- Monday
- March 9th, 2026
மத்திய வங்கியின் நம்பகத் தன்மை மற்றும் நற்பெயரினை நிலைநிறுத்துவதனையே எனது முதன்மையான பொறுப்பாக கருதுகின்றேன் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்தார். இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, அதற்கான நியமனக் கடிதத்தினை நேற்று (04) காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்....
உடுப்பிட்டி- வல்லை வீதியிலுள்ள நெசவுசாலைக்கு பின்பகுதியிலுள்ள தோட்ட கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. தோட்ட கிணற்றினை துப்பரவு செய்த போது வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. 11 மோட்டார் எறிகணைகள், 25 பரா குண்டுகள், மற்றும் 69 கைக்குண்டுகள் என்பனவே மீட்கப்பட்டவையாகும்.
மாத்தறை புதிய மது வரி அத்தியட்சகர் அலுவலகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இன்று திறந்து வைக்கப்பட்டது.இச்சந்தர்ப்பத்தில் மாத்தறை மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். கலால் சட்டத்தை மீறும் நபர்களை தடுத்து வைப்பதற்காக மதுவரி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு அறை ஜனாதிபதியால் இதன் போது திறந்துவைக்கப்பட்டது.மேலும் இச்சந்தர்ப்பத்தின் போது சில அமைச்சர்கள்...
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் குசல் ஜனித் பெரேராவுக்கு நட்டஈடு வழங்க சர்வதேச கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஊக்கமருந்து பாவித்த குற்றச்சாட்டின் பேரில் குசல் ஜனித் பெரேராவுக்கு சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு நீக்கப்பட்டதன் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பிரதேசத்தில் முன்னாள் போராளியான இளைஞர் ஒருவர் காதல் முறிவினால் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் அச்சுவேலிப் பகுதியில் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த பகுதியைச் சேர்ந்த விஜயநாத் (27) என்ற இளைஞரே தற்கொலை செய்துகொண்டார். குறித்த சம்பவம் தெரியவருவதாவது, குறித்த இளைஞர் ஒரு முன்னாள் போராளியாவார். இவர் கடந்த 8 வருடங்களாக ஒரு...
அரசாங்க வைத்தியசாலைகளின் வைத்தியர்களால் இன்று திங்கட்கிழமை (04) முன்னெடுக்கப்பட்ட அரைநாள் பணிப் பகிஷ்கரிப்புப் போராட்டம் காரணமாக, வடமாகாண நோயாளிகளும் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர். தனியார் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வருதல், இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையில் கைச்சாத்திடுதல் என்பவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் வேறு சில கோரிக்கைகளை முன்வைத்தும், நாடளாவிய ரீதியில் அரச வைத்தியர்கள் அரைநாள் பணிப் பகிஷ்கரிப்புப்...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில், மொழிப்பெயர்பாளராகவிருந்த ஜோர்ஜ் மாஸ்டரை விடுவிக்குமாறு உத்தரவிட்டுள்ள கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய, அவ்வமைப்பின் ஊடகச்செயலாளர் தயா மாஸ்டர் தொடர்பிலான வழக்கை டிசெம்பர் மாதம் 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
யுத்த இழப்பீடுகளை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னிலை சோசலிச கட்சியினர் யாழில் கையெழுத்துப் பெறும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர். யாழ். பஸ் நிலையத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை காலை 10.30 அளவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, இராணுவ முகாம்களை மட்டுப்படுத்து, மக்களின் குடியிருப்பு பகுதிகளில் இருந்து இராணுவத்தினை வெளியேற்று, அபகரித்த காணிகளை திருப்பிக்கொடு, போன்ற...
யாழ். நகருக்கு அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட, நான்கு ஆசிரியர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 18ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சசிதரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த மாதம் குறித்த பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம்...
தனியார் பஸ் ஒன்றியத்தினர் நாடளாவிய ரீதியில் இன்று மேற்கொள்ளவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தனியார் பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பான கலந்துரையாடல் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தனியார் பஸ் உரிமையார்கள் சங்கத்தினருடன் இடம்பெற்றது. பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக உரிய...
யாழ்ப்பாணத்தில் விற்பனை நிலையமொன்றில், பொலிஸார் இலஞ்சம் பெற முற்பட்டதாக தெரிவித்து, யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள விற்பனை நிலையமொன்றில் நேற்று அதிகாலை 12.30 அளவில் பொலிஸார் பணியாளர்களை தாக்கியதுடன், இலஞ்சம் பெற முற்பட்டுள்ளார். யாழ். நகரப் பகுதியிலுள்ள இரவு நேர விற்பனை நிலையமொன்றிலே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. விற்பனை நிலையமொன்றிற்கு...
வடக்கிற்கான பொருளாதார நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு முயற்சிக்கும் அரசியல்வாதிகள் கிளிநொச்சியில் அமைக்கப்பட்டு இதுவரை திறக்கப்படாதுள்ள பொருளாதார சந்தை தொடர்பில் இதுவரை கவனம் செலுத்தாதது ஏன் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். வடக்கிற்கான பொருளாதார வர்த்தக மையத்தை வவுனியா – தாண்டிக்குளத்தில் அமைப்பதென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும் குறித்த...
அச்சுவேலி வடக்கு, வல்லை பகுதியிலுள்ள வளவு ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் ஞாயிற்றுக்கிழமை (03) காலை மீட்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே பகுதியினை சேர்ந்த அச்சுவேலி தனியார் பஸ் ஒன்றில் நடத்துனராக கடமையாற்றும் குடும்பிநாதன் விஜயநாதன் (வயது 27) என பொலிஸார் கூறினர். பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைக்பெற்ற...
வவுனியா, ஓமந்தை வேலர்சின்னக்குளத்தில் அமைந்துள்ள புராதன வீரபத்திரர் ஆலயத்தின் விக்கிரகங்கள் மற்றும் கட்டடங்கள் இனந்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) முறைப்பாடு கிடைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். புராதன ஆலயமான இவ் ஆலயத்தில் மிக அண்மைக்காலத்தில் தான் புதிய கட்டடங்கள் அமைக்கப்பட்டு பரிவார மூர்த்திகள் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த நிலையில் அச்சிலை உடைக்கப்பட்டுள்ளதுடன், அருகிலிருந்த வேல்களும் அகற்றி எறியப்பட்டுள்ளன....
நக்கிள்ஸ் வனப்பகுதியில், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை வேட்டையாடியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட நால்வர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (03), தமது சட்டத்தரணியுடன் பன்விலை பொலிஸில் சரணடைந்துள்ளனர் எனத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் தொடர்பில் ஏற்கெனவே இருவரைக் கைதுசெய்துள்ளதாகவும் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக வன விலங்குகளை வேட்டையாடிய சிலர் அவற்றுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், சமூக...
வீடமைப்பு கடன் திட்டத்தின் கீழ், யாழ் மாவட்டத்தில் 800 பயனாளிகளுக்கான காசோலைகளை தேசிய வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச வழங்கி வைத்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில், மாவட்ட முகாமையாளர் ரவீந்திரனின் தலைமையில் இன்று காலை இந்த நிகழ்வு நடைபெற்றது. ´2025ம் ஆண்டு அனைவருக்கும் வீடு´ என்ற தொனிப்பொருளில் நாடு முழுவதும் தேசிய...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட யோசனை, குறிப்பாக பொறுப்புக் கூறல் செயற்படுகள் தொடர்பில், தமக்கும், இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்க அரசாங்கம் ஆகியோருக்கிடையில் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, வெளியாகியுள்ள செய்திகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு மறுத்துள்ளது. இது தொடர்பில் கூட்டமைப்பால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. எனவே, இவ்வாறான...
மத்திய வங்கி ஆளுனராக தெரிவு செய்யப்பட்டுள்ள டொக்டர் இந்திரஜித் குமாரசுவாமி தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். சற்றுமுன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் குறித்த கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
யாழ். குடாநாட்டின் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். காங்சேசன்துறை பகுதி மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை இராணுவத்தினர் விடுவிக்காது, தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளனர். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை சூழ பாதுகாப்பு வேலிகளை அடைத்து பாதுகாப்பு...
எந்தவகையான எரிபொருள் விலையும் அதிகரிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபன தலைவர் ஜி.வீ. ஜயசிங்க தெரிவித்துள்ளார். எரிபொருள் பலவற்றினதும் விலையை அதிகரிக்குமாறு தெரிவித்து இலங்கை ஐ.ஓ.சி. நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் கிடைக்கப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து பெற்றோலிய கூட்டுத்தாபன தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Loading posts...
All posts loaded
No more posts
