Ad Widget

மேலும் 08 அமைச்சர்கள் பதவியேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அரசாங்கத்தின் மிகுதி அமைச்சர்கள் இன்று திங்கட்கிழமை பதவியேற்றுள்ளனர்.

ஏற்கனவே 13 அமைச்சரவை அமைச்சர்கள் இருவேறு தினங்களில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில் இன்று புதிதாக 10 அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

அதன்படி சுதந்திரக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர விவசாயம், வனவிலங்கு மற்றும் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

கெஹலிய ரம்புக்வெல்ல நீர் வழங்கல், ரொஷான் ரணசிங்க – நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சராகவும் விதுர விக்ரமநாயக்க பௌத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

இதேவேளை, டக்ளஸ் தேவானந்தாவிற்கு – கடற்றொழில், பந்துல குணவர்தன – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் ரமேஷ் பத்திரன – கைத்தொழில் நசீர் அஹமட் – சுற்றாடல் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

பந்துல குணவர்தன மற்றும் ரொஷான் ரணசிங்க ஆகியோருக்கு மேலதிகமாக இரு அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று 10 அமைச்சு பதவிகளுக்கு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளர்.

Related Posts