Ad Widget

10 வீதி போக்குவரத்து மீறல்களுக்கு ரூபா 25,000 தண்டம்!

மதுபோதையில் வாகனம் செலுத்துதல், காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தி வாகனம் செலுத்துதல் ரயில் பாதுகாப்புக் கடவையில் சமிஞ்சை விளக்குகள் எரியும் போது வாகனத்தை ஓட்டிச்செல்லல் உள்ளிட்ட 10 பெரியளவிலான போக்குவரத்து விதி மீறல்களுக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதிப்பதற்கான சட்டவரைவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இந்தச் சட்டவரைவு விரைவில் நாடாளுமன்றுக்கு முன்வைக்கப்படவுள்ளது.

வீதிப் போக்குவரத்தில் தற்போது விபத்துக்கள் அதிகரித்து வருவதால் 10 பெரியளவிலான போக்குவரத்து விதி மீறல்களுக்கான தண்டப்பணத்தை 25 ஆயிரம் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவையால் குழு அமைக்கப்பட்டது.

போக்குவரத்து அமைச்சின் செயலாளர், நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் போக்குவரத்துக்குத் திணைக்கள ஆணையாளர் மற்றும் பிரதி சொலிஸ்ரார் ஜெனரல் ஆகியோர் கொண்ட குழுவே ஆராய்ந்தது.

அந்தக் குழுவின் பரிந்துரைக்கு அமைவாக தயாரிக்கப்பட்ட மோட்டார் போக்குவரத்து சட்டத் திருத்த வரைவை போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அமைச்சரவைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை முன்வைத்தார். அதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தச் சட்டவரைவு விரைவில் நாடாளுமன்றுக்கு முன்வைக்கப்படவுள்ளது. சட்ட வரைவு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால், சட்டம் நடைமுறைக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts