முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 7 பேருக்கு 56 வருடங்கள் சிறை!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் ஏழ்வருக்கு தலா 56 வருட கடுங்காவல் தண்டனை விதித்து அனுராதபுரம் சிறப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வில்பத்து தேசிய சரணாலயத்திற்குள் கிளைமோர் குண்டை வெடிக்கச் செய்து, மருத்துவர் உட்பட ஏழ்வரை கொலை செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டவர்களுக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டிக்கப்பட்டவர்கள் மன்னார், சாவகச்சேரி, வவுனியா,...

மருத்துவக் கல்விக்கான ஆகக்குறைந்த கல்வித்தகைமை

மருத்துவபீட கற்கை நெறியை தொடர்வதற்கு ஆகக்குறைந்த தகைமைகளை உள்ளடக்கி மருத்துவ சபை சட்டமூலம் ஒன்றை தயாரித்துள்ளது. கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையில் உயிரியல், இரசாயனவியல் ,பௌதீகவியல் ஆகிய பாடங்களில் ஆகக்குறைந்தது இரண்டு திறமை சித்தியும் சாதாரண சித்தியொன்றும் ஒரே முறையில் பெற்றிருக்கவேண்டும் என்று அரசாங்கம் தீரமானித்துள்ளது. இத்தரத்தினை வெளியிடுவது தொடர்பில் இலங்கை மருத்துவ சபை,...
Ad Widget

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலம் : இலங்கை ஏற்றுக் கொள்ளாது

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பின்படி இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை இலங்கை ஏற்றுகொள்ளாது. சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இவ்வாறு குறிப்பிட்டார். இஸ்ரேலின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டுள்ள ஜெருசலத்திற்கு நாங்கள் போகமாட்டோம். எமது இலங்கைக்கான தூதரகம் ரெல் அவி நகரத்தில் மாத்திரமே அமைந்து...

புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர்

புகையிரத பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை கைவிட்டுள்ளனர். அமைச்சரவை குழுவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. புகையிரத பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதிமொழி வழங்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழு ரயில் பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

ஜனாதிபதியின் கோரிக்கை நிராகரிப்பு! : காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடிதம்

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த பணிப்புரையை, வவுனியா காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரித்துள்ளனர். வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சோமரத்தின விதான பத்திரணவை இன்று (புதன்கிழமை) சந்தித்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், ஜனாதிபதியின் மேற்படி கோரிக்கையை நிராகரித்து கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட தமது...

முல்லைத்தீவில் மாணவி மீது ஆசிரியர் துஷ்பிரயோக முயற்சி!: பொலிஸில் முறைப்பாடு

முல்லைத்தீவு விஷ்வமடு பகுதியில், பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்த ஆசிரியர் ஒருவருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மேலதிக வகுப்பிற்கு கடந்த 9ஆம் திகதி சென்ற குறித்த மாணவியை, அவ்வகுப்பை நடத்தும் ஆசிரியர் வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். மாலை வேளை என்பதால்...

வடமாகாண சபையினர் முதலீடுகளை தடுப்பதிலேயே வல்லுநர்கள்: தவராசா

வடமாகாண சபை உறுப்பினர்கள், வடமாகாணத்தை நோக்கிவரும் வெளிநாட்டு முதலீடுகளை தடுப்பதிலேயே வல்லுநர்களாக செயற்பட்டு வருகின்றனர் என வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா குற்றஞ்சாட்டியுள்ளார். வட மாகாண சபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற 2018ஆம் ஆண்டிற்கான பாதீட்டு ஒதுக்கீட்டிற்கான இரண்டாவது வாசிப்பு மீதான உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடமில்லை!! தனித்து இறங்கியது வரதர் அணி!!

ஈபிஆர்எல்எவ் பத்மநாப அணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம் கிடைக்காத நிலையில் தமிழ் சமூக ஜனநாயக கட்சி என்று பெயரை மாற்றிக் கொண்ட வரதராஜப்பெருமாள் தலைமையிலான பத்மநாபா ஈபிஆர்எல்எவ் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. யாழ். மாவட்டச் செயலகத்தில் உள்ள தேர்தல் பணியகத்தில், நேற்று பிற்பகல் வடக்கு- கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்...

சுரேஸ் இல்லாமலே ஜெயிப்போம்!! : எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஈபிஆர்எல்எவ் வெளியேறியுள்ள போதிலும், உள்ளூராட்சித் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெறும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நான்கு கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து, சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அண்மையில் வெளியேறியுள்ளது. இந்தக் கட்சி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து...

இலங்கையின் வான் பரப்பில் மாற்றம்!

இலங்கையின் வான்பரப்பில் தற்காலத்தில் எரிகல் வீழ்ச்சி இடம்பெறுகிறது. இதன் உச்சக்கட்டம் இன்று(13) இரவு 9 மணி முதல் மறுநாள் அதிகாலை வரையில் தொடரும். 14ம் திகதி அதிகாலை 2 மணி முதல் 4 மணி வரையிலான காலப்பகுதியே இதனை சிறப்பாக பார்க்க உசிதமான காலம் என்று கூறப்படுகிறது. இந்த எரிகற்களின் வீழ்ச்சி, நீலம், சிவப்பு, பச்சை,...

நிலக்கண்ணி வெடிகள் அற்ற பிரதேசமாக முகமாலை

எல்.ரீ.ரீ.ஈ அமைப்பினரால் அதிகமாக நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்ட கிளிநொச்சி-முகமாலை பிரதேசம் கண்ணிவெடிகளிலிருந்து முற்றாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய குறித்த பிரதேசம் மக்கள் மீள்குடியேற்றத்திற்காக நேற்று(12) பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. முகமாலை பிரதேசத்தில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் நடவடிக்கையை சர்வதேச கண்ணிவெடிகள் அகற்றும் அமைப்பு மற்றும் இராணுவத்தின் பொறியியல் அணியினால் முன்னெடுக்கப்பட்டது. நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்பட்ட 48...

டில்லு குழுவின் தண்டனை உறுதியானது

யாழ்ப்பாணம், மடம் வீதியில் குடும்பத் தலைவர் ஒருவரை வாளால் வெட்டிய குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 8 பேருக்கு, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய தண்டணையை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று (12) உறுதி செய்தார். பொலிஸாரால் டில்லு குறூப் என அழைக்கப்பட்ட இளைஞர்கள் குழுவைச் சேர்ந்த 8 பேருக்கே, தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம்...

மூலதனச் செலவீடாக 3,843 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு : முதலமைச்சர்

2018 ஆம் ஆண்டுக்குரிய மூலதனச் செலவீடாக 3,843 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் 112ஆவது அமர்வு, கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (12) நடைபெற்றது. இதன்போது, 2018ம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றியபோதே, அவர் இவ்வாற தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்துத்...

பேரூந்தில் பயணித்த பெண்ணிடம் திருட்டு

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்த வயோதிபப் பெண் ஒருவரிடமிருந்து ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது. யாழ். கச்சேரியடியை சேர்ந்த நாகேஸ்வரன் வனிதகுமாரி (வயது – 59) என்ற பெண், யாழ்ப்பாணம் கச்சேரியிலிருந்து வீட்டிற்கு பயணித்துக் கொண்டிருந்த போது நேற்று (திங்கட்கிழமை) இத்திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பேரூந்தில் காணப்பட்ட சன நெரிசலைப் பயன்படுத்தி, இப்பெண்ணின்...

அதிகாரப்பகிர்வை பெரும்பான்மையினருக்குள் அடக்க அரசாங்கம் முயற்சி: சி.வி.விக்னேஸ்வரன்

வடக்கு மக்கள் யாவற்றிற்கும் தெற்கையே நம்பியிருக்க வேண்டும் என்றும், பெரும்பான்மையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்றும் இலங்கை மத்திய அரசு விரும்புகின்றதென வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். முதலாவது வடக்கு மாகாண சபையின் ஐந்தாவதும் இறுதியுமான வரவு செலவுத் திட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) சமர்ப்பித்த முதல்வர், தமது ஆரம்ப உரையில் இதனைத்...

யாழில் நடுவீதியில் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் கைது

நடுவீதியில் கேக் வெட்டி பிறந்தநாளினை கொண்டாட முயன்ற இளைஞர்களை கோப்பாய் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ளே வீதியொன்றில் பிறந்தநாளை நேற்று இரவு இளைஞர்கள் சிலர் கொண்டாட முயன்றுள்ளார்கள். அதன் போது தமது மோட்டார் சைக்கிள்களை வீதியின் குறுக்கே நிறுத்தி அதன் மீது பிறந்த நாள் கேக்கினை வெட்ட இளைஞர்கள் தயாராகி உள்ளனர். அந்நேரம்...

சிறுமியை கடத்திய உறவினருக்கு விளக்கமறியல்

யாழ்.புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த சிறுமியை கடத்தி சென்ற உறவினரை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் பகுதியை சேர்ந்த 13வயதுடைய சிறுமியை அவரது உறவினர் ஒருவர் சிறுமியின் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 05ஆம் திகதி தன்னுடன் அழைத்து சென்று வவுனியாவில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்துள்ளார். அந்நிலையில்...

சம்பந்தனின் வீடு முற்றுகை: தமிழரசுக் கட்சியினருக்கும் நெருக்கடி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் திருகோணமலை வீடு வேலையில்லாப் பட்டதாரிகளால் நேற்று (திங்கட்கிழமை) முற்றுகையிடப்பட்டுள்ளது. தமக்கான நியமனங்களை பெற்றுத்தருவதாக சம்பந்தனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் வாக்குறுதி வழங்கியிருந்தபோதும், கூட்டமைப்பும் அதன் தலைவரும் தம்மை ஏமாற்றிவிட்டதாக முற்றுகையில் ஈடுபட்ட பட்டதாரிகள் கூறியிருந்தனர். சம்பந்தனின் வீடு முற்றுகையிட்டதைப் போன்று தொடர்ச்சியாக தமிழரசுக் கட்சியினரின் வீடுகளை...

தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறையைக் கண்டிக்கிறது யாழ். ஊடக அமையம்

தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரின் மீது அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள யாழ். ஊடக அமையம், இந்நிலைமை தொடராமல் அரசாங்கம் பார்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளது. யாழ். ஊடக அமையம் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழர் தாயகப் பகுதிகளில் மீண்டும்...

நெடுந்தீவு கடற்பரப்பில் 27 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 27 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவுக்கு தென்கிழக்கே இவர்கள் நேற்று (திங்கட்கிழமை) இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, யாழ். கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய ஐந்து விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம்...
Loading posts...

All posts loaded

No more posts