மே 18! இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்க அழைப்பு

போரில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு நீதி கேட்டுப் போராடும் மக்களோடு இணைந்து வடக்கு-கிழக்கு ஆயர்களாகிய நாம் மே 18ம் திகதியை இனப்படுகொலையை நினைவுகூரும் நாளாகவும் செப நாளாகவும் அனுசரிக்கும்படியாக தமிழ் மக்கள் அனைவரையும் வினயமாகக் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு வடக்கு-கிழக்கு ஆயர் மன்றம் அழைப்புவிடுத்துள்ளது. இதுதொடர்பில் போரில் கொல்லப்பட்டோரை நினைவுகூரும் தினம் என்ற தலைப்பில் மன்றம் வெளியிட்டுள்ள ஊடக...

முள்ளிவாய்க்கால் மண்ணில் எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் – இராணுவத்தளபதி

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விடயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 3 ஆம் திகதியிலிருந்து அரச...
Ad Widget

நாம் விட்ட தவறுகளே இதற்கெல்லாம் காரணம் – விக்னேஸ்வரன்

இனப்படுகொலையாளிகள் மீண்டும் அரியணையில் ஏறுவதற்கும் என்றுமில்லாதவாறு சிங்கள பௌத்த பேரினவாதம் திரட்சி பெறுவதற்கும் நாம் விட்ட தவறுகளே காரணம் என முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ். நல்லூர் வீதியில் அமைந்துள்ள தனது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் தீபம் ஏற்றிய...

முள்ளிவாய்க்காலில் உறவுகள் அஞ்சலி! முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வாசிக்கப்பட்டது!!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் 11ஆம் ஆண்டு நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று காலை அனுமதிக்கப்பட்ட உறவுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர். காலை 10 மணியளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான பிரதான நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும், கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது...

செம்மணியில் நினைவேந்தல் நடத்தவும் விக்னேஸ்வரனுக்கு தடை!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை செம்மணியில் நடத்துவதற்கு முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன், முயற்சித்த போதும் பொலிஸார் அனுமதிக்கவில்லை. நீதிமன்ற தடை உத்தரவு உள்ளதாக பொலிஸார் தெரிவித்ததால், அதனை மதித்து நிகழ்வை நடத்தவில்லை எனத் தெரிவித்து விக்னேஸ்வரன், அங்கிருந்து புறப்பட்டார். இந்தச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு...

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர் தூவி சுடர் ஏற்றி அஞ்சலித்தார் ரவிகரன்!

முள்ளிவாய்க்கால் தமிழின பேரவலத்தின் 11 ஆம் ஆண்டு தினமான இன்று (18)உயிர் நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்த்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தபட்டுள்ளது. முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த அஞ்சலி நிகழ்வை மேற்கொண்டார். "எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல். ஏராளமான எங்கள் உறவுகளின்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குச் சென்ற விக்கி சங்குப்பிட்டியில் ஒரு மணிநேர தடுத்து வைத்தலின் பின் திருப்பி அனுப்பப்பட்டார்

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான குழுவினர் சங்குப்பிட்டி சோதனைச் சாவடியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு திருப்பி அனுப்ப்பபட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 11 ஆவது நினைவுநாளான இன்று கொல்லப்பட்ட உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து முள்ளிவாய்க்காலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே வடமாகாண...

யாழ்.பல்கலை. முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் உறவுகளுக்கு நினைவேந்தல்

இறுதிப் போரில் உயிர்நீத்த உறவுகளுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் தீபங்கள் ஏற்றி, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை இந்த நிகழ்வு மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் அவலத்தின் பதினோராம் ஆண்டு நினைவஞ்சலி தாயகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 நோய்ப் பரம்பலைக் கட்டுப்படுத்தும் கட்டுப்பாடுகளைப் பயன்படுத்தி நிகழ்வுகளைத்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மூன்றாம் நாள் அஞ்சலி நாகர்கோவிலில்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் மூன்றாம் நாள் நினைவஞ்சலி நிகழ்வுகள் இன்று நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாகர் கோவில் மகா வித்தியாலயம் முன்பாக நடைபெற்றது. 1995ஆம் ஆண்டு 9ஆம் மாதம் 22ஆம் திகதி இலங்கை விமானப்படையின். குண்டு வீச்சுக்கு இலக்காகி நாகர் கோவில் மகா வித்தியாலய மாணவர்கள் 21 பேர்...

பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ். பல்கலைக்கழக பண்பாட்டு வாயிலில் தீபங்கள் ஏற்றி நினைவேந்தல்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பண்பாட்டு நுழைவாயிலில் நினைவேந்தல் தீபங்கள் ஏற்றப்பட்டன.இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றது. அதனை அறிந்த யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெனாண்டோ, கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பி.வீரசிங்க ஆகியோர் தலைமையிலான பொலிஸ் பிரிவினர் சம்பவ இடத்துக்கு...

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் வாரத்தின் இரண்டாவது நாள் நிகழ்வு நேற்று (வியாழக்கிழமை) நவாலி சென் பீற்றர் தேவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத் தூபியில் இடம்பெற்றது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான நினைவேந்தல் ஆண்டுதோறும் இடம்பெற்று வருகிறது. இதன்படி இந்த ஆண்டும் முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் நேற்று ஆரம்பமாகிய நிலையில்,...

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்: வீட்டிலிருந்து நினைவுகூரலுக்கு சி.வி.அழைப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மாலை 6 மணி 18 ஆவது நிமிடத்தில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனது இல்லத்தில் வைத்து நேற்றையதினம் (புதன்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவிக்கையில், “இந்த...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்! செம்மணியில் சுடர் ஏற்றி அஞ்சலி!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு நினைவுச் சுடரேற்றுவதற்கு யாழ்ப்பாணம் பொலிஸார் அனுமதி வழங்க மறுத்தனர். எனினும் சுமார் 30 நிமிடங்களின் பின் நினைவுச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இன்று முற்பகல் 11 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் இந்த நினைவுச் சுடரை ஏற்றுவதற்காக வந்த நிலையிலேயே பொலிஸார் இவ்வாறு...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு விக்னேஸ்வரன் அழைப்பு!

இனப்படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூருவதற்காக வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் கூடுமாறு முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த அழைப்பை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு எதிர்வரும்...

தமிழர் இனப்படுகொலை தினம் யாழில் அனுஷ்டிப்பு

யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் தமிழர் இனப்படுகொலை தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜலிங்கம் தலைமையில குறித்த நிகழ்வுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது 1996 ஆம் ஆண்டு ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குழி மாணவி கிரிசாந்தி குமாரசுவாமி உட்பட அவரது உறவினர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது....

தென்னிலங்கையில் புலிகள் தாக்குதல் நடத்தியபோதும் பாடசாலைகள் இடம்பெற்றது – சிவாஜிலிங்கம்

தென்னிலங்கையில் விடுதலைப்புலிகளின் தாக்குதல் நடந்தபோதும் பாடசாலைகள் இடம்பெற்றது என முன்னாள் வட மாகணசபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு வவுனியாவில் கச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்பாகநேற்று மாலை சுடர் ஏற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களளுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு தெரிவித்தார்....

மக்களின் உணர்வுகளை வடக்கு மாகாணசபை புரிந்துகொள்ளவில்லை – கிழக்கு பல்கலை மாணவர்கள்

வடக்கில் பாரம்பரியமாக உள்ள சாதி அமைப்புக்குப் புறம்பாக புதியதொரு உயர்சாதி அமைப்பொன்று உருவாகியுள்ளது போல உள்ளது. அரசியல்வாதிகள் என்னதான் தங்களுக்குள் அடித்துக் கொண்டாலும் ஒருவர் தவறு செய்தால் மற்றவர் அதனை நியாயப்படுத்தும் அல்லது பூசிமெழுகும் போக்கு வெளிப்படுகிறது என்று கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய்...

பாவப்பட்ட பணம் தவராசாவின் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிடப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய பணத்தை தவராசா திருப்பிக் கேட்டதால் அந்தப் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்காக கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கிழக்கு மக்களிடம் இருந்து சேர்த்துக் கொண்டு வந்து தவராசாவின் வீட்டு வாசலில் கட்டி தொங்கவிட்டுச் சென்றுள்ளனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வழங்கிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தை வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா திருப்பிக் கேட்டதால்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க சிறப்புக் குழு! : அங்கத்தவர்களை இணைக்க விண்ணப்பங்கோரல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை 2019ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் முன்னெடுத்துச் செல்ல சிறப்புக் குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். இந்தக் குழுவில் அங்கத்துவம் பெற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்களை அவர் கோரியுள்ளார். இதுதோடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை...

ஈபிடிபி தவராசாவால் மீளக் கோரப்பட்ட பாவப்பட்ட பணத்தை திருப்பி வழங்குவோம்! – நிதி சேகரிப்பில் இளைஞர்கள்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்காக தன்னால் வழங்கப்பட்ட 7 ஆயிரம் ரூபா நிதியினை மீள வழங்குமாறு வடக்கு மாகாண அவைத்தலைவரிடம் வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவரான ஈபிடிபி உறுப்பினர் தவராசா கோரிக்கை விடுத்திருந்தார். அது தொடர்பில் வடக்கு மாகாண சபையில் ஒரு விவாதமே நடந்து முடிந்திருந்தது. இந்நிலையில் தவராசாவின் பணத்தினை மீள வழங்கும் செயலில் தமிழ் இன உணர்வுள்ள...
Loading posts...

All posts loaded

No more posts