கிராம உத்தியோகத்தர் பதவி: 3000 பேருக்கு வாய்ப்பு

கிராம உத்தியோகத்தர் பதவிக்கு சுமார் 3000 விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற “புதிய கிராமம் – புதிய நாடு” தேசிய நிகழ்ச்சித் திட்டக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஆட்சேர்ப்பு செய்வதற்கான பரீட்சை டிசம்பர்...

வடமாகாணத்தின் வைத்திய அதிகாரிகள் இன்று போராட்டத்தில்!!

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளின் வைத்திய அதிகாரிகள் இன்று வெள்ளிக்கிழமை (03) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி இன்று காலை 8 மணியிலிருந்து நாளை சனிக்கிழமை (03) காலை 8 மணி வரை குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது வைத்திய அதிகாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Ad Widget

யாழ்.மாவட்ட காணி பதிவுத் திணைக்களம் குறித்து மக்கள் அதிருப்தி!

யாழ்.மாவட்ட காணி பதிவுத் திணைக்களத்தின் நிகழ்நிலை (online) ஊடாக சேவைகளைப் பெற்றுக் கொள்ளமுடியாமல் உள்ளதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பதிவாளர் திணைக்களத்தின் நிகழ்நிலை (online) சேவை ஊடாக காணிப் பதிவு, உறுதி, புத்தகப் பிரதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்ற போதிலும், யாழ்ப்பாண மாவட்ட காணிப் பதிவகத்தின் ஊடாக அந்த சேவைகளைப் பெற...

அரசியல் கட்சியிடமிருந்து எனது வீட்டை மீட்டுத் தாருங்கள்!

தனது வீட்டை அரசியல் கட்சியிடம் இருந்து மீட்டுத் தருமாறு மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் நபரொருவர் முறைப்பாடு செய்துள்ளார். இது குறித்த அவர் அளித்துள்ள முறைப்பாட்டில் ”யாழ்ப்பாணம் , சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள தனது வீட்டில் அரசியல் கட்சி ஒன்றின் மக்கள் தொடர்பு அலுவலகமொன்று இயங்கி வருகின்றது. குறித்த கட்சியினரை வெளியேறுமாறு நான் பல தடவைகள் கோரிய...

யாழில் பெண்களைக் குறிவைக்கும் திருடர்கள்!!

யாழில் ஆலய வழிபாட்டுக்குசெல்லும் பெண்களைக் குறிவைத்து அண்மைக்காலமாக திருடர்கள் தமது கைவரிசைகளைக் காட்டிவருகின்றனர். அந்தவகையில் இன்று ஆலய வழிபாட்டுக்குச் சென்ற பெண்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நபரொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதோடு அவரிடமிருந்து 10 பவுண் தங்க நகைகள் மற்றும், 7 கையடக்கத் தொலைபேசிகளையும் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் கொள்ளைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளொன்றையும்...

யாழ் பல்கலையில் விடுதலை புலிகளை விமர்சித்த பெண் சட்டத்தரணியின் கருத்தமர்வு இரத்து!

நேற்றைய தினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரின் ஏற்பாட்டில் சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் வளவாளராக பங்குபற்றும் கருத்தரங்கு ஏற்பாடுசெய்யப்பட்டது. இந் நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினையடுத்து குறித்த கருத்தரங்கு இடைநிறுத்தப்பட்டது. அண்மையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்குபற்றிய சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் தமிழீழ வுடுதலைப் புலிகள் அமைப்பு பாசிச அமைப்பு என தெரிவித்துருந்தார்....

சினோபெக் எரிபொருள் விலையிலும் திருத்தம்!

இன்று முதல் அமுலாகும் வகையில் சினோபெக் நிறுவனம் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 356 ரூபாவாக குறைந்துள்ளது. ஒக்டேன் 95 ரக பெற்றோல்3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 423 ரூபாவாக அதிகரித்துள்ளது. ஒடோ டீசல்...

யாழில். Pick Me முச்சக்கர வண்டி சாரதி மீது தரிப்பிட சாரதிகள் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் Pick Me செயலி ஊடாக கிடைக்கப்பெற்ற வாடிக்கையாளரை ஏற்றிச் சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது , தரிப்பிட சாரதிகள் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ் போதனா வைத்தியசாலைக்கு அருகேயே நேற்றையதினம் இச்சம்வம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அண்மையில் நின்று ஒருவர் “Pick...

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

எரிபொருட்களின் விலைகளில் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் 9 ரூபாய் குறைந்து 356 ரூபாவிற்கு விற்பனையாகின்றது, ஒக்டேன் 95 பெட்ரோல் 3 ரூபாவால் அதிகரித்து 423 ரூபாவிற்கு விற்பனையாகின்றது, இதேவேளை ஒட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரித்து 356 ரூபாவிற்கு விற்பனையாகின்றது, மேலும் மண்ணெண்ணெய்...

சாரதியின் நித்திரை காரணமாக விபத்துக்குள்ளான தனியார் பேருந்து! பலர் காயம்!!

கொடிகாமம் – பருத்தித்துறை பயணிகள் பஸ்ஸொன்று இன்று (31) காலை முள்ளிப்பகுதியில் வீதியை விட்டு விலகி தடம்புரண்டுள்ளது. பயணிகளுடன் கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த வேளை சாரதியின் நித்திரை காரணமாக பஸ் தடம்புரண்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் போது சில பயணிகளுக்கு காயமேற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் மேலதிக...

நெடுந்தீவில் இளைஞன் மர்மமான முறையில் மரணம்

நெடுந்தீவு பகுதியில் வீடொன்றில் தனிமையில் இருந்த இளைஞன் நேற்றைய தினம் (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நெடுந்தீவு மேற்கை சேர்ந்த குணராசா தனுஷன் எனும் 25 வயது நிரம்பிய இளைஞனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இளைஞனின் உறவினர்கள் வெளியூரில் வசிக்கும் நிலையில் அவர்களின் வீட்டினை இளைஞனே பராமரித்து வருவதுடன் , வீட்டின் பாதுகாப்புக்காக அந்த வீட்டில் தங்கியும் இருந்துள்ளார்....

வட மாகாண மாணவர்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஆளுநர்!!

வடக்கில் பாடசாலை மாணவர்கள் கல்வியில் இருந்து இடைவிலகும் வீதம் அதிகரித்து உள்ளதாகவும் , தாங்களாகவே வாசிக்கும் எழுதும் திறன் ஆரம்ப கல்வி மாணவர்கள் இடையில் குறைவடைந்து வருவதாகவும் வடமாகாண ஆளுநர் பி.எம்.எஸ் சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். அரசாங்கம் கல்விக்காக பெருமளவான நிதியை செலவழித்து வருகிறது. இளம் வயதினர் கல்வியில் சிறந்து விளங்கினால் தான் நாடு முன்னோக்கி செல்லும்...

சகோதரிகளின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டிய இராணுவ வீரர் கைது!!

பேஸ்புக் மூலம் காதல் வயப்பட்டு 16 வயது சிறுமியின் நிர்வாண புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் திரட்டிய இராணுவ வீரர் ஒருவர் பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார். வட மாகாண இராணுவ முகாமில் பணி புரியும் இராணுவ வீரர் பேஸ்புக் மூலம் பாடசாலைக்கு செல்லும் 16 வயது மாணவியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். அதன் மூலம் , குறித்த...

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு!

குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை மேற்கொள்ளும் நெடுந்தீவு பயணிகள் படகுகளிற்கே இறங்கு துறையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். மேலும், நேர அட்டவணைப்படி சீராக இறங்கு துறையில் படகுகள் தரித்து மக்களுக்கு அசௌகரியமற்ற சேவை வழங்குவதை ஒழுங்குபடுத்தி...

யாழிற்கு உலக வங்கிக் குழுவினர் விஜயம்!

இலங்கைக்கு வருகை தந்துள்ள ‘உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட்‘ தலைமையிலான குழுவினர் இன்று (30) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது குறித்த குழுவினர் உலக வங்கியின் நிதியுதவியில் கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் வேலைத்திட்டத்தைப் பார்வையிட்டனர். இவ்விஜயத்தில் வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன, வடமாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி,...

நவம்பர் 20இல் கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி எதிர்வரும் நவம்பர் 20 மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணை எடுத்து கொள்ளப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். இன்றையதினம் அகழ்வு பணி ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் ராஜ் சோமதேவ அவர்கள்...

விழிப்படைய வேண்டும் இல்லாவிட்டால் அழிந்துவிடுவோம் – சுகாஷ் எச்சரிக்கை

கடலட்டைப் பண்ணைகள் அமைக்கப்பட்டு வடக்குக் கிழக்கில் உள்ள தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் சுகாஷ் குற்றம் சாட்டியுள்ளார். மறுபுறம் சீனா போன்ற நாடுகளிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதற்கு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நடவடிக்கைகள் இடம்பெறும் நிலையில் அது குறித்து விழிப்படைய வேண்டும் என்றும் இல்லாவிட்டால்...

பெரும்பான்மை இனத்தவர்கள் 7 பேர் யாழ். பல்கலைக்கு நியமனம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு லட்சம் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற தென்னிலங்கையைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்களை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உள்ள சிற்றூழியர் பதவி வெற்றிடங்களுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அறியவருகிறது. பலநோக்கு அபிவிருத்திச் செயலணித் திணைக்களப் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வெற்றிடங்களுக்குப்...

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாடாளாவிய ரீதியில் போராட்டங்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) மற்றும் நாளைய தினமும் நாடளாவிய ரீதியில் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அந்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த போராட்டமானது தமது வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருளின் அளவை அதிகரித்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின்...

இராணுவ முகாமில் சிகை அலங்கரிப்பு நிலையம்!! சிகை அலங்கரிப்புத் தொழிலாளர் பாதிப்பு!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நவிண்டில் மற்றும் செம்பியன்பற்று பகுதியில் இராணுவ முகாமில் படையினர் நடாத்தும் சிகை அலங்கரிப்பு நிலையங்களை தடை செய்து எமது வாழ்வாதாரத்திற்கு உதவுங்கள் என யாழ். மாவட்ட சிகை அலங்கரிப்பாளர் கூட்டுறவுச் சங்க பிரதிநிதி கோரிக்கை விடுத்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சாள்ஸ்...
Loading posts...

All posts loaded

No more posts