கடனடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை பெற 2500 ஊடகவியலாளர்கள் தெரிவு!

ஊடகவியலாளர்களுக்காக கடன் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்காக நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வின் மூலம் மோட்டார் சைக்கிள்களை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 2500 ஊடகவியலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பான அனைத்து வேலைகளும் நிதியமைச்சினால் முன்னெடுக்ப்பட்டு வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். வாராந்த...

அனைத்து பாகங்களிலும் கடும் மழை பெய்யலாம்?

வானிலையில் ஏற்பட்டுள்ள தாழமுக்க மாற்றத்தினால் நாட்டின் அனைத்து பாகங்களிலும் இன்று (14) அதிக மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அனைத்து பாகங்களிலும் பகல் இரவு என எந்நேரங்களிலும் இம் மழை பெய்யலாம் எனவும் அத்துடன் இம் மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக...
Ad Widget

அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்கியமை குறித்து நீதி அமைச்சு விளக்கம்

தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்களுடன் தொடர்பில்லாதவர்களை பிணையில் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இவர்களை முற்றாக விடுதலை செய்யவில்லை எனவும் நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 60 சந்தேகநபர்களை இவ்வாறு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவர்களை விடுவித்தமையானது பாரிய தவறு என சிலர் அர்த்தம் கற்பிக்க முற்படுவதாகவும்...

பாரிஸ் தாக்குதல்; இலங்கையர்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சு அவதானம்

பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வௌிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதில் இலங்கையர்கள் எவரும் சிக்கி இருப்பார்களா என்பது தொடர்பில் அந்த நாட்டு உரிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்வத்தில் 153க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் தென் மேற்கு கடற்பகுதிக்கு அப்பால் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம் காரணமாக, தெற்கு ஜப்பான் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, க்யூஷூ தீவிலுள்ள கஹோஷிமா கடற்கரை பகுதியை ஒரு மீட்டர் உயரமுள்ள அலைகள் தாக்கக் கூடும் என ஜப்பானின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்தீவுக்கு அருகாமையில் கடற்கரைக்கு அப்பாலலுள்ள வேறு சில தீவுகளையும்...

டெண்டுல்கர் யார் என்று தெரியாதா? ரசிகர்கள் ட்விட்டரில் ‘அர்ச்சனை’

சச்சின் டெண்டுல்கர் யார் என்று தெரியாத பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் டெண்டுல்கரின் ரசிகர்களின் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்றில் சமீபத்தில் டெண்டுல்கர் பயணித்திருக்கிறார். அப்போது அவருக்கு விமானத்தில் வழங்கப்பட்ட சேவை குறித்து அதிருப்தி அடைந்த அவர், அந்த நிறுவனத்தின் விமானப் பணியாளர்களின் "ஏனோ,தானோ" அணுகுமுறை பற்றி தனது ட்விட்டர் கணக்கில் புகார் ஒன்றைத்...

பாரிஸில் பயங்கரவாத தாக்குதல்: 100க்கும் மேற்பட்டோர் பலி

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நான்கு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வெவ்வேறு இடங்களில் மர்ம நபர்கள் 7 இடங்களில் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 158 பேர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் கிழக்குப்பகுதியில் பட்டாச்சான் என்ற சினிமா...

கதைக்கு தேவை என்றால் கவர்ச்சியாக நடிக்க தயார் – சுருதிஹாசன்

நடிகை சுருதிஹாசனுக்கு பெரிய படங்கள் அமைகின்றன. முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் தீவிரமாக நடிக்கிறார். அஜித் ஜோடியாக நடித்த ‘வேதாளம்’ படம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்தியில் இரண்டு படங்கள் கைவசம் வைத்துள்ளார். கவர்ச்சியில் தாராளமாக நடிப்பதாக சுருதிஹாசன் மீது விமர்சனங்களும் கிளம்பியுள்ளன. இதுகுறித்து அவர் கூறியதாவது;-...

கோவா செல்லும் விஜய் 59 படக்குழு

‘புலி’ படத்திற்குப் பிறகு விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா மற்றும் எமிஜாக்சன் நடித்து வருகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மகேந்திரன் நடித்து வருகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இப்படத்தில் விஜய் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு ‘காக்கி’...

மீண்டும் நடிக்க களம் இறங்கும் விவேக்

சமீபத்தில் நடிகர் விவேக்கின் மகன் பிரசன்னா உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 13. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரசன்னா, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 29ம் தேதி உயிரிழந்தார். இதனால் விவேக்கும் அவரது குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்தது. மகன் பிரிவினால் ஆழ்ந்த வருத்தத்தில் இருந்த விவேக், தற்போது மீண்டும் படப்பிடிப்புக்கு செல்ல இருக்கிறார். இது குறித்து...

எனது கருத்துக்கள் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக யாராவது கருதினால் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகின்றேன் -மெல்பேர்னில் சுமந்திரன்

தான் கூறும் கருத்துக்கள் பிளவுகளையும் பிரச்சினைகளையும் ஏற்படுத்துவதாக யாராவது கருதினால் அதற்கு தான் மனம் வருந்துவதாகவும் மனப்பூர்வமாக மன்னிப்பு கோருகின்றேன் .மக்களை குழப்பியதாக யாராவது குற்றஞ்சாட்டினால் அந்த குற்றச்சாட்டை தான் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு தயவுசெய்து தன்னை மன்னித்துக்கொள்ளுமாறும் - தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் அவுஸ்திரேலியாவில் வெள்ளிகிழமை இடம்பெற்ற...

தந்தை செல்வா, தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன் இவர்களைத் தொடர்ந்து எமது மக்கள் நேசிக்கும் ஒரே நபர் வடக்கு முதல்வர் – சிறீதரன்

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தமிழீழத்தின் சமகால அரசியல் பற்றிய கருத்துரைகளும்இ கலந்துரையாடலும் எனும் நிகழ்வு கனடா றொரான்டோவில் 10.11.2015 அன்று பேராசிரியர் சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களும் வீடியோக் காணொளி மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்....

கெஹலிய ரம்புக்வெலவுக்கு யாழ்.நீதிமன்றம் பிடியாணை

யாழ்.மாவட்டத்தில் வைத்துக் கடத்தப்பட்டு காணாமல்போன லலித், குகன் வழக்கில் முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. ஜே.வி.பி கட்சியிலிருந்து பிரிந்து சென்ற நிலையில் யாழ்.மாவட்டத்தில் அரசியல் பணியாற்றிய லலித், குகன் ஆகியோர் கடத்தப்பட்டுக் காணாமல்போயினர். இந்நிலையில் குறித்த சம்பவத்தையடுத்து முன்னாள் தகவல் தொடர்பாடல் ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெவல...

நயினாதீவு விவகாரம்! அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு சிவீகே கடிதம்

நயினாதீவு என்ற தீவின் பெயர் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சையைக் கவனத்தில் எடுக்குமாறு வடமாகாண அவைத் தலைவர் சிவீகே. சிவஞானம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிற்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். அவர் எழுதிய கடிதம் பின்வருமாறு,   "அத தெரண’’ என்ற இணையத் தளத்தில் நாகதீப என்ற தீவின் பெயரை நயினாதீவு என்று மாற்றம்...

சுமந்திரனுக்கெதிராக மெல்பேர்ணில் போராட்டம்! கூட்டம் ரத்து!

இலங்கையிலிருந்து சென்ற யாழ்மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் M A சுமந்திரனுக்கெதிராக மெல்பேர்ணில் Scoresby, St Judes Community Centre க்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றிருந்தது. இதைத்தொடர்ந்து அந்த மண்டபத்தில் நடப்பதாக இருந்த பொதுக்கூட்டம் ரத்துச் செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். பிந்திய செய்தி குறித்த கூட்டம் பிறிதொரு இடத்தில்...

WT1190F மர்மப்பொருள் இலங்கை அருகில் விழும் காட்சி வெளியானது

WT 1190F எனப் பெயரிடப்பட்டுள்ள மர்மப்பொருள் விண்வெளியில் இருந்து இலங்கை நேரப்படி இன்றுக்காலை 11.48 க்கு,  இலங்கையின் தென் கடற்பகுதியில் விழும் என்று எதிர்வு கூறப்பட்டிருந்த நிலையில், அந்த மர்மப் பொருளானது பகல் 12.45 வரை விழவில்லை என்றும் அந்த மர்மப் பொருள் தொடர்பிலான தகவல்கள் எதுவும் தங்காலை கண்காணிப்பு மத்தியநிலையத்துக்கு கிடைக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐக்கிய...

இனி தேநீரில் சீனி கலப்பது தடை!

தேனீர்  வழங்கும் போது,தேநீருக்குள் சீனியை கலக்காது,பிறிதொரு பாத்திரத்தில் சீனியை வைத்து தேவையான அளவு கலந்து கொள்ளும் விதத்தில்,ஹோட்டல்கள்,தேநீர்ச்சாலைகள்,சிற்றுண்டிண்டிச்சாலைகளில்  வழங்குவது அவசியம், என சுகாதார அமைச்சின் விசேட சுற்று நிருபம் அறிவித்துள்ளது. நாளை(14) உலக சிறுநீரக நோயாளர் தினத்தை முன்னிட்டு ,இவ்விசேட விதிகள் நடைமுறைப்படுத்த  உள்ளதாக ,சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் பாலித மகிபால அவர்கள் தெரிவித்துள்ளார்.சுகாதார...

பணிப்புறக்கணிப்பு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றி- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட கடையடைப்பு மற்றும் பணிப்புறக்கணிப்பை வெற்றியடையச் செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு நீண்டகாலமாக விடுதலையின்றி அரசியல் கைதிகளாக சிறையில் வாடும் தமிழ் இளைஞர்கள்  ”நல்லாட்சி” அரசு என்று கூறும் அரசாங்கமும்...

யாழில் பூரண ஹர்த்தால். மாவட்டமே வெறிச்சோடியது!

யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் பூரண ஹர்த்தால் நடவடிக்கையினால் யாழ். மாவட்டம் முற்று முழுதாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று கடையடைப்பு, வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு பூரண ஹர்த்தாலை அனுஷ்டிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு அமைய...

ஹர்த்தாலுக்கு EPDP ஆதரவு

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி, இன்று வெள்ளிக்கிழமை (13) வடக்கில் அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தாலுக்கு, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியும் ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 'அரசியல் கைதிகளின் விடுதலையானது அவசியமானது. அவர்களின் விடுதலையை வலியுறுத்திய வகையில் மேற்கொள்ளப்படும் இந்தக் ஹர்த்தாலுக்கு எமது ஆதரவை வழங்குகின்றோம். அடிப்படைத் தேவைகள் தவிர்ந்து, மற்றவர்கள் அனைவரும்...
Loading posts...

All posts loaded

No more posts