போலி சுகாதாரப் பரிசோதகரை எச்சரிக்கை செய்து விடுத்தார் நீதிவான்!

சட்டத்தை எவருமே தவறாகக் கையில் எடுக்க முடியாது. சுகாதாரச் சீர்கேடுகள் இறம்பெறுகின்றன என்றால் அவற்றைத் தடுக்க வழிமுறைகள் உள்ளன. அவற்றை உரிமுறையில் பின்பற்றவேண்டும்” என்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் அந்தோனி சாமி பீற்றர் போல் தெரிவித்தார். யாழ்ப்பாணம் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட வியாபார நிலையங்களில் விற்பனை செய்யப்படும் காலாவதியான உணவுப் பண்டங்களை அகற்றல் மற்றும் சுகாதாரக் கேடான...

யாழில் பிரதமர் ரணிலின் செயலாளரின் அலைபேசி திருட்டு!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த அவரது செயலாளர்களில் ஒருவரின் அலைபேசி திருட்டுப் போயுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் புதிய விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத் திறப்பு நிகழ்வில் பங்கேற்ற போதே அவரின் கைப்பையிலிருந்த அலைபேசி திருடப்பட்டுள்ளது. 55 ஆயிரம் ரூபா பெறுமதியான அதிதிறன் அலைபேசி...
Ad Widget

கிளி. வைத்தியசாலைக்கு புதிய கட்டடம் – பிரதமர் அடிக்கல் நாட்டிவைப்பு

கிளிநொச்சிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு வடக்கிற்கு சென்றுள்ள பிரதமர், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 09.30 மணிக்கு கிளிநொச்சிக்கு விஜயம் செய்திருந்தார். கிளிநொச்சி விஜயத்தின் முதல் கட்டமாக பொது வைத்தியசாலையின் விபத்து சிகிச்சை பிரிவு கட்டடத்திற்கு...

கிணற்றிலிருந்து சிறுவனின் சடலம் கண்டெடுப்பு!

வவுனியா – நெடுங்கேணி பகுதியில் கிணற்றிலிருந்து சிறுவன் ஒருவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றுள்ளது. குறித்த சிறுவனின் பெற்றோர் வெளியில் சென்ற நிலையில், தனது சகோதரனுடன் கிணற்றிற்கு அண்மையில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், தவறுதலாக உள்ளே விழுந்திருக்கலாம் என நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் முதிரம்பிட்டி பகுதியைச்...

10 வீதி போக்குவரத்து மீறல்களுக்கு ரூபா 25,000 தண்டம்!

மதுபோதையில் வாகனம் செலுத்துதல், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வாகனம் செலுத்துதல் ரயில் பாதுகாப்புக் கடவையில் சமிஞ்சை விளக்குகள் எரியும் போது வாகனத்தை ஓட்டிச்செல்லல் உள்ளிட்ட 10 பெரியளவிலான போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிப்பதற்கான சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இந்தச் சட்டவரைவு விரைவில் நாடாளுமன்றுக்கு முன்வைக்கப்படவுள்ளது. வீதிப் போக்குவரத்தில்...

பொது இடங்களில் வெடி கொளுத்துவது தவறாகும் – யாழ் நீதிமன்ற நீதிவான்

பொது இடத்தில், வீதிகளில் வெடி கொளுத்துவது தவறாகும். இறுதி ஊர்வலமாக இருந்தாலும் சரி வெடிகொளுத்தும் போது பொதுநலனைக் கருத்தில் எடுக்கவேண்டும். வீதியில் பயணிப்பவர்களுக்கு இடையூறாக வெடிகொளுத்துவதை ஏற்க முடியாது என யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இருபாலைச் சந்திப்பகுதியில் பிரதான வீதியூடாகப் பயணித்த வேன் ஒன்றின் கண்ணாடிப் பகுதியில் வெடி வந்து வீழ்ந்ததால்,...

2019ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பம்

2019ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி.பூஜித அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் கூறியுள்ளார். பாடசாலை விண்ணப்பதாரிகள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னரும், தனியார் பரீட்சார்த்திகள் மார்ச் மாதம் முதலாம் திகதிக்கு முன்னரும் விண்ணப்பங்களை அனுப்பிவைக்க வேண்டும்...

யாழில் 15 ஆயிரம் வீடுகளை உடனடி வேலைத் திட்டமாக நிர்மாணிக்க பிரதமர் உத்தரவு

யாழ்ப்பாணத்தில் முதற்கட்டமாக 15 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு உடனடி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்தின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். வடக்கை பிரதிநிதித்தவப்படுத்தும் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர்கள், அரச...

காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக வலயமாக்க நடவடிக்கை

காங்கேசன்துறை துறைமுகத்தைச் சூழ பொருளாதார வலயமொன்று அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. குறித்த துறைமுகப் பகுதியை பொருளாதார வலயமாக்கி வர்த்தகத் துறைமுகமாக அபிவிருத்திச் செய்யப்படுமென பிரதம அமைச்சர், ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். யாழிற்கு விஜயம் செய்த அவர் (வியாழக்கிழமை) காங்கேசன்துறை துறைமுகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார். இவ்விஜயத்தின் போது 45.27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள்...

நுண்கடனால் அவதியுறும் யாழ்.பெண்களுக்கு தீர்வு: மங்கள

யாழ்ப்பாணத்தில் நுண்கடனால் அவதியுறும் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் புதிய நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “நுண்கடன் திட்டத்தினால் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியும். ஆனால்...

யாழிலிருந்து பயணித்த பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல்

யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் பேருந்து மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று (வியாழக்கிழமை) இரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், பேருந்தின் முன் கண்ணாடி சேதமடைந்துள்ளது. செம்மணி வீதியில் வைத்தே இந்த கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போட்டி காரணமாக இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் என குறித்த பேருந்தின் சாரதி தெரிவித்துள்ளனர். இந்த...

செம்மணியில் நவீன வசதிகளுடன் கூடிய நகரத்தை அமைக்க பிரதமர் அங்கீகாரம்

யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அங்கீகாரம் வழங்கியுள்ளதாக யாழ். மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (வியாழக்கிழமை) வடக்கிற்கு வந்த பிரதமர், யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி முன்னேற்றங்கள் தொடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டார். இதன்போது...

வடக்கில் வாகன வரிப்பத்திரத்தைப் பெற தன்னியக்க இயந்திரம்!

வடக்கில் 3 இடங்களில் வாகன வரிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய தன்னியக்க இயந்திரங்கள் பொருத்தப்படவுள்ளன என்று மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாகன வரிப் பத்திரங்களைப் பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அதைப்பெற்றுக்கொள்வதற்காக அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது. அதை இலகுபடுத்தும் வகையில் தன்னியக்க இயந்திரம் மூலம் வாகன வரிப்பத்திரங்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்...

வெளிநாட்டிலிருந்து வந்தவர் மீது வாள்வெட்டு

வரணியில் கோயில் பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் தாக்குதலை நடாத்தியுள்ளது. குறித்த தாக்குதல் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஏவலில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த தாக்குதல் சம்பவத்தில் வேதராணியம் ஜெகதீசன் (வயது 48) என்பவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது , தாக்குதலுக்கு உள்ளான நபர்...

நீதிமன்ற அவமதிப்பு மனு மீதான விக்னேஸ்வரனின் ஆட்சேபனை நிராகரிப்பு!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பில் வட மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவரினால் முன்வைக்கப்பட்ட அடிப்படை ஆட்சேபனையை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டது. பா. டெனிஸ்வரனை மாகாண அமைச்சுப்பதவியில் இருந்து நீக்குவது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளையை நடைமுறைப்படுத்தாது முதலமைச்சர் க.வி....

காணாமல் போன காதல்: காதலர் தினத்தில் நடக்கும் வித்தியாசமான நிகழ்வு!

நாளை (14) உலகெங்கும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை நினைவுகூரும் நிகழ்வொன்றை கொழும்பு பல்கலைகழக சட்டபீட மாணவர்களும், சில பொது அமைப்புக்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. காணாமல் போன காதல் (Missing Lovers Day) என்ற பெயரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக வடக்கு கிழக்கிலுள்ள காணாமல்...

வரணி கொள்ளை: தாக்குதலுக்குள்ளான நபர் வழங்கிய வாக்குமூலத்தின் படி நால்வர் தேடப்படுகின்றனர்!!

“கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரணியில் திருட்டுக் குற்றச்சாட்டில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட குடும்பத்தலைவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு பேர் தேடப்படுகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், தாக்குதலுக்குள்ளாகிய நபர் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை நிறைவடைந்ததும் அவருக்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்களால் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும்...

யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகைக்கு எதிராக முறைப்பாடு!

யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளியான யாழ்.மேல் நீதிமன்றம் தொடர்பிலான செய்தி தொடர்பில் இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளதாக அறிய முடிகிறது. யாழ்.மேல் நீதிமன்றில் உத்தியோகஸ்தர்கள் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மூன்று பெண் உத்தியோகஸ்தர்களை மூன்று நாட்களாக அலுவலக நேரத்தில் அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதாக கடந்த...

தலைக்கவசம் அணியாத பாடசாலை மாணவர்களுக்கு தண்டம்!

தலைக்கவசம் அணியாது பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற 25 பேருக்கு சாவகச்சேரி காவற்துறையினர் தண்டம் விதித்துள்ளனர். யாழில் பெரும்பால இடங்களில் தலைக்கவசம் அணிவிக்காது பாடசாலை மாணவர்களை மோட்டார் சைக்கிளில் பலர் ஏற்றி சென்று வரும் நிலையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி காவற் துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொறுப்பதிகாரியின் உத்தரவின் கீழ் போக்குவரத்து காவற்...

வடக்கில் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வு வேண்டும் – ஜனாதிபதி பணிப்பு

வடக்கு மக்களின் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார். வட மாகாணத்திற்காக முன்மொழியப்பட்டுள்ள நீர் வழங்கல் செயற்திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு பற்றிய கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது. இதன் போதே ஜனாதிபதி இவற்றை கூறினார்,...
Loading posts...

All posts loaded

No more posts