Ad Widget

யாழ் வன்முறைச் சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பில்லை: கட்டளைத் தளபதி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என இராணுவம் அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த வன்முறைச் சம்பவங்களுக்கும், இராணுவத்திற்கும் தொடர்புள்ளதாக பலரும் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, இந்த குற்றச்சாட்டுக்களை முற்றாக மறுத்துள்ளார்.

குறித்த வன்முறைகளுக்கும் இராணுவத்தினருக்கும் எவ்வித தொடர்புகளும் இல்லை.

எனினும், இராணுவத்தினர் வன்முறைகளில் ஈடுபடுகின்றமை உறுதிசெய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பில் பாரபட்சம் இன்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related Posts