சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களே உஷார்!

அண்மைக்காலமாக யாழில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் சொகுசு பேரூந்துகளில் பயணம் செய்பவர்களை இலக்கு வைத்து கொள்ளைக் கும்பலொன்று தமது கைவரிசைகளைக் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பயணிகளை விழிப்பாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

யாழில் மூளைக் காய்ச்சலால் கிராம சேவகர் உயிரிழப்பு!

மூளைக் காய்ச்சல் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை (14) யாழ்ப்பாணத்தில் கிராம சேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் உடுப்பிட்டி வடக்கு ஜே/353 கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றி வந்தவர். குமாரசாமி வீதி, புத்தூர் கிழக்கு பகுதியைச் சேர்ந்த குமாரன் குகதாசன் (வயது 48) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,...
Ad Widget

அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் காலம் அறிவிப்பு

வரவு செலவு திட்ட முன்வைப்பில் அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் வருடம் ஏப்ரல் மாதம்(2024.04) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் தொடக்கம் இந்த 10 ஆயிரம் ரூபா கொடுப்பனவு அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் 2024...

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இவ்வாறு வெளியிடப்பட உள்ளது. குறித்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறு பட்டியலிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து புலமை...

யாழ்.பல்கலைக் கழக நினைவு தூபி விவகாரம்; ஊழியருக்கு எதிராக பேராசிரியர்கள் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் பதிவிட்ட பல்கலைக்கழக ஊழியர் ஒருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிவந்தவரும், தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றிவரும் நபருக்கு எதிராகவே இணைய வழி ஊடாக பொலிஸ் மா அதிபருக்கும்( Tell To IGP), யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திலும்...

காணாமற் போனோருக்கு இழப்பீடு!

வடக்கு மற்றும் கிழக்கில் காணாமற் போனவர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இதற்காக மேலும்1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது யாழ்ப்பாணம் பூநகரி நகர் அபிவிருத்திக்கு 500 மில்லியன் ரூபாய்...

நல்லூரில் வீதித்தடை!!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நடைபெறவுள்ள கந்தசஷ்டி உற்சவ காலத்தையொட்டி வீதிகள் தடை செய்யப்படவுள்ளன என்று யாழ். மாநகர சபை அறிவித்துள்ளது. நாளை 14 ஆம் திகதி தொடக்கம் 17 திகதி வரை மற்றும் 19 ஆம் திகதிகளில் பிற்பகல் 5 மணி தொடக்கம் 6 மணிவரையும் 18 ஆம் திகதி சூரன்போரன்று நண்பகல் 12 மணி...

தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து தமிழ் மொழிமூல பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்ட நிலையில் இன்று பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு பதிலாக பாடசாலை நடவடிக்கைகள் எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்டத்தை ஜனாதிபதி இன்று சபையில் சமர்ப்பித்து உரையாற்றுவார் !

2024 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று திங்கட்கிழமை (13) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அந்தவகையில், வரவு - செலவு திட்ட உரை இன்று நண்பகல் 12 மணிக்கு நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சை...

வளிமண்டலத்தில் தளம்பல் : நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!

நாட்டிற்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தளம்பல் நிலையானது தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதாக சிரேஷ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல், வடமத்திய, தென்,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில...

யாழ் மாவட்ட செயலகத்தை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டம்!!

இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனம் யாழ்.மாவட்ட செயலகத்தின் முன் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ்.மாவட்ட செயலகம் முன் இன்று (10) காலை 10.00 மணியளவில் ஒன்றுக்கூடிய கடற்தொழிலாளர்கள் , போராட்டத்தில் ஈடுபட்டனர். இப் போராட்டத்தில் “இந்திய மீனவர்களே எமது கடல் வளங்களை அழிக்காதே, கடற்படையே அத்துமீறிய இந்திய...

மாணவர்கள் போராட்டத்தால் அடிபணிந்த யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

மாணவர்களின் கதவடைப்பு போராட்டத்தை அடுத்து யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு சார்பாக வெளியிட்ட அறிக்கையை திரும்பபெறுவதாக அறிவித்துள்ளது. யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக வெளியிட்ட அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலை மூடி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக பல்கலைக்கழக...

இடியுடன் கூடிய மழை எதிர்பார்ப்பு : வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று மதியம் 1 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், வட மாகாணத்திலும் திருகோணமலை...

வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கைது!!

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். 27 வயதான இளைஞனும் 19 யுவதியும் நேற்று (9.11.2023) காலை குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் துபாய் செல்வதற்காக நேற்று 01.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். அவர்களின் ஆவணங்கள் தொடர்பில் சந்தேகமடைந்த அதிகாரிகள்...

யாழில் தொடரும் பண மோசடி!! மந்திரவாதி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!!

யாழ்ப்பாணத்தில் பெரும் பணக்காரர்களை இலக்கு வைத்து நபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், அது தொடர்பில் வர்த்தகர்கள் உள்ளிட்டவர்கள் விழிப்பாக இருக்குமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள பணக்காரர்களை இலக்கு வைத்து அவர்களை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தன்னை ஒரு மந்திரவாதியாக அறிமுகம் செய்வதுடன் குறித்த நபர்களுக்கு...

போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலைக் கழக மாணவர்கள்!

யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக, யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்ட சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலைப்பில் உரையாற்றியிருந்தார். இதன்போது மாணவர்கள் சிலரால் இடையூறு...

மகன் விஷம் அருந்திய அதிர்ச்சியில் தந்தை உயிரிழப்பு!

யாழ்பாணம் சோனெழு, கோப்பாய் மத்திய பகுதியில் மகன் ஒருவர் விஷம் அருந்தியால் அதிர்ச்சியடைந்த தந்தை நேற்று புதன்கிழமை (08) உயிரிழந்துள்ளார். முத்துத்ததம்பி விவேகானந்தம் (வயது 70) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், உயிரிழந்த நபரின் இரண்டாவது மகன் நேற்றையதினம் விஷம் அருந்தியதனால் அதிர்ச்சியில் தந்தையார் மயங்கி விட்டார். இந்நிலையில், அவரை உடனடியாக...

அரசாங்கம் சைவ மக்களின் மனங்களை நோகச் செய்கிறது!! இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல!!

அரசாங்கம் சைவமக்களை மனம் நோகச்செய்து வருகிறது. கோவில்களையும் காணிகளையும் அபகரித்து வருகிறது. இது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சைவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், அரச அதிகாரிகள் எவ்விதமான அக்கறையும்...

சுவஸ்திகாவை உரையாற்ற அனுமதிக்க வேண்டும் – யாழ் .பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சட்டத்தரணி சுவாஸ்திகா அருலிங்கம் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த 31ஆம் திகதி...

வடக்கு மாகாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர் அறிவிப்பு

வடக்கு மாகாண மக்கள் அனுபவித்து வரும் பாரிய குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இதற்கு தீர்வு காணும் நோக்கில் யாழ்ப்பாண நதி என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்த பொறியியலாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, எமது பாரம்பரியத்திற்கு ஏற்ப தண்ணீர் பிரச்சனையை...
Loading posts...

All posts loaded

No more posts