- Friday
- April 26th, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் வரும் 27ஆம் திகதி காலை 10.30 மணிக்கு இடம்பெறுவதோடு இவ்விடயம் குறித்து ஊடகவியலாளர் சந்திப்பும் நடத்தப்படவுள்ளது. பொது நிர்வாக சுற்று நிருபங்களை பாரபட்சமாக நடைமுறைப்படுத்துதல், ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவுக்கு நியாயமற்ற நிபந்தனைகள் விதிப்பு, ஊழியர்கள் மீதான அச்சுறுத்தல்கள் உட்பட பல்வேறு...
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நாளை முன்னெடுக்கப்படும் “நீதிக்காய் எழுவோம்” மக்கள் பேரணியின் இலக்கும் செய்தியும் ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளடங்களாக சர்வதேசத்தை எட்ட வேண்டும் என தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதற்காக அரசியல் கடந்து அனைவரும் ஆதரவளிக்கும் முகமாக அனைவரும் பங்கேற்க வேண்டும் என...
யாழ். பல்கலை மாணவர்களினால் முன்னெடுக்கப்படவுள்ள எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி வட மாகாணம் தழுவிய வாகன பவனி யாழில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாகன பவனி யாழ். பல்கலைக்கழக வளாகத்திலிருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. யாழ். மாவட்டம் முழுவதும் பயணிக்கவுள்ள இந்த வாகன பவனி, அதனை தொடர்ந்து வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு செல்லவுள்ளது. தமிழின...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் சபையின் 40ஆவது அமர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலப்படுதியில் தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் நிரந்தர மற்றும் பயனுறுதி வாய்ந்த தீர்வை நோக்கி நகர்த்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் வரும் சனிக்கிழமை முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சிப் பேரணி முக்கியத்துவம் வாய்ந்த்து என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற...
காணாமலாக்கப்பட்டவா்கள் தொடர்பாக பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கவுள்ள போராட்டத்தை குழப்பும் வகையில் துண்டுபிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவா்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும், இலங்கை அரசுக்கு கால அவகாசம் வழங்கவேண்டாம் என வலியுறுத்தியும் பல்கலைக்கழக மாணவா்கள் போராட்டமொன்றை 16ஆம் திகதி நடத்தவுள்ளனர். இந்நிலையில் அதனை குழப்பும் வகையில் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள போராட்டத்தை 15ஆம் திகதி...
யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தொடரும் பகிடிவதைக்கு எதிராக பல்கலைகழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததாலும், தாக்குதல் தொடர்பில் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கியும் பொலிஸார் உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறியமையால் மாணவன் ஒருவன் தனது பட்டப்படிப்பை இடைநிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார். யாழ்.பல்கலைகழகத்தில் கல்வி கற்கும் முதலாம் வருட மாணவனான ப. சுஜீவன் எனும் மாணவன் கடந்த மாதம் 7ஆம் திகதி...
யாழ்ப்பாண பல்கலைக்கழக தொழிநுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து பொலிஸார் பாரபட்சமாக நடப்பதாக விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, ‘யாழ்ப்பாண பல்கலைக் கழக தொழில்நுட்ப பீடத்தில் கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற பகிடிவதை சம்பவம் தொடர்பாக பெற்றோரிடமிருந்தும், பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு ஊடாகவும் முறைப்பாடு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து...
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தைச் சேர்ந்த மாணவர்கள் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட வளாகம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் உள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனினால் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பகிடிவதை குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினைத்...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கும், முழுஅடைப்பிற்கும் யாழ்.பல்கலைக்கழக சமூகம் முழுமையான ஆதரவு வழங்கியுள்ளது. இந்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி வேண்டியும் திங்களன்று ஆரம்பமாகும் ஜெனிவா மனித உரிமைகள் சபை அமர்வினை முன்னிறுத்தி இடம்பெறவுள்ள இந்த போராட்டத்திற்கு அனைவரது ஆதரவும் அவசியம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்...
இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுவந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியின் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. கடந்த வருடம் இந்த தூபி அமைக்கும் பணிகள் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் குறித்த பகுதியில் தூபியை அமைப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனால் ஆரம்பக் கட்ட வேலையுடன் குறித்த நினைவுத்தூபி அமைக்கும் பணிகள்...
யாழ்.பல்கலைக்கழக் முதலாம் வருட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை வகுப்பு பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக மாணவனும், ஊடகவியலாளருமான ப.சுஜீவன் பல்கலைக்கழக 4 ஆம் மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மாணவன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க கோரியும்...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவன் மீது மேற்கொள்ளப்பட்ட பகிடிவதை காரணமாக குறித்த மாணவன் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில், ஊடகவியலாளரும் பல்கலைக்கழக மாணவனுமான ப.சுஜீவன் என்பவரே இவ்வாறு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பல்கலைக்கழக வாளாகத்திற்குள் குறித்த மாணவனை சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள், பகிடிவதை எனக்கூறி அவர் மீது சரமாரியாகத்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் முன்னிலையிலநேற்று ஆரம்பமாகின. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில்...
இலங்கையின் சுதந்திர தினத்தை தமிழர் தாயகத்தில் கரிநாளாக பிரகடனப்படுத்தி துக்க தினமாக கடைப்பிடிக்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கேட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போதே இந்தக் கோரிக்கையை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் விடுத்தார். அத்துடன், இலங்கையின் சுதந்திர தினம் தொடர்பான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டை விளக்கும் அறிக்கையொன்றையும் அவர்கள்...
யாழ். பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடனத்தின் 18ஆம் ஆண்டு நிறைவு தின நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பொங்குதமிழ் நினைவு தூபிக்கு முன்னால் இடம்பெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர். இலங்கை அரசின் முப்படைகளினால் யாழ். பல்கலைக்கழகம் முழுமையாக முற்றுகையிட்டிருந்த நிலையிலும்...
பகிடிவதை காரணமாக யாழ். பல்கலைக்கழக மாணவனொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. பல்கலைகழகத்தில் தான் மோசமாக பகிடிவதைக்கு உள்ளாகி வருவதாக வீட்டிலிருந்தவர்களிடம் தெரிவித்திருந்த மாணவன் நேற்று (வெள்ளிக்கிழமை) திடீரென அறைக்குள் சென்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதனை அவதானித்த குடும்பத்தினர் மாணவனை மீட்டு உடனடியாக பளை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில், குறித்த மாணவன் மேலதிக சிகிச்சைகளுக்காக...
யாழ்.பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று ( செவ்வாய்க்கிழமை) இரவு கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்.பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் கல்வி பயிலும் நான்காம் வருட மாணவர்கள், அதே பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இரண்டாம்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சுருக்கமுறையற்ற விசாரணை அரச சட்டவாதி மன்றில் முன்னிலையாகததால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று ஒத்திவைத்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20ஆம் திகதி நள்ளிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்....
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளில் யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தலைவர் பிரபாகரனின் 64 ஆவது பிறந்த நாள் இன்றாகும். இப் பிறந்தநாளை நிகழ்வை தாயகத்திலும் வெளிநாடுகளிலும் பலரும் மிக விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். இந் நிலைமையிலையே நள்ளிரவு வேளையில் பிறந்த நாள் கேக்...
மாவீரர் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில், பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத்தூபியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மாவீரர் நினைவுத் தூபியைச்சுற்றி வளைவுச்சுவர்கள் அமைக்கப்பட்டு நினைவுத்தூபி வடிவமைக்கப்பட்டு மாவீரர் தின நிகழ்வுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. தமிழ் மக்களின்...
Loading posts...
All posts loaded
No more posts