தளர்த்தப்பட்டது ஊரடங்கு!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் இராணுவ அதிகாரியின் துப்பாக்கியை களவாடிச் சென்றதாக குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் இராணுவ அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே ரீ 56 ரக துப்பாக்கி களவாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. துப்பாக்கியுடன் அதற்கான 60 தோட்டாக்களும் களவாடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொல்துவ...
Ad Widget

ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாது – யாழ். பல்கலை. கலைப்பீட மாணவர் ஒன்றியம்

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில், வடக்கு கிழக்கில் ஊடக அடக்குமுறை என்பது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக...

நிற்காமல் சென்ற பேருந்து மீது யுவதி கல் வீச்சு!!

வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்ட குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தை புளியங்குளம் பகுதியில் வழிமறித்த குறித்த யுவதி பேருந்து நிறுத்தப்படாததையடுத்து ஆத்திரமடைந்த குறித்த யுவதி பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளார்....

எரிபொருள் வழங்க கோரி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து போராட்டம்

எரிபொருள் வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்தவர்களே வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என மாவட்ட செயலக...

நாட்டை விட்டு வௌியேற முற்பட்ட பசில் ராஜபக்ஷ

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பெற்றோல் வரிசையில் நின்ற இன்னுமொருவர் உயிரிழப்பு!

வவுனியாவில் பெற்றோல் வரிசையில் நின்றுவிட்டு இளைபாறச் சென்ற ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில், மோட்டர் சைக்கிளை அரச உத்தியோகத்தர்களுக்கான வரிசையில் நிறுத்தி விட்டு குடும்பஸ்தர் ஒருவர் எரிபொருளுக்காக வரிசையில் நின்றுள்ளார். இந்த நிலையில், பெற்றோல்...

கோட்டா பதவி விலகும் வரை ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி வளைத்து அங்கேயே தங்கியிருப்போம் – சஜித் அணி

ஜனாதிபதி மாளிகையை நாளை (சனிக்கிழமை) சுற்றி வளைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை அங்கேயே தங்கியிருப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தாங்கள் கோட்டை ரயில் நிலையத்தில் ஒன்றுகூடி, பின்னர் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்வோம் என்றும் ஜனாதிபதி பதவி விலகும் வரை அங்கேயே இருப்போம் என்றும் அக்கட்சியின் பொதுச்...

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!!

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு புதிய திகதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், வெள்ளிக்கிழமைகளில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளைப் வழங்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் அடுத்த 48 மணிநேரத்திற்குட்பட்ட காலத்தில் நடைமுறையில் இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வைரஸ்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் தற்போது மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திணைக்களத்தின் தகவலின்படி, புதிதாக 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 64 ஆயிரத்து 217 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நேற்று...

கர்ப்பிணித் தாய்மார்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்து!

தற்போது வேகமாகப் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மகப்பேற்று மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் சனத் லெனாரோல் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். கர்ப்பிணித் தாய்மார்கள் முடிந்தவரை முகக் கவசம் அணியுமாறும், வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக மேலும் மக்கள்...

திங்கட்கிழமை முதல் பாண் உற்பத்தி செய்ய முடியாத நிலை!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் எம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ள என யாழ். மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாண மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தில் இன்று (07) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது வெதுப்பக உரிமையாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், இயற்கை...

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களின் போக்குவரத்துக்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் நாளை(08) முதல் இவ்வாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை போக்குவரத்து சேவையாளர் சங்கத்தின் தலைவர் சேபால லியனகே எச்சரிக்கை விடுத்துள்ளார். பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக, இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றும் ஊழியர்கள், சேவைக்கு சமுகமளிக்க முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்....

யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு!

யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தை இலகுப்படுத்தும் வகையில் 10 துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டது. நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு சுகாதார பணியாளர்களின் போக்குவரத்தையும் பாதித்துள்ள நிலையில் துவிச்சக்கர வண்டிகளின் விலைகளும் அதிகரித்து உள்ளது. இந்த நெருக்கடியை தீர்க்கும் முகமாக பிரித்தானியா காரை நலன் புரிச்சங்கத்தினர் ஏற்பாட்டில் நேற்றைய தினம் புதன்கிழமை பத்து துவிச்சககர...

பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை அதிகரிப்பு?

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார். வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாட்டில்...

வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதற்கு கிராம அலுவலர்கள் தீர்மானம்!!

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதற்கு கிராம அலுவலர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். அதுல சீலமானாராச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். கிராம அலுவலர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இதன்...

திருட்டு சைக்கிளை விளம்பரப்படுத்தி விற்க முற்பட்ட இளைஞன் கைது!!

பொருட்கள் விற்பனை செய்வதற்கான பிரபல இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி திருட்டு துவிச்சக்கர வண்டியை விற்பனை செய்ய முற்பட்ட இளைஞர் ஒருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் மூளாய் வேரம் அக்கினி வைரவர் ஆலயத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த பொன்னாலையை சேர்ந்த இளைஞன் ஒருவரின்...

காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம்!!

யாழ்.காரைநகர் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் விநியோகம் திடீரென இடைநிறுத்தப்பட்டு டீசல் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டதால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் பம்பி பழுதடைந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்த முச்சக்கர வண்டிகளின் சாரதிகள், மோட்டார் சைக்கிள்களில் சென்ற பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர். நேற்று காலை காரைநகர் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு பெட்ரோல் மற்றும்...

சீமெந்து பக்கெட்டின் விலை 200 ரூபாவால் அதிகரிப்பு!!

50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து பக்கெட் 200 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சீமெந்து விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதன்படி, சீமெந்து பக்கெட் ஒன்றின் புதிய விலை 3,200 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்படுகிறது. ஒரு வருட காலத்திற்கு முன்னர் 50 கிலோ கிராம் சிமெந்து பக்கெட் 900 ரூபாவாக காணப்பட்டபோதிலும், இந்த ஒரு வருட காலப்பகுதிக்குள் சீமெந்து...

பெற்றோல் கப்பலுக்கான முற்பணத் தொகையை செலுத்துவதற்கு நடவடிக்கை!!

பெற்றோல் கப்பலுக்கான முற்பணத் தொகையை இன்று செலுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நாடாளுமன்றத்தில் இன்று இதனை அறிவித்தார். எதிர்வரும் 22 ஆம் திகதி நாட்டுக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ள பெற்றோல் கப்பலுக்கான கொடுப்பனவே இவ்வாறு செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும் குறித்த கப்பலை முன்கூட்டியே கொண்டு வர எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்....
Loading posts...

All posts loaded

No more posts