Ad Widget

நெடுந்தீவு கடற்பரப்பில் 27 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 27 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவுக்கு தென்கிழக்கே இவர்கள் நேற்று (திங்கட்கிழமை) இரவு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, யாழ். கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீன்பிடிக்கு பயன்படுத்திய ஐந்து விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதோடு, விசாரணையின் பின்னர் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது இனிவரும் காலத்தில் கடுமையான சட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என அண்மையில் மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றில் தெரிவித்திருந்தார். மீன்பிடி படகுகளுக்கு பாரிய தொகை அபராதமாக விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts