கம்மன்பிலவுக்கு எதிரான பிரேரனை குறித்து கூட்டமைப்பின் அறிவிப்பு

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து உடனடியாக தீர்மானம் எடுக்கப்படாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே, கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். இந்த பிரேரணை மீதான விவாதத்தைக் கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பு நடத்தப்படும் தினத்திலேயே இதுகுறித்த தீர்மானம் எடுக்கப்படும் என...

வவுனியாவில் மர்மமான முறையில் பாடசாலை மாணவன் உயிரிழப்பு!!

வவுனியா- தோணிக்கல் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். தோணிக்கல், லக்சபான வீதி பகுதியை சேர்ந்த உதயசந்திரன் சஞ்சீவ் (வயது 15) என்ற விபுலானந்த கல்லூரியில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் நேற்று (திங்கட்கிழமை) இரவு, தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று...
Ad Widget

ஆபாச வலைத்தளங்களை தடை செய்யுமாறு நீதிமன்றம் அறிவிப்பு!!

தற்போது பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் பின்னணியில் மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி நடத்தப்படுவதால் குழந்தைகள் எளிதில் ஆபாச வலைத்தளங்களை அணுகக்கூடும் என கொழும்பு மேலதிக நீதவான் லோச்சனி அபேவிக்ரம நீதிமன்றத்தில் தெரிவித்தார். சிறுமி ஒருவரை இணையத்தில் பாலியல் விற்பனைக்கு விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோது நீதவான் இதை சுட்டிக்காட்டியிருந்தார். விசாரணைக்கு...

அனுமதி கிடைத்தால் 20 வயதுக்குட்பட்டவர்களுக்கும் கோவிட்-19 தடுப்பூசி

அடுத்த சில வாரங்களில் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளை வழங்குவதற்கான திட்டங்கள் உள்ளன என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மருத்துவர் ஹேமந்த ஹேரத் மேலும் தெரிவித்ததாவது; கோவிட்-19...

சாரதிகளுக்கு 22 புள்ளிகள் வழங்கப்படும் – குற்றங்களினால் பூஜ்ஜிய புள்ளிக்கு வந்தால் சாரதிப்பத்திரம் ஒரு வருடத்துக்கு இடைநிறுத்தம்

மோட்டார் போக்குவரத்து குற்றங்களுக்கு தண்டம் செலுத்த இணைய முறையை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அத்துடன், பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்கு புள்ளியிடும் முறையும் அறிமுகப்படுத்தப்படும் என்று இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மோட்டார் போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர், மூத்த பொலிஸ் அத்தியட்சகர் இந்திக ஹபுகோட இதனைத் தெரிவித்தார். வாகன சாரதிகள்...

வடமராட்சி கிழக்கில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடும் வெளிமாவட்ட மீனவர்கள்!!

வடமராட்சி கிழக்கு கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் வெளிமாட்ட மீனவர்கள் ஈடுப்படுவதாக வட மராட்சி கிழக்கு கடற்றொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அனுமதிக்கப்படாத சுருக்கு வலைகள் மற்றும் வெளிச்சம் பாச்சி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பவதனால் தங்களின் தொழில் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், சிறியளவில் முதலீடுகளை மேற்கொண்டு கடற்றொழிலையே தமது முழுமையான வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள கடற்றொழிலாளர்கள் இதனால் அதிகளவு பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும்...

கோண்டாவிலில் கடன் காசு கேட்டுச் சென்றவர் மீது தாக்குதல்!!

கோண்டாவில் காளி கோவிலடியில் கடன் பணத்தைக் கேட்டு வீடு தேடிச் சென்றவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தந்தையும் மகனும் இணைந்து அவரின் தலை மற்றும் கழுத்தில் வாளினால் வெட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் மோகனராஜா ரஜீவன் (வயது-37) என்பவரே சம்பவத்தில்...

யாழில் தொடரும் வாள்வெட்டுச் சம்பவங்கள்- தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக தொடர்ச்சியாக வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெறுகின்றமையை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. அந்தவகையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கொடிகாமம் பகுதியிலும் வாள் வெட்டுக்குழு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. கொடிகாமம்- கெற்பேலி பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் வாள்களுடன் புகுந்த குழுவொன்று, வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் வீட்டின் மீதும் தாக்குதலை நடத்தி விட்டு அங்கிருந்து தப்பிச்...

கட்டுப்பாடுகளை மீறி யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சொகுசு பேருந்து சேவை!!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணம்- கொழும்புக்கு இடையில் சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 19ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் நாடளாவிய ரீதியில் நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கட்டுப்பாடுகளை மீறி யாழில் இருந்து கொழும்புக்கு சொகுசு பேருந்து சேவைகள் இடம்பெறுவதாக பெரும்பாலானோரினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்மையில் மட்டக்களப்பு- கொழும்புக்கு...

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு எப்போது?

பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து அவர் இதனை தெரிவித்துள்ளார். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் மேலதிக வகுப்புக்களை திறப்பதற்கான திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. விசேடமாக பாடசாலைகளை...

பருத்தித்துறை நகரில் எழுமாற்றாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் 6 பேருக்கு கோவிட்-19 தொற்று

பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் எழுமாற்றாக 100 பேரிடம் பெறப்பட்ட மாதிரிகளில் ஆறு பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன், மந்திகை பகுதியில் 6 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை நகரில் எழுமாறாக 100 பேரிடம் நேற்று பெறப்பட்ட மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு...

கோண்டாவில் வன்முறைக்கு காரணம் ஆவா; ஜி குழுவை இலக்கு வைத்துத் தாக்குதல்

கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைக்கு ஆவா குழுவிலிருந்து பிரிந்து ஜி குழுவை உருவாக்கியமையே காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர். செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் ஸ்டியோ ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13 சந்தேக நபர்கள்...

உ/த. பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும்

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் ஏற்றுக் கொள்ளப்படும். அதன்படி விண்ணப்பங்கள் இன்று முதல் ஜூலை 30 வரை ஏற்றுக் கொள்ளப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனியார் மற்றும் பாடசாலை ரீதியான பரீட்சார்த்திகள் விண்ணப்பங்கள் ஆன்லைன் ஊடாக மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சை ஆணையாளர் பீ....

அடுத்த சில மாதங்களில் ஆயிரக்கணக்கான இறப்புகளைக் காண வாய்ப்புள்ளது – வைத்தியர் ரவி ரன்னன் எலிய எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பெறப்பட்ட 142 மாதிரிகளில் பத்தில் ஒன்று அதாவது 14 பேருக்கு டெல்டா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமையானது கவலைக்குரிய நிலைமையாகும். இது குறித்த உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்படாவிட்டாலும் தற்போது நாட்டில் நூறு அல்லது ஆயிரக்கணக்கான டெல்டா தொற்றாளர்கள் இருக்கிறார்கள் என்பதை மாத்திரம் உறுதியாகக் கூற முடியும் என்று சுகாதார கொள்கை நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் வைத்தியர்...

14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அமுல்!

பயணக் கட்டுப்பாடுகளின் தற்போதைய தளர்வு ஜூலை 19 வரை நீடிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். இதேவேளை ஜூலை 5 முதல் 14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் அமுல் இருக்கும்...

மக்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியானது

கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு மக்கள் பின்பற்ற வேண்டிய புதுப்பிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சுகாதார வழிகாட்டல்கள் இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை அமுலாகவுள்ளன. இந்த சுகாதார வழிகாட்டல்கள், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து சேவைகளில் பயணிக்க, ஆசன கொள்ளளவில் 50 சதவீதமானோருக்கு...

100 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை ஆரம்பிக்க பரிசீலனை!!

100 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளை இந்த மாதம் மீண்டும் ஆரம்பிக்க கல்வி அமைச்சு பரிசீலித்து வருவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. நாட்டில் 100இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட சுமார் 3 ஆயிரம் பாடசாலைகள்...

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் மீள ஆரம்பம்

ஆட்பதிவு திணைக்களம், ஜுலை 5ஆம் திகதி முதல் பொதுமக்கள் சேவைக்காக மீள திறக்கப்படவுள்ளது. தொலைபேசி மூலம் திகதியையும், நேரத்தையும் ஒதுக்கிக்கொண்டவர்கள் மாத்திரமே சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்.முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் கடல் வாழ் உயிரினங்களை உற்பத்தி செய்வதற்கான பண்ணைகள் அமைப்பதற்கு ஆர்வமுள்ள முதலீட்டாளர்கள் மற்றும் முயற்சியாளர்களை ஈடுபடுமாறு யாழ்.வணிகர் கழகம் கோரியுள்ளது. மேலும் குறித்த வளங்களின் ஊடாக பொருளாதாரத்தை உயர்ந்த முடியும் எனவும் அந்த கழகம் சுட்டிக்காட்டியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக யாழ்.வணிகர் கழகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் 6 பேர் கொண்ட கும்பல் மீண்டும் அடாவடி!

மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவரைத் தாக்கியுள்ள நிலையில் வீட்டிலிருந்த பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்தி விட்டு கும்பல் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்று (01) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு கம்பி மற்றும்...
Loading posts...

All posts loaded

No more posts