Ad Widget

யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் முதலமைச்சரை நேரில் சந்தித்தார் டக்ளஸ்!

வைத்­தி­ய சி­கிச்­சைக்­காக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வ­ரனை ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவா­னந்தா நேரில் சென்று பார்­வை­யிட்­டுள்ளார்.

கடந்த நான்கு தினங்­க­ளுக்கு முன்­ன­தாக சிறு சத்­தி­ர­சி­கிச்­சை­யொன்­றுக்­காக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார்.

தொடர்ந்தும் சிகிச்­சைகள் இடம்­பெற்­று­வரும் நிலையில் புதன்­கி­ழமை யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லைக்கு சென்­றி­ருந்த டக்ளஸ் எம்.பி. முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்த பிரி­வுக்குச் சென்று அவ­ரு­டைய உடல் நலம் குறித்து விசா­ரித்­துள்ளார்.

டக்­களஸ் தேவா­னந்தா முத­ல­மைச்­சரை நோக்கி சென்ற போது முதல­மைச்சர் புன்ன­கை­யுடன் பெரிய­வர்கள் எல்லாம் வரு­கின்­றார்கள் என்று கூறி­யுள்ளார். எனினும் இதன்­போது எந்­த­வி­த­மான அர­சியல் விடயங்களும் பேசப்படவில்லையென்றும், உடல் நலம் உள்ளிட்ட குசல விசாரிப்புகளே இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

Related Posts