- Thursday
- April 23rd, 2026
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர் ஹரித அலுத்கே இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார் . இதுவரையில் எந்தவொரு வேலைநிறுத்தத்திலும் கலந்து கொள்ளாத சிறுவர் வைத்தியசாலையும் பணிப்புறக்கணிப்புக்கு தயாராகி வருவதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைதியான ஜனநாயகப் போராட்டத்தினை நான் நூறு வீதம் ஏற்றுக்கொள்கின்றேன். அதற்காக பாராளுமன்ற ஜனநாயகத்தை தகர்த்தெறிவதற்கு இடமளிக்க முடியாதென புதிதாக பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். புதியதாக இன்றையதினம் பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய பதில் ஜனாதிபதி...
ஜனாதிபதி பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்றத்தில் அதனை நாளை அறிவிக்க உள்ளதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்னர் தீர்மானித்தபடி புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு கோரல் எதிர்வரும் 19 ஆம் திகதியும் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு 20 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று...
நாடளாவிய ரீதியில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதாரப் ஊழியர்களுக்கு பிரத்தியேக எரிபொருள் விநியோக ஏற்பாடுகளை இன்று முதல் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக அமைச்சினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை வெற்றியடையச் செய்வதற்கு வழங்கப்பட்ட பாரிய ஆதரவின் அடிப்படையில் மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த விடுத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். ஒரு தனிநபருக்கு எரிபொருள் வழங்கல்...
அமெரிக்கா, இலங்கை வந்து இங்குள்ள அனைத்துப் பிரச்சினைகளையும் சரி செய்ய வேண்டும் என வவுனியாவில் தொடர்போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழர்களின் அரசியல் விருப்பத்திற்கு அமெரிக்கா வந்து தீர்வு காண வேண்டும் எனவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் மற்றும் சிவில் சமூகங்கள் உட்பட போரில் பாதிக்கப்பட்டவர்களை அமெரிக்கா...
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காங்கேசன்துறையில் இருந்து, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம், கந்தர்மட பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையின் ஊடாக கடக்க முற்பட்ட நபர் ஒருவர் மீது மோதியுள்ளது. இதன்போது, குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்றையதினம் மதியம் இடம்பெற்ற இவ்விபத்தில் யாழ்பபாணம் ஓட்டுமடம் பகுதியை...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைத்தீவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளார். சிங்கப்பூர் சென்றதன் பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிப்பார் என எதிர்பாக்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சவுதி எயார்லைன்ஸ் SV788 விமானத்தின் மூலம் சிங்கப்பூர் சென்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் கடந்த 98 நாட்களாக அரச எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குறித்த போராட்டக்காரர்கள் கடந்த 9 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனையடுத்து அலரிமாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொண்டு...
நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று(வியாழக்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக பேருந்துகள் மற்றும் புகையிரதங்கள் வழமை போன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் அருகே பொல்துவ சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் இராணுவ அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை களவாடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போதே ரீ 56 ரக துப்பாக்கி களவாடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. துப்பாக்கியுடன் அதற்கான 60 தோட்டாக்களும் களவாடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பொல்துவ...
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலையும் ஏற்றுக்கொள்ளவோ நியாயப்படுத்தவோ முடியாதென யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்திற்கு பின்னர் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில், வடக்கு கிழக்கில் ஊடக அடக்குமுறை என்பது கடந்த 30 வருடங்களுக்கு மேலாக...
வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்ட குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி சென்ற இ.போ.ச பேருந்தை புளியங்குளம் பகுதியில் வழிமறித்த குறித்த யுவதி பேருந்து நிறுத்தப்படாததையடுத்து ஆத்திரமடைந்த குறித்த யுவதி பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்டுள்ளார்....
எரிபொருள் வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையை வழிமறித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(செவ்வாய்க்கிழமை) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களாக எரிபொருளுக்காக காத்திருந்தவர்களே வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இணைய வழியில் பதிவு செய்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என மாவட்ட செயலக...
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் விமான நிலையத்திலிருந்து திரும்பிச் செல்ல நேரிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியாவில் பெற்றோல் வரிசையில் நின்றுவிட்டு இளைபாறச் சென்ற ஒருவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கடந்த 5 தினங்களாக பெற்றோல் வழங்கப்படாத நிலையில், மோட்டர் சைக்கிளை அரச உத்தியோகத்தர்களுக்கான வரிசையில் நிறுத்தி விட்டு குடும்பஸ்தர் ஒருவர் எரிபொருளுக்காக வரிசையில் நின்றுள்ளார். இந்த நிலையில், பெற்றோல்...
ஜனாதிபதி மாளிகையை நாளை (சனிக்கிழமை) சுற்றி வளைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை அங்கேயே தங்கியிருப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. தாங்கள் கோட்டை ரயில் நிலையத்தில் ஒன்றுகூடி, பின்னர் ஜனாதிபதி மாளிகையை நோக்கி பேரணியாகச் செல்வோம் என்றும் ஜனாதிபதி பதவி விலகும் வரை அங்கேயே இருப்போம் என்றும் அக்கட்சியின் பொதுச்...
சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரத்தை ஆய்வு செய்த பிறகு புதிய திகதி அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், வெள்ளிக்கிழமைகளில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளைப் வழங்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் அடுத்த 48 மணிநேரத்திற்குட்பட்ட காலத்தில் நடைமுறையில் இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் தற்போது மீண்டும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தத் திணைக்களத்தின் தகவலின்படி, புதிதாக 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 6 இலட்சத்து 64 ஆயிரத்து 217 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் நேற்று...
தற்போது வேகமாகப் பரவி வரும் இன்புளுவன்சா வைரஸ், கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தை பிரசவித்த தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதனால் மிகவும் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. மகப்பேற்று மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர் சனத் லெனாரோல் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். கர்ப்பிணித் தாய்மார்கள் முடிந்தவரை முகக் கவசம் அணியுமாறும், வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்காக மேலும் மக்கள்...
Loading posts...
All posts loaded
No more posts
