பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன்!! – சுமந்திரன்

“நான் பதவி விலகுவதா இல்லையா என்பதை நானே தீர்மானிப்பேன். அதனை வேறு யாரும் தீர்மானிக்க முடியாது. ஆனாலும் அரசியலமைப்பு நிறைவேறாவிட்டால் பதவி விலகுவேன் என்ற நிலைப்பாட்டிலேயே இன்றைக்கும் நான் இருக்கின்றேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பின் மீது கூட்டமைப்பு சார்ந்தவர்களும் ஏனையவர்களும் முன்வைத்து வருகின்ற விமர்சனங்கள் மற்றும்...

சஜித்தின் தோல்விக்கு தென்னிலங்கை இனத்துவேச பிரசாரமே காரணம் – சுமந்திரன்

சஜித்தின் தோல்விக்கு தென்னிலங்கை இனத்துவேச பிரசாரமே காரணமாக அமைந்தது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சஜித்தினுடைய தோல்விக்கு காரணம் நாங்கள் எடுத்த நிலைப்பாடு அல்ல. உண்மையில் சஜித்தின் தோல்விக்கு தென்னிலங்கையிலே கிளறிவிடப்பட்ட இனத்துவேச பிரச்சாரமே காரணம். அது கூடுதலாக முஸ்லீம்களுக்கு எதிரான...
Ad Widget

இரண்டரை மாத பாலகன் கிணற்றில் வீசிக் கொலை!!

இரண்டரை மாதம் நிரம்பிய பாலகன் நள்ளிரவு கிணற்றில் வீசி கொலை செய்யப்பட்ட சம்பவம் துன்னாலையில் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று நள்ளிரவு 11.30 மணியளவில் துன்னாலை குடவத்தைப் பகுதியில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். தந்தையார் இரவு கடமைக்காக சென்றிருந்த நிலையில் தாயாருடன் பாலகன் உறங்கியுள்ளான். இந்த நிலையில் பாலகனை நேற்றிரவு 11.30 மணி முதல்...

போலி ஆவணங்கள் தயாரித்து பணம் சேகரிக்கும் கிளிநொச்சி பெண்!!போதனா வைத்தியசாலை பணிப்பாளர் எச்சரிக்கை!

கிளிநொச்சி விவேகானந்தநகரைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு தொண்டைப் புற்றுநோய் எனக் கூறி போலி ஆவணங்களை காண்பித்து பணம் சேகரிக்கும் நடிவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பளை வைத்தியசாலைகளில் சிகிசை பெறுவதாகவும், இதற்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு இரண்டு மில்லியன் ரூபா பணம் தேவை...

பால்மாவின் விலை அதிரடியாகக் குறைப்பு!!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று முதல் குறைக்கப்படுவதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் 400 கிராம் பால்மா பக்கெற்றின் விலை 15 ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பால்மா பக்கெற்றின் விலை 40 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை கடந்த செப்ரெம்பர் மாதம் 24ஆம் திகதி முதல் அதிகரித்திருந்தது....

யாழ். பல்கலை பதற்றம்: பொலிஸார் சொல்வதில் உண்மையில்லை- மாணவர் ஒன்றியம்

பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்த பொலிஸ் அதிரடிப்படையினர் மாணவர்களை அச்சுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. சிறப்பு அதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்தி வந்த இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இந்நிலையில், மாணவர்கள் மது போதையில் வாகனம் ஓட்டியதனாலேயே அத்துமீறி உள் நுழைந்ததாகப் பொலிஸார் சொல்வதில் உண்மையில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர்...

சாவகச்சேரி வைத்தியசாலையில் ஊழியர்கள் மீது தாக்குதல் – இருவர் கைது

சாவகச்சேரி வைத்தியசாலைக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர் தாதியா்கள், ஊழியா்களை தாக்கி தளபாடங்களையும் அடித்து நொருக்கியுள்ளனர். இதனையடுத்து அவர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள் சந்தேகநபர்களை பொலிஸாாிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. வெட்டுக்காயத்துடன் மருந்து கட்டுவதற்காக இரண்டு இளைஞர்கள் வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு வைத்திய பரிசோதனைக்கு பின்னர் மருந்து கட்ட...

வடக்கில் நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய குழு – டக்ளஸ்

நல்லாட்சி அரசாங்கத்தில் வடக்கு மாகாணத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதேவேளை, 13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையே முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதாகவும் அவர்...

தமிழ் பெண்களின் நெற்றிப்பொட்டு விடயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கோரிக்கை!!

கடவுசீட்டுக்கு தமிழ் பெண்கள் நெற்றிப்பொட்டு வைக்கும் விவகாரத்தில் சட்டங்களின் பெயரால் தமிழர் பாரம்பரியங்களை சிதைக்கவேண்டாம் என மேல்மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சண்.குகவரதன் கேட்டுக்கொண்டார். மேலும் இந்த விடயம் தொடர்பாக அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுடன் தொடர்புகொண்டு நெற்றிப்பொட்டு விடயத்திற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். புதி­தாக கட­வுச்­சீட்­டுக்கு விண்­ணப்­பிப்­ப­வர்கள் அல்­லது...

பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்க நடவடிக்கை!!

புதிய அரசாங்கம் உத்தரவின் பேரில் வற் வரி குறைக்கப்பட்டது. இந்நிலையில் தேச நிர்மாண வரியை நீக்கியுள்ளதன் சலுகையை பாவனையாளர்களுக்கு வழங்கும் வகையில் பேக்கரி உற்பத்திகளின் விலைகளை குறைத்துள்ளதாக பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பாண் தவிர்ந்த பணிஸ் உள்ளிட்ட ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையை 5 ரூபாவால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அகில இலங்கை பேக்கரி...

வெள்ள நீரில் மூழ்கியது பரீட்சை மண்டபம்!!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெய்து வரும் மழை காரணமாக மக்களின் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கிளிநொச்சியில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி இந்து கல்லூரி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் மண்டபமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை, கிளிநொச்சியில்...

டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்த தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை!!

பரவிவரும் டெங்கு தொடர்பில் மாநகர எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு மாநகர முதல்வரினால் விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதில் தற்பொழுது டெங்கு நோய் அதிகம் பரவி வருகின்றமையினால் டெங்குத் தொற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் கடந்த 10ஆம் திகதி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் உயர்திரு. என். வேதநாயகன் தலைமையில்...

முகப்புத்தகத்தில் பிரபாகரனிற்கு வாழ்த்து தெரிவித்தவர் மீது பாய்ந்தது பயங்கரவாத தடைச்சட்டம்!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது புகைப்படத்துடன் கூடிய பிறந்தநாள் வாழ்த்தொன்றினை முகநூலூடாக பிரசுரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இளைஞர் ஒருவரை பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேரம் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க கொழும்பு மேலதிக நீதிவான் யூ.பி.ஆர். நெலும்தெனிய பேலியகொடை...

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்க கூடும்!

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா உள்ளிட்ட பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்க கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. காலநிலை அவதான நிலையத்தினால் இன்று(வெள்ளிக்கிழமை) காலை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் தெற்கு கடல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள தாழ் அமுக்க நிலை நாட்டுக்கு அப்பால் நகர்ந்து வருவதனால் நாட்டில்...

கே.கே.எஸ் கடலில் குளித்த இளைஞர் அலையில் அடித்துச் செல்லப்பட்டார்!!

காங்கேசன்துறை தல்செவன உல்லாசக் கடற்கரைக்கு சுற்றுலா வந்த தென்னிலங்கை இளைஞர் ஒருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். அவரைத் தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது என்று கடற்படையினர் தெரிவித்தனர். மாத்தறையைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரே கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இளைஞனுடன் வந்தவர்கள் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை வழங்கியுள்ளனர்....

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழா நாளை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இடம்பெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது. 11 அமர்வுகளாக 34ஆவது பொது பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இடம்பெறவுள்ளது. இதன்போது கலைப்பீடம், விஞ்ஞான பீடம், முகாமைத்துவக் கற்கைகள், வணிகபீடம், விவசாய பீடம், மருத்துவ...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி!! ஐவர் கைது!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ள நபரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்க செய்ய மினுவாங்கொட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அல்லது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரை கொல்ல இவர் சதித்திட்டம் தீட்டியதாக, நீதிமன்றத்தில் பொலிசார் தெரிவித்தனர். அவருடன் கைதானவர்கள், இந்த விவகாரத்தில் தொடர்புபட்டமைக்கான சான்றுகள் கிடைக்காதமையினால்...

தமிழர் ஒருவரைத் தாருங்கள் வடக்கு ஆளுநராக நியமிக்கின்றேன் – ஜனாதிபதி

“வடக்கு மாகாண ஆளுநராக தமிழர் ஒருவரை நியமிக்க நான் தயாராக இருக்கிறேன். அமைச்சர்களே சிறந்த ஒருவரை என்னிடம் பரிந்துரை செய்யுங்கள்” என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று மாலை நடந்த அமைச்சரவை கூட்டத்தில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். வடக்கு மாகாண ஆளுநரை நியமிப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. தமது வெற்றிக்கு ஒத்துழைத்தவர்களுக்கு ஏனைய...

சூரிய கிரகணத்தை அவதானிக்க யாழில் சிறப்பு முகாம்கள்!

வட இலங்கை சூரிய கிரகணத்தை அவதானிக்கும் அரிய வாய்ப்பினை எதிர்வரும் 26ஆம் திகதி பெற்றுக்கொள்ளவுள்ளது. சூரிய கிரகணத்தை அவதானிப்பதற்கான சிறப்பு முகாம்கள் யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரி, பேராசிரியர் கே.கந்தசாமி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது கொழும்பு பல்கலைக்கழகம், மேற்குநோர்வே பிரயோக விஞ்ஞான பல்கலைக்கழகம், விஞ்ஞான தொழில்நுட்பவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு ஆகியவற்றுடன்...

மண், கல், மணல் ஆகியவற்றை கொண்டுசெல்வதற்கான அனுமதியினை இரத்து செய்ய தீர்மானம்!

நிர்மாணப் பணிகளின் போது மண், கல், மணல் ஆகியவற்றை கொண்டுசெல்வதற்கான அனுமதி பெறுதலை இரத்துச் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போதே ஜனாதிபதியினால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். அத்துடன், நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது பல முக்கிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டிருந்ததாகவும் அவர்...
Loading posts...

All posts loaded

No more posts