ஊர்காவற்துறை – காரைநகர் பாதை சேவை இடைநிறுத்தம்!

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைகு:ம் இடையே பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதைப் படகு கடந்த ஒரு வாரகாலமாக சேவையில் ஈடுபடுத்தப்படாமையால் அரச உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் பெரும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். மண்ணெண்ணெய் இன்மையாலேயே மேற்படி சேவை இடம்பெறவில்லை என வீதி அபிவிருத்தி அதிகார சபை பணியாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாதைச் சேவையை நடத்துவதில் வீதி அபிவிருத்தி அதிகார சபை தொடர்ந்தும்...

அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பது தொடர்பான விசேட சுற்றறிக்கை வெளியாகின்றது!

அரச ஊழியர்களை கடமைக்கு அழைக்கும் போது அத்தியாவசியமான ஊழியர்களை மாத்திரம் கருத்தில் கொள்ளுமாறு நிறுவன தலைவர்களுக்கு அறிவுறுத்தும் சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது. குறித்த சுற்றறிக்கை இன்று (செவ்வாய்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Ad Widget

சமையல் எரிவாயு விநியோகம் இடம்பெறமாட்டாது: வரிசையில் காத்திருக்க வேண்டாம் – லிட்ரோ

நாட்டில் இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சமையல் எரிவாயு விநியோம் இடம்பெறமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக விற்பனை நிலையங்களில் எரிவாயுவுக்காக காத்திருப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, இரண்டு எரிவாயு கப்பல்களுக்கான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் கொடுப்பனவு நேற்று செலுத்தப்பட்டுதாக அந்த நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்....

இன்றைய தினம் GAS விநியோகிக்கப்படும் விநியோகஸ்தர்கள் விபரம்!!

Litro நிறுவனம் வெளியிட்டுள்ள விநியோகத் திட்டத்தின்படி இலங்கையில் இன்று 394 விநியோகஸ்தர்களுக்கு Litro Gas விநியோகிக்கப்படும். விநியோகஸ்தர்கள் விபரங்களைத் தரவிறக்கம் செய்வதற்கு

நாவலப்பிட்டி இளைஞனுக்கு நேர்ந்த அவலம்!

நாவலப்பிட்டி நகரிலுள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வருகைத் தந்த இளைஞர் ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர், அவரது மகன் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று, நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது. இத்தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது ஓட்டோவுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக நீண்ட நேரம் வரிசையில்...

அலரிமாளிகை விவகாரம்: டிரோன் கமெராவில் ஆதாரங்கள் சிக்கின

அன்றைய தினம் இரவு அலரி மாளிகைக்கு மேல் வானில் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி எடுக்கப்பட்ட நேரலை காட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகள் இந்த விடயம் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது. பெற்றோல் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ள வந்த மோட்டார் சைக்கிள் சாரதிகள் இலக்கத் தகடு தெரியாமல் மறைத்துள்ளனர். அலரி மாளிகைக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட பெற்றோல் குண்டு தாக்குதல் மற்றும்...

பெட்ரோல் இன்மையால் பச்சிளம் குழந்தை மரணம்!

இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளது. உடனடியாக...

குரங்கு அம்மை நோய் குறித்து இலங்கையும் கவனம் செலுத்தவேண்டும்!!

உலகின் பல நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் (Monkeypox) தொடர்பில் இலங்கையும் அவதானம் செலுத்த வேண்டும் என்று ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி மற்றும் சோர்வு ஆகியவை இந்நோயின் அறிகுறிகளாகும் என ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். இன்று...

இரண்டு குழந்தைகள் உயிரிழப்பு!! : ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும் – மஹேல

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். பெற்றோல் மற்றும் மருந்து பற்றாக்குறையினால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பாக வைத்தியர் ஒருவரின் பதிவிற்கு மஹேல கருத்துத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில்,...

மேலும் 08 அமைச்சர்கள் பதவியேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அரசாங்கத்தின் மிகுதி அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை பதவியேற்றுள்ளனர். ஏற்கனவே 13 அமைச்சரவை அமைச்சர்கள் இருவேறு தினங்களில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில் இன்று புதிதாக 10 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அதன்படி சுதந்திரக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர விவசாயம், வனவிலங்கு மற்றும்...

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்!

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. நாட்டில் உள்ள 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களிலும் 542 இணைப்பு மத்திய நிலையங்களிலும் இநதப் பரீட்சை இடம்பெறுகிறது. இந்தமுறை பரீட்சைக்கு 5 இலட்சத்து 17 ஆயிரத்து 496 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களுள் 4 இலட்சத்து 7ஆயிரத்து 129 பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு...

எரிவாயு விநியோகம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குவதற்காக புதிய செயலி!

எரிவாயு விநியோகம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குவதற்காக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். லிட்ரோ எரிவாயு விநியோகம் மற்றும் எரிவாயு கிடைக்கும் இடங்கள் குறித்து நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கு தகவல்கள் வழங்கும் வகையில் இன்று(திங்கட்கிழமை) முதல் இந்த செயலி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கமைய...

ஆசிரியர் அறைந்ததால் மாணவனின் செவிப்பறை பாதிப்பு

ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழில் உள்ள பிரபல கல்லூரி ஆசிரியரே கடந்த செவ்வாய்க்கிழமை இவ்வாறு அறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவன் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவரது செவிப்பறை சவ்வு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை...

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் யாழ் மக்கள் !

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. இன்று அதிகாலை முதல் கொக்குவில், திருநெல்வேலி, கல்வியங்காடு, அச்சுவேலி உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பரீட்சை கடமையில் ஈடுபடுவோர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள்...

விசுவமடுவிலிருந்து ”கோட்டா கோ கம” நோக்கி துவிச்சக்கர வண்டி பயணம்!!

கொழும்பு காலிமுகத்திடல் “கோட்டா கோ கம” நோக்கி விசுவமடு பகுதியிலிருந்து குடும்பத்தர் துவிச்சக்கர வண்டியில் பயணம் ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளார். இன்று காலை விசுவமடு சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பயணத்திற்கு மக்கள் தமது ஆதரவினை வழங்கினர். கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான இராசரத்தினம் ஜனகவர்மன் என்ற 32 வயதுடைய குடும்பத்தரே இவ்வாறு...

9 புதிய அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்!

ஒன்பது புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று (20) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்கள் விவரம் வருமாறு: 1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் 2. சுசில் பிரேமஜயந்த் – கல்வி அமைச்சர் 3. கெஹலிய ரம்புக்வெல்ல...

நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு!

வெசாக் தினத்தை முன்னிட்டு பொது அமைப்புக்களினால் யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு தானம் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. ஒவ்வொருவருடமும் வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் நாக விகாரையில் வசிக்கின்ற பௌத்த துறவிகளுக்கு குறித்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. இன்றைய வருடமும் நாக விகாரையில் அமைந்துள்ள இந்து பௌத்த ஸ்தலங்களில் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு...

கஜேந்திரகுமாரின் விமர்சனங்கள் அநாகரிகமானது – என்.ஸ்ரீகாந்தா

விக்னேஸ்வரனின் தோற்றப் பொலிவை வைத்து பொட்டு தாடி என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முன்வைத்துள்ள அரசியல் விமர்சனம் என்பது மிகவும் அநாகரிகமானது என்.ஸ்ரீகாந்தா தெரிவிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே என்.ஸ்ரீகாந்தா இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்...

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே காரணம் – பிரதமர்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே காரணம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் போராட்டம் செய்யும் இளைஞர்களும் சில அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதேநேரம்,...

450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிப்பு

கோதுமை மாவின் விலை அதிகரிப்புக்கு ஏற்ப இன்று நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. இதற்கமைய 450 கிராம் பாண் ஒன்றின் விலை 30 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலை 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோதுமை மாவின் விலை உடன்...
Loading posts...

All posts loaded

No more posts