Ad Widget

இன்று நள்ளிரவு முதல் க.பொ.த. சாதாரண தர தனியார் வகுப்புக்களுக்கு தடை

இன்று (17) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை 2021 (2022) கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பன தடை விதிக்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெற உள்ளது.

இந்நிலையில், தனியார் வகுப்புக்களை ஏற்பாடு செய்தல், ஆலோசனைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், ஊக்க வினாப்பத்திரங்களை அச்சிடல், அவற்றை விநியோகித்தல், சுவரொட்டிகள்,பதாகைகள், கையேடுகள், இலத்தரனியல், அச்சு ஊடகங்கள் மூலம் பிரசுரித்தல் அவற்றை தம்வசம் வைத்திருத்தல் என்பன முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

Related Posts