Ad Widget

வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதற்கு கிராம அலுவலர்கள் தீர்மானம்!!

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக வீட்டில் இருந்தவாறே பணியாற்றுவதற்கு கிராம அலுவலர்கள் தீர்மானித்துள்ளனர்.

இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். அதுல சீலமானாராச்சி இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார்.

கிராம அலுவலர்களுக்கு எரிபொருளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் காரணமாக இன்று முதல் பணியிடங்களுக்கு செல்லாமல் வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts