அரசாங்கத்தின் செயற்பாடு மனித நீதிக்கு எதிரானது: அருட்தந்தை சக்திவேல்

தடுப்பிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 100இற்கு 99 வீதமானவர்கள் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டே கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் இது மனித நீதிக்கு எதிரானதென்றும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்தார். அரசியல் கைதிகளின் விடுதலைக்காக யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துள்ள நடைபவணி இன்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தை சென்றடைந்தது. குறித்த...

அரசாங்கத்தின் நல்லெண்ணத்தை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்: டக்ளஸ்

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அரசாங்கம் தமது நல்லெண்ணத்தை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடை பவணி, இன்று (சனிக்கிழமை) அநுராதபுரத்தை சென்றடைந்துள்ளது. இந்நிலையில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம்...
Ad Widget

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய தமிழ் தலைமைகள் வலியுறுத்த வேண்டும் – முதலமைச்சர்

உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யத்தவறின் வரவு செலவு திட்டத்தை நிராகரிப்போம் என்ற அழுத்தத்தினை தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலையை கருத்திற்கொண்டு, உண்ணாவிரதத்தினை கைவிடுமாறும் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். அனுராதபுரம் சிறையில் கடந்த 29 நாட்களாக தமிழ்...

கத்தி, கொட்­டன்­க­ளு­டன் வீடுகளுக்குள் புகுந்த கும்பல் அட்டூழியம்!!

கத்தி, கொட்­டன்­க­ளு­டன் அதி­கா­லை­யில் வீடு­க­ளுக் குள் புகுந்த கும்­பல் அட்­டூ­ழி­யத்­தில் ஈடு­பட்­டது. ஐந்து வீடு­க­ளில் இருந்த பொருள்­கள், வேலி­கள், மின்­கு­மிழ் கள் தாக்­கிச் சேதப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. இந்­தச் சம்­பம் நேற்று அதி­காலை யாழ்ப்­பா­ணம் ஏழா­லை­யில் நடந்­துள்­ளது. கொக்­கு­வில், சுன்­னா­கம், இணு­வில், மானிப்­பாய் பகு­தி­க­ளில் கடந்த வாரம் இடம்­பெற்ற தொடர்­வன்­மு­றைச் சம்­ப­வங்­க­ளை­ய­டுத்து அந்­தப் பகு­தி­க­ளில் 24 மணி­நே­ரம் சுற்­றுக்­கா­வல்...

தெல்லிப்பழையில் மக்கள் பொலிஸார் இடையே முறுகல்!

தெல்­லிப்­ப­ழைச் சந்­தி­யி­லி­ருந்து அள­வெட்­டிப் பக்­கம் செல்­லும் வீதி­யில் நேற்று இரவு இடம்­பெற்ற விபத்­தை­ய­டுத்து, பொலி­ஸா­ருக்­கும் பொது­மக்­க­ளுக்கும் இடையே முறு­கல் நிலமை ஏற்­பட்­டது. சுமார் ஒன்­றரை மணி நேரம் நீடித்த முறுகல்நீடித்த முறு­கல் நிலமை, பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­கா­ரி­யின் உறு­தி­மொ­ழியை அடுத்து முடி­வுக்கு வந்­தது. வல்லை – அராலி வீதி­யில் தெல்­லிப்­ப­ழைச் சந்­தி­யி­லி­ருந்து அள­வெட்­டிப் பக்­க­மாக செல்­லுத்...

பெண்­ணின் கழுத்­தில் கத்­தியை வைத்து அச்சுறுத்தி நகை பறிப்பு!!

வீட்­டில் தனித்­தி­ருந்த பெண்­ணின் கழுத்­தில் கத்­தியை வைத்து அச்­சு­றுத்தி அவர் அணிந்­தி­ருந்த இரண்டு பவுண் தங்­கச் சங்­கிலி அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தச் சம்­ப­வம் மானிப்­பா­யில் நேற்­று­முன்­தி­னம் காலை நடந்­துள்­ளது. இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் இரு சந்­தே­க­ந­பர்­கள் நேற்று அதி­காலை கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். உந்­து­ரு­ளி­யில் வந்த இரு­வர் வீட்­டில் தனித்­தி­ருந்த பெண்­ணின் கழுத் தில் கத்­தியை வைத்து அச்­சு­றுத்தி...

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் தீர்மானம் இல்லை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த, ஜனாதிபதியுடனான பேச்சுவார்ததையில் தீர்மானம் எதுவும், எட்டப்பட வில்லை என, தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர், சம்பந்தர் மற்றும் சுமந்திரன் ஆகியோர் நேற்று (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியை, நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்தநிலையில் குறித்த இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே கூட்டமைப்பின் பேச்சாளர்...

அரசியல் கைதிகள் தொடர்பான கூட்டம்

யாழ்ப்பாண சிவில் சமூகமhனது நேற்று காலை 11 மணிக்கு வடமாகாண முதைலமச்சரின் மாநாட்டு மண்டபத்தில் கூடி பல முக்கியமான விடயங்கள் தொடர்பில் பேசியது. முக்கியமாக சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகள் 29 நாட்களாக உணவு தவிர்த்து தொடர்ந்து உண்ணாவிரதம் இருப்பதால் அவர்களுடைய நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் உடனே நடவடிக்கை எடுத்து அவர்களை வாழவைப்பதற்கு...

யாழில் தமிழ்நாட்டுக் குழு தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இலங்கைக்கு விஐயம் செய்துள்ள இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் கொண்ட குழுவினர் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர். கலாசார ரீதியான பயணமாக விஜயம் வெய்த அவர்கள் அங்கு பலவேறு...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வவுனியாவில் அலையென திரண்ட மக்கள்!

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமெனக்கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களால் 4 ஆவது நாளாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடைபயணம் இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா நகரை சென்றடைந்தது. இதன்போது வவுனியா மக்கள் தமிழ் அரசியல் கைதிகளுக்காக தமது ஆதரவையும் தெரிவித்து பெருந்திரளாக வவுனியா நகரில் கூடினர். ஓமந்தையிலிருந்து இன்று காலை ஆரம்பித்த நான்காவது நாள் பயணமானது வவுனியா நகரின்...

வட்டுக்கோட்டைப் பொலிஸாரின் சோதனையில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!!

சுமார் ஒரு இலட்சம் ரூபா போலி நாணயத்தாள்களை உடமையில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் பொன்னாலைப் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டனர் என்ற வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர். “காரைநகர் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு போலி நாணயத்தாள்களை இருவர் கடத்திச் செல்கின்றனர் என்ற தகவல் கடற்படையினர் ஊடாக வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் நேற்று வியாழக்கிழமை முற்பகல் பொன்னாலைப்...

அச்சுவேலியில் மனித எலும்புக் கூடுகள் மீட்பு

யாழ்ப்பாணம், அச்சுவேலி பகுதியில் மின்சார கம்பம் நாட்டுவதற்காக நிலத்தை தோண்டிய போது மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அச்சுவேலி பத்தமேனி சூசையப்பர் வீதியில் நேற்று வியாழக்கிழமை காலை இலங்கை மின்சார சபையினர் மின் கம்பத்தை நாட்டுவதற்கு நிலத்தை தோண்டியுள்ளனர். அதன்போது, கை, கால், மண்டையோடு உள்ளிட்ட மனித எலும்புகள் கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன. எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை...

அரசியல் கைதிகள் விவகாரம்: அத்துகோரல கூறிய கருத்து தவறு என்கின்றார் முதல்வர்!

ஒப்புதல் வாக்குமூலத்தை மட்டும் வைத்து தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்க முடியாது என தெரிவித்த வடக்கு முதலமைச்சர், அமைச்சர் தலதா அத்துகோரல கூறிய கருத்து தவறு என சுட்டிக்காட்டியிருந்தார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அருட்தந்தை எம். சக்திவேல் உள்ளிட்ட குழுவினரை கைதடியிலுள்ள வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன் பின்னர் கருத்து...

அரசியல் கைதிகள் விவகாரம் – கூட்டமைப்பின் கோரிக்கைக்கு பிரதமர் பதில்!

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைச் செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இந்த கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பதில் வழங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, “நான் அறிந்தவகையில் 2001 ஆம் ஆண்டு,...

தமிழரசுக்கட்சி தமது நாடாளுமன்ற சிறப்புரிமையை பறிப்பதாக – சிவசக்தி ஆனந்தன் குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் தனது சிறப்புரிமையை பறிக்கும் வகையில் இலங்கை தமிழரசுக்கட்சி செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். எனினும், சிவசக்தி ஆனந்தனின், இந்த குற்றச்சாட்டுக்கு கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இரு...

அரசியல் கைதிகளின் விடுதலையும், உயிர்களும் தமிழ் மக்கள் கைகளிலே – அருட்தந்தை எம். சக்திவேல்

அரசியல் கைதிகளின் விடுதலையும், அவர்களுடைய உயிர்களும் இன்று தமிழ் மக்களின் கைகளில் இருக்கின்றது என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் ஏற்பாட்டாளர் அருட்தந்தை எம். சக்திவேல் கூறியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

வெற்றிலை பாக்கு கடையில் போலி நாணயத்தாள்கள்

யாழ் நகரில் வெற்றிலை பாக்கு விற்பனை செய்யும் கடை ஒன்றில் இருந்து ஐயாயிரம் ரூபா போலித்தாள்கள் 2 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண விசேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ். உப பொலிஸ் பரிசோதகர் அனில் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்று இவ்வாறு குறித்த நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளனர். குறித்த கடையில் போலித்தாள்கள் கைமாற்றம் செய்யப்படுவதாக வாடிக்கையாளர்கள் பொலிஸாருக்கு...

பழுதடைந்த பேருந்தை ஒட்டிச்சென்றதால் விபத்து! பாடசாலை மாணவியும் தந்தையும் படுகாயம்!!

காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து, அதன் முன்புறமாக வீதியில் பயணித்துக்கொண்டிருந்த உந்துருளியை மோதியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவியையும் அவரைப் பாடசாலைக்கு ஏற்றிச் சென்ற தந்தையாரும் காயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் நகரில் முட்டாஸ் சந்திக்கு...

யாழில் வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை!

தீபாவளி பருவ காலத்தில் யாழ். சாவகச்சேரி பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வியாபார நோக்குடன் வெளிமாவட்டங்களிலிருந்து வரும் வியாபாரிகளால் உள்ளூர் வியாபாரிகளுக்கு நட்டம் ஏற்படுவதாக சாவகச்சேரி வணிகர் மன்றம் குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், வெளிமாவட்ட வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாதென நகரசபையிடம் வணிகர் கழகம் கோரிக்கை விடுத்தது. குறித்த கோரிக்கை...

கூட்டமைப்பு வாக்குறுதி வழங்கினால் போராட்டத்தை கைவிடத் தயார்! – அரசியல் கைதிகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை, எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய விடயமாக முன்வைக்குமானால் போராட்டத்தை கைவிட தயாரென தமிழ் அரசியல் கைதிகள் குறிப்பிட்டுள்ளனர். அரசாங்கத்திடம் இவ்விடயத்தை இப்போதே தெரிவித்து, அது தொடர்பில் தமக்கு வாக்குறுதி வழங்கவேண்டுமென அவர்கள் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....
Loading posts...

All posts loaded

No more posts