.6 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக யாழ். மாநகர சபை கணக்காளர் தெரிவித்தார். நல்லூர் உற்சவ காலத்தின் போது, ஆலயத்தைச் சூழவுள்ள வீதிகளில் கடைகள் அமைப்பதற்கான இடம், யாழ்ப்பாணம் மாநகர சபையால் ஏலத்தில் வாடகைக்கு விடப்பட்டது. இதில் அதிகூடிய ஏலம்...

நடிகர் எஸ்.வி.சேகருக்கு கொலை மிரட்டல்!! “போர்க்களத்தில ஒரு பூ” தடை காரணமா??

நடிகர் எஸ்.வி.சேகர் சென்னை மயிலாப்பூரில் வசிக்கிறார். திரைப்பட தணிக்கை குழு உறுப்பினரான அவர் நேற்று மயிலாப்பூர் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், தனக்கு செல்போனில் கொலை மிரட்டல் வந்துள்ளதாகவும், சில மர்ம நபர்கள் தனது வீட்டுக்கு வெளியில் நின்று கண்காணிப்பதாகவும், இது தொடர்பாக உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும்...

பாகுபலி: சீனாவில் 5000 திரையரங்குகளில் வெளியிட முடிவு

ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘பாகுபலி’. ரூ.250 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் வெளியான சில நாட்களிலேயே 500 கோடி ரூபாயை எட்டி வசூலில் புதிய சாதனை படைத்தது. இதில் ராணா, பிரபாஸ், அனுஷ்கா, தமனா, ரம்யா கிருஷ்ணன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். உலகம் முழுக்க பல நாடுகளில் வெளியான...

நடை பணயப் போராட்டம் நிறைவு – வடக்கு முதல்வருக்கு மகஜர்

ஜெனிவாவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், உள்நாட்டுப் பொறிமுறையை ஏற்க மாட்டோம், சர்வதேச மத்தியஸ்தம் ஊடாக அரசியற் தீர்வு வேண்டும், மனித உரிமைப் பேரவை மூலம் சர்வதேச நீதி வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நான்கு நாற்களாக இடம்பெற்று வந்த நடை பணயப் போராட்டம் நேற்று ஐந்தாவது நாளில் நிறைவடைந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

SLASSCOM இன் தலைவராக மனோ சேகரம் தெரிவு

99X Technology,d இணை ஸ்தாபகரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மனோ சேகரம், SLASSCOM,d; 2015/16 பருவ காலத்துக்கான தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற SLASSCOM வருடாந்த பொது ஒன்றுகூடலின் போது இந்த நியமனம் வழங்கப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்பம்/மென்பொருள் முகாமைத்துவம் ஆகியவற்றில் சேகரம் சுமார் 25 வருட கால சர்வதேச அனுபவத்தைக் கொண்டுள்ளார். அத்துடன், இவர்...
Loading posts...

All posts loaded

No more posts