நாடாளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் இராணுவ அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே ரீ 56 ரக துப்பாக்கி களவாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
துப்பாக்கியுடன் அதற்கான 60 தோட்டாக்களும் களவாடப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலில் சுமார் 40 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.