ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்ற இலங்கைக்கான ஆதரவு தொடரும்: அமெரிக்கா உறுதி

இலங்கையில் இறுதி யுத்தத்தின் போதான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுயாதீனமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தை தொடர்ந்தும் ஆதரிக்க போவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. சிறுபான்மை தமிழ் சமூகத்தினருக்கான இந்த உறுதியை இலங்கைக்கான அமெரிக்க பதில் தூதுவர் றொபர்ட் ஹில்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ளார். மேலும்,...

யாழ் வன்முறைச் சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை: கட்டளைத் தளபதி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இராணுவம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த வன்முறைச் சம்பவங்களுக்கும், இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக பலரும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர். இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே யாழ் மாவட்ட இராணுவ...
Ad Widget

கிராம அலுவலர்கள் பணிப்புறக்கணிப்பு!!

கிராம அலுவலர் அலுவலகத்தை தாக்கியதுடன் அவரையும் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதை கண்டித்தும், தமது பாதுகாப்பினை உறுதிப் படுத்துமாறு கோரியும் நல்லூர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட கிராம அலுவலர்கள் தமது அலுவலகங்களுக்குச் செல்லாது இன்று பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டனர். தமது பாதுகாப்பானது உறுதிப்படுத்தப்படும் வரையில் பிரதேச செயலகத்தில் இருந்தே கடமைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். நல்லூர் பிரதேச...

வடமராட்சியில் மீனவ படகு தீக்கிரை: பெரும்பான்மை இனத்தவரை எதிர்த்ததன் எதிரொலியா?

வடமராட்சி கிழக்கு தாளையடி பிரதேசத்தில் மீனவ படகொன்றும் அதன் வெளியிணைப்பு இயந்திரமும் இனந்தெரியாதோரால் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளது. தாளையடி பகுதியில் கரையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகொன்றே இவ்வாறு நேற்று (திங்கட்கிழமை) தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் தென்னிலங்கை மீனவர்கள் அத்துமீறி கடலட்டை பிடித்து வருகின்ற நிலையில் அதற்கு உள்ளூர் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தென்னிலங்கை...

தமிழர்களின் வாழ்வாதாரத்தை முடக்க இராணுவம் முயற்சி: கேப்பாபுலவு மக்கள்

தமது பூர்வீகக் காணிகளை ஆக்கிரமித்துள்ள இராணவத்தினர் தற்போது தமது வாழ்வாதாராத்தையும் முடக்க முயற்சிப்பதாக முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக சிறிய எரிபொருள் விற்பனை நிலையத்தினை நடத்திவந்த ஒருவரின் கடையை அப்புறப்படுத்துமாறு முள்ளியவளை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த எரிபொருள் கடையினால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காணப்படுவதாகவும்,...

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சரவை உபகுழு ஜனாதிபதியால் நியமிப்பு!! முதலமைச்சர் புறக்கணிப்பு!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தியை விரைபடுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் அமைச்சரவை உபகுழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி சிறப்புச் செயணியில் ஆராயப்படும் விடயங்களை அமைச்சரவைக்குத் தெரிய்படுத்தி அவற்றை உடனே நடைமுறைப்படுத்துவதற்காகவே இந்த அமைச்சரவை உப குழு நியமிக்கப்படவுள்ளது. இது தொடர்பான முடிவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடந்த...

வன்முறைக்கும்பலின் மோட்டார் சைக்கிள் மீட்பு!! பொலிஸார் தீவிர விசாரணையில்!!!

இலக்கத் தகடுகள் துணியால் மறைத்துக் கட்டப்பட்டு வீதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் நேற்று (30) மாலை இந்த மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன. கொக்குவில் ஞான பண்டிதா பாடசாலைக்கு அண்மையில் வீடொன்றுக்குள் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல், அங்கு ஹஏஸ் வாகனத்துக்கு தீவைத்துடன்,...

பட்டப்பகலில் வாள்வெட்டுக்குழு அட்டகாசம் – அலறியடித்து ஓடிய குடும்பத்தினர்!!

கொக்குவிலில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஹஏஸ் வான் ஒன்றுக்கு தீவைத்ததுடன், வீட்டிலுள்ள பொருள்களையும் அடித்துச் சேதப்படுத்தித் தப்பிச் சென்றது. கொக்குவில் ஞானபண்டிதா பாடசாலைக்கு அண்மையில் உள்ள வீடொன்றிலேயே நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வாள்களுடன் வந்த எட்டு பேர் கொண்ட கும்பலே பட்டப்பகலில் இந்தத் துணிகரச் செயலலில்...

அரச கரும மொழிகள் அமைச்சின் அலுவலகம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு!

தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் வட.மாகாண அலுவலகம் கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி 155ம் கட்டைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த அமைச்சின் அலுவலகத்தினை நேற்று (திங்கட்கிழமை) அமைச்சர் மனோ கணேசன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள உள்ளிட்டோர் இணைந்து...

கருணாநிதி விரைவில் குணமடைய மைத்திரிபால சிறிசேன பிரார்த்தனை!

கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிய தமிழகம் சென்றுள்ள இ.தொ.காவின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்த்து கடிதத்தை திராவிட முன்னேற்ற கழக செயல் தலைவர் ஸ்டாலினிடம் கையளித்துள்ளார். தமிழகத்தின் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கலைஞர் கருணாநிதியை தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இந்த...

அராலி குள்ள மனிதர்களுக்கும், பாதுகாப்பு தரப்பினருக்கும் தொடர்பு: மணிவண்ணன்

யாழ். அராலி குள்ள மனிதர்கள் சம்பவத்திற்கும், இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினருக்கும் தொடர்புள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ் மாநகரசபை உறுப்பினருமான வி. மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்த சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்த அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். யாழில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அராலி குள்ள...

தேர்தலுக்கு அஞ்சி அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் மறுக்கிறது!!

அரசியல் கைதிகளின் விடுதலை எதிர்வரும் தேர்தலில் தமக்கு பாதகமான விளைவை ஏற்படுத்தும் என அரசாங்கம் அஞ்சுவதாக யாழ். மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை மங்களராஜா தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து...

தமிழரின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் முயற்சி முறியடிப்பு!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் கோட்டைக் கேணிக்கு அப்பால் உள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்கும் பெரும்பான்மை இனத்தவரின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சிவந்தா முறிப்புக்குளம் பகுதி மற்றும் அதனை அண்மித்த வயல் நிலங்களையே பெரும்பான்மையினர் கையகப்படுத்த முயற்சித்துள்ளனர். இது தொடர்பாக கொக்குத்தொடுவாய் விவசாய அமைப்பினர், உடனடியாக வட மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முல்லைத்தீவு...

வவுனியாவில் கோரவிபத்து- 5வயதுச் சிறுவன் உயிரிழப்பு!! 8 மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயம்!!

வவுனியா புளியங்குளம் புதூர் சந்திபகுதியில் இன்று மதியம் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 8 ஆரம்ப பிரிவு மாணவர்கள் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். பாடசாலை முடிந்ததும் ஆரம்பப்பிரிவு மாணவர்களை ஏற்றிக் கொண்டு முச்சக்கரவண்டி புதூர் சந்தி நோக்கிச் சென்றுள்ளது. அவ்விடத்தில் ஒரு மாணவரை இறக்கியதுடன், முச்சக்கர வண்டி திரும்ப முற்பட்டபோது கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம்...

கிராம அலுவலகருக்கு மிரட்டல்!!: அலுவலகத்துக்குள் புகுந்து கும்பல் அட்டூழியம்!!

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றி தப்பிச்சென்றது. வண்ணார்பண்ணை கிழக்கு ஜே 100 கிராம அலுவலகரின் அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.20 மணியளவில் இந்த அடாவடிச் சம்பவம் இடம்பெற்றது. அலுவலகத்துக்குள்...

தென்னிந்தியாவிற்கும் பலாலிக்கும் இடையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை!

தென்னிந்தியாவுக்கும், பலாலிக்கும் இடையில் குறைந்தக் கட்டணத்திலான விமான சேவை மிகவிரைவில் ஆரம்பிக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை புனரமைப்பு செய்து தென்னிந்தியாவுக்கான விமான சேவையை ஆரம்பிக்க வேண்டுமென தமிழர் தரப்புக்களால் அண்மையில், அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்த நிலையில் ஜோன் அமரதுங்க, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு கூறியுள்ளார். பலாலி விமான நிலைய அபிவிருத்தி...

தரம் ஒன்று மாணவர் அனுமதி: நேர்முகத் தேர்வு ஓகஸ்டில்

2019ஆண்டு பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. “சுற்றறிக்கைக்கு அமைவாக நேர்முக பரீட்சைக்கான குழு நியமிப்பதற்கான ஆலோசனைகள் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்பப் படிவங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செப்டெம்பர் 15ஆம் திகதியளவில் முதற்கட்ட...

வடமராட்சியில் மீண்டும் படகுக்குத் தீ வைத்த விசமிகள்!!

வடமராட்சி கிழக்கு தாளையடியில் படகு ஒன்றுக்கு இன்று அதிகாலை விசமிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. கடல் தொழிலைத் தனது ஜீவனோபாயமாக கொண்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் படகே எரியூட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. அண்மையில் கட்டைக்காடு கடற்கரையில் படகும் வெளியிணைப்பு இயந்திரமும் எரியூட்டப்பட்டிருந்த நிலையில் இது இரண்டாவது சம்பவமாக இடம்பெற்றுள்ளது. தென்னிலங்கை...

சமஷ்டி முறைக்கு தமிழ் அரசியல் தலைவர்களே முதலில் எதிர்ப்பு தெரிவித்தனர்: முதலமைச்சர்

சமஷ்டி முறைக்கு தமிழ் அரசியல் தலைவர்களே முதலில் எதிர்ப்பு தெரிவித்திருந்ததாக வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு சட்டக்கல்லூரியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘எமது அறிவின்மை பிழையான சரித்திரத்தை உலகத்திற்கு எடுத்துக் காட்ட...

இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை: செ.மயூரன்

இலங்கையில் வடமாகாணத்திலேயே அதிகளவான போதைப்பொருள் பாவனை காணப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் இந்த விளையாட்டுக்களில்...
Loading posts...

All posts loaded

No more posts