வீட்டில் தனித்திருந்த பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி அவர் அணிந்திருந்த இரண்டு பவுண் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மானிப்பாயில் நேற்றுமுன்தினம் காலை நடந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்கள் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
உந்துருளியில் வந்த இருவர் வீட்டில் தனித்திருந்த பெண்ணின் கழுத் தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி தங்கச் சங்கிலி, தோடுகளை அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது தொடர்பாகப் பெண் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
பெண் குறிப்பிட்ட அங்க அடையாளங்களுக்கு ஏற்ப பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். விசாரணைகளை அடுத்து கைதடியில் வைத்து மானிப்பாய் பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 24 வயதுடையவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் மல்லாகம் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டனர். அவர்களை 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் ஒரு மாதத்துக்கு முன்னரே சிறையில் இருந்து வெளிவந்தவர்கள் என்று மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.