Ad Widget

முகாமில் வாழும் 55 பேருக்கு காணிகள் வழங்கி வைப்பு!

யாழ்ப்பாணத்தில் தற்போது வரையில் முகாமில் வாழும் காணி அற்றவர்களில் 55 பேருக்கு காணிகள் வழங்கி அதற்கான உறுதியும் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

முகாமில் வாழும் மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வரும் நிலையில், இது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“அத்துடன், மேலதிகமாக 15 பேருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. அவர்களிற்கான உறுதியும் விரைவில் வழங்கப்படும். அதேநேரம், மேலும் 43 பேருக்கான காணிகள் மதிப்பீட்டில் உள்ளது. அவை கிடைக்கப் பெற்றதும் உடனடியாக உரிய பயனாளிகளிற்கு வழங்கப்படும். மேலும் 32 காணிகள் நில அளவீட்டில் உள்ளது. இவையும் அடுத்த கட்டமாக மக்களிற்கு வழங்கப்படும்.

இதுவே இந்த காணி விநியோகம். அந்த மக்கள் விரும்பும் இடத்தில் உள்ள காணி ஒரு பரப்பிற்கு 2 லட்சம் ரூபா வீதம் 2 பரப்பு கொள்வனவு செய்ய முடியும். இதேவேளை யாழ்ப்பாணத்தில் தற்போதுவரை நிலவும் வறட்சிக்கு தொடர்ந்தும் நீர் விநியோகம் இடம்பெறுகின்றது. அதேபோன்று வறட்சி நிவாரணத்தின் இரண்டாம் கட்ட விநியோகம் இடம்பெறுகின்றது. அவ்வாறு இடம்பெறும் நிவாரண விநியோகத்தில் மக்கள் தரம், நிறை என்பனவற்றை பரீட்சித்து கொள்வனவு செய்ய முடியும்’ என கூறினார்.

Related Posts