காணாமல்போனோர் தொடர்பில் நடவடிக்கை எடுப்போம்: யாழில் பஷில்

இடம்பெறவிருக்கும் தேர்தலில் வெற்றிபெற்று காணாமல்போனோர் குறித்த விடயம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை என்றுமே வழங்கப்போவதில்லை. எமது...

ஆட்சி மாற்றத்தினை முதலில் கோரியது தமிழரசுக்கட்சி: இரா.சம்பந்தன்!

இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று முதன் முறையாக கோரிய கட்சி இலங்கை தமிழரசுக்கட்சிதான் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,...
Ad Widget

முகாமில் வாழும் 55 பேருக்கு காணிகள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணத்தில் தற்போது வரையில் முகாமில் வாழும் காணி அற்றவர்களில் 55 பேருக்கு காணிகள் வழங்கி அதற்கான உறுதியும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். முகாமில் வாழும் மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர்...

நல்லை ஆதீன முதல்வர் பசில் ராஜபக்ஷ சந்திப்பு!!

அரசியல் தீர்வுக்கு தமிழ் மக்கள் ஒருபோதுமே எதிர்ப்புத் தெரிவிக்கவில்லையெனவும், பௌத்தபிக்குகளும், தென்னிலங்கை இனவாதிகளுமே இதற்கு தொடர்ச்சியாக எதிர்ப்புத் தெரிவித்து வருவதாகவும் அவர்களை நல்வழிப்படுத்தவேண்டிய கடமைதென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு உண்டென நல்லை ஆதீன முதல்வர் பசில் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார். இரண்டு நாள் பயணமாக யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த பசில் ராஜபக்ஷ நேற்று நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரியாரைச்...

கொக்குவிலில் வாள் வெட்டுக் குழு அட்டகாசம்!

கொக்குவிலில்நேற்று இரவு கடை ஒன்றுக்குச் சென்ற வாள்வெட்டுக் குழு அங்கிருந்த பொருள்களை அடித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் கொக்குவில் சந்தியில் நேற்று (01) இரவு 8 மணியளவில் நடந்துள்ளது. 3 மோட்டார் சைக்கிளில் சென்ற 9 பேர் கொண்ட குழுவே தாக்குதல் தாக்குதல் நடத்தியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

வித்தியாவின் கொலையில் குற்றவாளிகள் வெளியே! : மாவை

வித்தியாவின் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட நபர்கள், “இன்னும் குற்றவாளிகள் வெளியே உள்ளார்கள்” எனத் தெரிவித்துள்ளார்கள். இது மிகவும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில், நேற்றைய தினம் மாணவி...

பிரபாகரன் ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன்! : கிளிநொச்சியில் பாரதிராஜா

நிகழ்காலத்தில் வாழ்ந்த ஓர் மிகப்பெரிய வீரத்தமிழன் யாழ். மண்ணில் பிறந்தான். அவன் தமிழர்களுக்கு ஓர் அடையாளத்தினை சொல்லிவிட்டுச் சென்றான் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும், இது ஓர் தனி ஈழமான பிறந்திருக்க வேண்டியதற்காக போராடிய...

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் முதலமைச்சரை நேரில் சந்தித்தார் டக்ளஸ்!

வைத்­தி­ய சி­கிச்­சைக்­காக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவா­னந்தா நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்ளார். கடந்த நான்கு தினங்­க­ளுக்கு முன்­ன­தாக சிறு சத்­தி­ர­சி­கிச்­சை­யொன்­றுக்­காக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். தொடர்ந்தும் சிகிச்­சைகள் இடம்­பெற்­று­வரும் நிலையில் புதன்­கி­ழமை யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு சென்­றி­ருந்த...

இந்தியா செல்லும் வடமாகாணசபை உறுப்பினர்கள்!

16 வடமாகாணசபை உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் பயணம்செய்யவுள்ளனர் என வடமாகாணசபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம்தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதுடில்லியில் எதிர்வரும் 8ஆம் நாள் முதல் 16ஆம் நாள் வரை நடைபெறவுள்ள கருத்தரங்கொன்றில் கலந்துகொள்வதற்காகவே குறித்த குழுவினர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நேற்று(28) வடமாகாணசபையின் 106ஆவது அமர்வு அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றபோதேமேற்கண்டவாறு தெரிவித்தார். புதுடில்லி பயணம்...

வடக்கில் படை அகற்றும் எந்த தேவையும் இப்போது கிடையாது : இராணுவத் தளபதி

வடக்கிலிருந்து உடனடியாக இராணுவத்தை அகற்றும் எந்த தேவையும் இப்போது கிடையாது என இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நேற்று (28) கண்டியில் தெரிவித்தார். எதிர்வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி இராணுவம் தனது 68ஆவது தினத்தை கொண்டாடவுள்ள நிலையில் நேற்று கண்டி தலதா மாளிகையில் பௌத்த மத ஆசீர்வாதங்களில் கலந்து கொண்ட பின்னர் ஊடகவியலாளர்களிடம்...

உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து உணவகங்களில் பரிமாறப்படும் சில உணவுகளின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. உணவு தயாரிப்பதற்கு பிரதானமாக எரிவாயுவை பயன்படுத்தப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள சங்கம், சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து உணவுகளின் விலைகள் அதிகரிப்பதை தம்மால் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது. அதன் அடிப்படையில்...

வித்தியா வழக்கு: 14 நாட்களுக்குள் மேன் முறையீடு

புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, 14 நாட்களுக்குள் மேன்முறையீடு செய்யவுள்ளதாக, தண்டிக்கப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணி மஹிந்த ஜெயசிங்க குறிப்பிட்டுள்ளார். நேற்றையதினம் தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், யாழ் மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து கருத்து வௌியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

பலத்த பாதுகாப்புடன் குற்றவாளிகள் போகம்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் 7 பேரையும் கண்டி போகம்பர சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பில் குறித்த 7 கைதிகளையும் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்துச் சென்றுள்ளனர். தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி குறித்த 7 குற்றவாளிகளும் போகம்பர சிறைச்சாலை அதிகாரிகள் பொறுப்பேற்று அழைத்துச் சென்றுள்ளனர். வித்தியா...

தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள்: சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இடைக்கால அறிக்கை தொடர்பாக நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் தமது இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட புதிய...

தனியார் காணியில் விகாரை!: சிவகரனை விசாரணைக்காக கொழும்பு வருமாறு புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு!

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றிய தலைவர் வி.எஸ். சிவகரனை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி காலை 9 மணிக்கு விசாரணைக்கு வருமாறு, கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரணைப்பிரிவின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னார் – மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில், தனியாருக்கு சொந்தமான 10 ஏக்கர் காணியை அபகரித்து,...

வித்தியா வழக்கில் எழுவருக்கு மரண தண்டனை

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன், வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன என, ட்ரயல் அட் பார் மன்று, சற்று முன்னர் தீர்ப்பளித்து, அவர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தது. மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும், 40,000 ரூபாய் தண்டப் பணமும், வித்தியாவின் குடும்பத்துக்கு 1...

சுவிஸ்குமாரை தப்பிக்க வைக்க விஜயகலா முயற்சி: நீதிபதி இளஞ்செழியன்

யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை விடயத்தில், ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்ட விதத்தை நீதிபதி இளஞ்செழியன் கடுமையாக விமர்சித்துள்ளார். இக் குற்றத்தின் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமாரை காப்பாற்றுவதற்கு விஜயகலா முயற்சித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்த நிலையில், இச் செயற்பாடு சந்தேகநபரை தப்பிக்க வைக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளதென நீதிபதி குறிப்பிட்டுள்ளார். அத்தோடு, சுவிஸ்குமாரை தப்பிக்க வைப்பதற்கு...

வித்தியா படுகொலை இறுதித் தீர்ப்பு ; 3 நீதிபதிகளும் 13 சந்தேகநபர்களும் வருகை

வித்தியா கொலையுடன் தொடர்புடைய 13 சந்தேகநபர்களும் 3 நீதிபதிகளும் யாழ். மாவட்ட நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக எமது இணையத்தள செய்தியாளர் தெரிவித்தார். புங்குடுதீவு பாட சாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியாவின் கூட் டுப் பாலியல் வல்லுறவு படுகொலை வழக்கின் தீர்ப்பானது இன்றைய தினம் வழங்கப்படவுள்ளது. யாழ்.மேல் நீதிமன்றில் அமைக்கப் பட்டுள்ள தமிழ் மொழி பேசும்...

வலிகாமத்தில் டெங்குத் தொற்றின் தாக்கம் அதிகரிப்பு

யாழ். வலிகாமம் மேற்கு, தென்மேற்கு பிரதேசங்களில், டெங்குத் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த 70 பேர் வரை, கடந்த 25 நாட்களில் டெங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். அதனால் குறித்த பிரதேசங்களில் சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர். குறித்த பிரதேசங்களில், டெங்கு நுளம்பின்...

இந்த வருடத்தின் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள்

இந்த வருடத்தின் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகும் தினங்கள், கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 2017ம் ஆண்டுக்கான, ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் ஒக்டோபர் 5ம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் டிசம்பர் 27ம் திகதியும் வௌியாகவுள்ளன. இதேவேளை, 2017ம் ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான...
Loading posts...

All posts loaded

No more posts