இன்று நள்ளிரவு முதல் க.பொ.த. சாதாரண தர தனியார் வகுப்புக்களுக்கு தடை

இன்று (17) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை 2021 (2022) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பன தடை விதிக்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற உள்ளது. இந்நிலையில், தனியார் வகுப்புக்களை...

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் அலுவலகத்துக்கு முன்பாக காலை 9 மணியளவில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது அவ்வமைப்பின் தலைவர் பொ.ஐங்கரநேசன் மற்றும் சக உறுப்பினர்களால் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்தவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி...
Ad Widget

நாளை முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் !!

நாளை முதல் நாடு முழுவதும் சமையல் எரிவாயு விநியோகம் மேற்கொள்ளப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் 3,700 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளது. அத்துடன் நாளைய தினமும் கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக சமையல் எரிவாயு விநியோகம் மட்டுப்படுத்தப்படுவதாக லிட்ரோ நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டது. இதேவேளை, எரிபொருளை...

விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை!!

எரிபொருள், உணவு, சுகாதாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு அனைத்து பொது மற்றும் தனியார் நிறுவனங்களிடம் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக விசேட தேவையுடையவர்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என கோரிக்கை!!

நாட்டில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் முடியும் வரை எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என எரிசக்தி அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தேவையில்லாமல் எரிபொருள் சேகரிப்பில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் அமைச்சர் பொதுமக்களிடம் கோரிக்கை...

முள்ளிவாய்க்கால் பேரணியில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் மற்றும் வட, கிழக்கு மாகாணங்களைத் தளமாகக்கொண்டு இயங்கும் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து அவ்விரு மாகாணங்களிலும் இருந்து ஆரம்பித்த மக்கள் பேரணி இன்றையதினம் முள்ளிவாய்க்காலை வந்தடையும் என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி தெரிவித்தார். நாட்டில் சுமார்...

இன்று மூன்று மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு!!

நாட்டில் இன்றைய தினம் மூன்று மணித்தியாலங்கள் நாற்பது நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் (CEB) கோரிக்கையை அடுத்து மின்வெட்டுக்கான அனுமதி வழங்கப்பட்டதாக அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L,...

தமிழர்களுக்கான தீர்வை வென்றெடுக்க புதிய பிரதமருடன் பேசுவோம் – சம்பந்தன்

தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவினை வழங்குவது என்பது இதன் அர்த்தம் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களின் நலனுக்காகவும் அவர்களின் பிரச்சினைகளுக்கு...

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன் – ரணில்

உயிரை பணயம் வைத்து இந்த சவாலுக்கு நான் முகம் கொடுப்பேன். அந்த சவாலை வெற்றி கொள்வேன். அதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் எனக்கு பெற்றுத் தாருங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு நேற்றையதினம்(திங்கட்கிழமை) ஆற்றிய உரையின்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை...

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை எதுவும் இல்லை!! பிரதமர் ரணில்

நாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எந்தத் தடையும் இல்லை, போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்த உறவுகளுக்கு முழு உரிமை உண்டு, அதை எவரும் தடுக்கவே முடியாது என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களின் ஆத்மாவை வைத்து எவரும் அரசியல் செய்யக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இறுதி...

இந்துவின் செய்தியை இலங்கை பாதுகாப்பு அமைச்சு மறுக்கிறது!!

இந்திய உளவுத்துறையின் ஆதாரங்களை மேற்கோள்காட்டி, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது போல், இலங்கையில் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் “மீண்டும் குழுவாகி தாக்குதல்களை நடத்தவுள்ளனர்” என்ற செய்தியை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது. “செய்தி முற்றிலும் ஆதாரமற்றது. அத்தகைய பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து எங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை எதுவும் வரவில்லை” என்று அமைச்சின் பேச்சாளர் தி இந்துவிடம்...

புதிய அமைச்சர்கள் 4 பேர் பதவியேற்பு!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் 4 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இதற்கமைய தினேஷ் குணவர்தன, பிரசன்ன ரணதுங்க, கஞ்சன விஜேசேகர, ஜி.எல்.பீரிஸ் ஆகியோரே இவ்வாறு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர்களாக புதிய பதவியேற்றுக் கொண்டுள்ளனர். முழு அமைச்சரவை நியமிக்கப்படும் வரை பாராளுமன்றம் மற்றும் நாட்டின் பிற செயல்பாடுகளின் சட்டபூர்வமான தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இந்த...

இலங்கையில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தவிருப்பதாக இந்திய புலனாய்வு பிரிவு தகவல்!

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் ஒன்றிணைந்து இலங்கையில் தாக்குதல்களை நடத்த தயாராகி வருவதாக இந்திய புலனாய்வு பிரிவுகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தி இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தீவிரமான வன்முறைப் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கை இரண்டு முறை அவசரகால நிலைமையை அறிவித்துள்ளன. இந்தநிலையில் சர்வதேச தொடர்புகளைக் கொண்ட புலம்பெயர் தமிழர்களின் ஒரு...

ஊரடங்கின் போது மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை திறக்க அனுமதி

நாட்டில் தற்போது ஊரடங்கு அமுல்படுத்தபட்டடு வருகின்றது. இந்நிலையில், பகுதியளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டும் வருகின்றது. இந்நிலையில், ஊரடங்கின் போது தனியார் மருந்தகங்கள், மருத்துவ சிகிச்சை நிலையங்களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆம் திகதி காலிமுகத்திடலில் இடம்பெற்ற வன்முறையை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமை...

பிரதமர் அதிரடி நடவடிக்கை ! அத்தியாவசிய தேவை தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்ய விசேட குழு

அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளில் நிலவும் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்து பொது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான யோசனைகளை பெற்றுக்கொள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க விசேட குழு ஒன்றை நியமித்துள்ளார். அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் திரவங்கள் தடையின்றி பொதுமக்களுக்கு வழங்குவதற்காக தொடர்புடைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு யோசனைகளை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர...

பிரதமராக கடமைகளை பொறுப்பேற்றார் ரணில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கையின் 26ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இந்த பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் ,ரணில் விக்கிரமசிங்க நேற்று (12) பிற்பகல் பதவிப்...

வெசாக் தினத்தன்று மின்வெட்டு இல்லை!

வெசாக் தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரினால் வெளியிடப்படுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் நீடிக்கப்படுகின்றது ஊரடங்கு!!

ஊரடங்கு உத்தரவு நாளை (14) காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாளை (14) மாலை 6.00 மணிக்கு நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது. இவ்வாறு அமுல்ப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் நாளை மறுதினம் (15) காலை 5 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது!!

காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒன்றிய சம்மேளனம் நேற்று அறிவித்தது. எனினும் குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாக அதன் பிரதிநிதிகள் தமது சங்கத்தினருடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை என...

மின்தடை, எரிபொருள் பற்றாக்குறை, அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும்!! – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை!!

அரசியல் உறுதித்தன்மையை உடனடியாகக் கொண்டுவருமாறு அனைத்து அரசியல் தலைவர்களையும் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கேட்டுக்கொள்கிறார். இப்போது அது நடக்கவில்லை என்றால், மக்கள் தினமும் 10-12 மணிநேர மின்தடை, அதிக எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய தட்டுப்பாட்டை அடுத்த வாரம் எதிர்கொள்ள நேரிடும் என்று அவர் எச்சரிக்கிறார். “இந்த நேரத்தில் எந்த இறக்குமதி பொருள்களிலும் பணத்தை...
Loading posts...

All posts loaded

No more posts