முகமாலை பகுதியில் புலிகளின் அதியுச்ச போர் யுக்தி- வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதிர்ச்சி

முகமாலை முன்னரங்கப் பகுதியில் புலிகள் அமைத்துள்ள அதியுச்ச போர் யுத்தி மற்றும் கண்ணிவெடி பொறியமைப்பை கண்டு மனிதநேய கண்ணிவெடியகற்றும் வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள் அதிர்ந்துபோயுள்ளதாக சம்மந்தப்பட்ட தரப்புக்களிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.தற்போது குறித்த பகுதியில் கண்ணிவெடியகற்றும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. (more…)

மாவீரர்களின் படங்களை வீடுகளில் வைத்திருப்பதற்கு எந்த விதமான தடையும் இல்லை – கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி !

இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் வைத்திருப்பதற்கு எந்த விதமான தடையும் இல்லை என கிளிநொச்சி மாவட்ட இராணுவ தளபதி பிரிகேடியர் ரேணுகா ரொவல் குறிப்பிட்டுள்ளார். நேற்று முறிகண்டியில் நிலப்பிரச்சினை தொடர்பான சந்திப்பில் அப்பகுதி மக்கள் மத்தியில் உரையாற்றிய பொழுதே அவர்...
Ad Widget

நில அபகரிப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஏற்பாடு

நில அபகரிப்புக்கு எதிராக எதிர்வரும் திங்கட்கிழமை 18ம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துள்ளது. அந்த போராட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணியும் பங்குகொள்ள உள்ளதாக அறிவித்துள்ளது.இது தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. (more…)

வடக்கு மாகாண சபைத் தேர்தல் தனி ஈழம் கொடுப்பதற்குச் சமம்!?

தனி ஈழம் மலர்வதற்கு வடக்கு மாகாண சபைத் தேர்தல் நிச்சயம் வழிவகுக்கும். வடக்குத் தேர்தலை நடத்துவது தனி ஈழத்தைத் தாரைவார்ப்பதற்குச் சமனான செயலாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. தனி ஈழத்தை அமைப்பதற்கு மேற்குலகம் வடக்கு மாகாண சபைத் தேர்தல் என்ற பொறியைப் பயன்படுத்துவதற்கு முயற்சிக்கின்றது. எனவே, அரசு அதில் சிக்கக்கூடாது என்றும் அந்த...

வலி.வடக்கில் 8 ஆயிரம் ஏக்கர் கோருகிறது படைத்தரப்பு!

வலி.வடக்கு உயர்பாது காப்பு வலயத்தில் உள்ளடங்கும் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் காணிகளைத் தமது பயன்பாட்டுக்கு வழங்குமாறு படைத்தரப்பு கோரியிருக்கிறது. தற்போது அந்தப் பகுதிகளில் முழுமையாக நிலை கொண்டுள்ள படைத்தரப்பு இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது. இராணுவம் மற்றும் கடற்படையினரின் பயன்பாட்டுக்கே இவை கோரப்பட்டுள்ளன. (more…)

பல்கலை கல்விசாரா ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பால் அரசிற்கு 60 கோடி நஷ்டம்

நாடளாவிய ரீதியில் உள்ள பல்கலைக்கழகங்களின் கல்விசாரா ஊழியர்களது பணிப்பகிஷ்கரிப்பினால் அரசிற்கு 60 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக தொழிற்சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.இன்றுடன் 7வது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு தொடரப்படுவதாக சம்மேளனத்தின் தலைவர் ஆர்.எம்.சந்திரபால தெரிவித்துள்ளார்.இருப்பினும் தமது கோரிக்கைகளுக்கு சரியானதொரு தீர்வு காணப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். (more…)

வடக்கில் இராணுவ முகாம்களை உடனடியாக அகற்றுவது சாத்தியமில்லை; முன்னாள் இராணுவத் தளபதி

தவறான அரசியல் கலாசாரத்தைக் கொண்டிருக்கும் இந்த நாட்டினை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அதற்கு எனது உயிரைத் தியாகம் செய்தாவது அந்தக் கடமையை நான் நிறைவேற்றுவேனே தவிர அரசாங்கத்துடன் நான் இணையமாட்டேன் என முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் சிறையில் இருந்து விடுதலையாகிய இவர் இன்று நடத்திய முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டின் போதே...

புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமார் வீடு மீது இன்று அதிகாலை தாக்குதல்; தேசத்துரோகியென அட்டையும் கொழுவினர்

யாழ்.வேம்படி பாடசாலை மாணவிகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரி அதிபர் இடமாற்றம் தொடர்பான விவகாரத்தில் உரிய நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி பாடசாலை மாணவிகள் இன்றும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளனர்.இதுவரை காலமும் அதிபராகவிருந்தவரை மருதனார் மடம் இராமநாதன் கல்லூரிக்கு இடமாற்றுவது தொடர்பாக எழுந்த சர்ச்சையினை அடுத்து நேற்றய தினம் மாணவிகள் பகிஸ்கரிப்பை மேற்கொண்டிருந்தனர் (more…)

யாழ்ப்பாணம் தமிழ்ச்சங்கம் மீளவும் புத்தெழுச்சி

மொழி பண்பாடு தொடர்பான பணிகளை முன்னெடுக்கும் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டதுடன் அதன் தொடக்க நிகழ்வு 10.06.2012 ஞாயிற்றுக்கிழமை யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்றது.தொடக்க நிகழ்வில் சங்கப் பணிகளை முன்னெடுப்பதற்கெனத் தற்காலிக நிர்வாகக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ்.போதனா வைத்தியசாலையில் O,A,B போன்ற எதிர்மறை இரத்தவகைகளுக்கு கூடுதல் தட்டுப்பாடு

மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில், விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது,இதனாலேயே நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது என யாழ்,போதனா வைத்தியசாலை,இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி T.விஸ்வேந்திரன் தெரிவித்துள்ளார் யாழ்,போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கி சேவை ஓரளவிற்கு திருப்திகரமாக காணப்படுகின்றது.எனினும்,சில குருதிவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. (more…)

வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கைக்கு ஹிலாரி அழுத்தம்

வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கூறியுள்ளார். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.கடந்தமாதம் வொசிங்டனில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசை சந்தித்துப் பேசியபோது, வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை உடனடியாக நடத்த வேண்டியதன் அவசியத்தை ஹிலாரி கிளின்ரன் வலியுறுத்தியுள்ளார். (more…)

யாழ். குடாநாட்டில் 1033 காணிகள் மற்றும் வீடுகள் முப்படையினர் வசம்

யாழ். குடாநாட்டில் மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத இடங்கள் தவிர்ந்து, ஏனைய இடங்களில் உள்ள ஆயிரத்து 33 காணிகள் மற்றும் வீடுகளை முப்படையினரும் கைப்பற்ற முயல்வதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.இவற்றில் 29 காணிகளே அரச நிலங்களாக உள்ளன. ஏனையவை தனியார் பொதுமக்களின் காணிகள் என்று தெரிவிக்கப்படுகிறது.யாழ். மாவட்டத்தில் 15 பிரதேச செயலர் பிரிவுகளிலும் 1996 ஆம் ஆண்டு முதல் இராணுவத்தினர்,...

சிங்கக்கொடி ஏற்ற மறுத்த பா.உ விநாயகமூர்த்திக்கு எதிராக விசாரணை

இலங்கையின் தேசியக் கொடியை ஏற்ற மறுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்திக்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தேசப்பற்று தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் சமூக சேவைகள் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியிடம், இலங்கைத் தேசியக் கொடியை...

யாழ்.பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!- கொடும்பாவியும் எரிப்பு

அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கங்களின் கூட்டுக்குழு, இலங்கையிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும், காலவரையறையற்ற பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.குறித்த பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் குதித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பெயர் பொறித்த கொடும்பாவியை எரித்து யாழ்.பல்கலைகழக கல்விசாரா ஊழியர்கள் தமது எதிர்ப்பினை காட்டியுள்ளனர். (more…)

தென்மராட்சியிலும் 300 ஏக்கர் நிலம் அபகரிப்பதற்கு இராணுவம் முன்முயற்சி; பிரதேச செயலர்களின் முடிவே இறுதியானது

யாழ்ப்பாணம், நல்லூர், தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவுகளில் 61 ஏக்கர் நிலத்தைக் கபளீகரம் செய்வதற்கு முயன்றது போலவே தென்மராட்சிப் பிரதேசத்திலும் சுமார் 300 ஏக்கர் நிலத்தை அபகரிப்பதற்கு இராணுவம் முன்முயற்சிகளை எடுத்துள்ளது. தென்மராட்சியில் தற்போது இராணுவம் நிலை கொண்டுள்ள 41 காணித் துண்டங்களைத் தமக்கு உரிமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தென்மராட்சிப் பிரதேச செயலரை இராணுவ அதிகாரிகள்...

யாழ் வீதி விபத்தில் ஆசிரியர் பலி

யாழ் காங்கேசன்துறை வீதியில் இன்றுபகல் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் ஆசிரியரான வீரசிங்கம் ஜெகதீஸ்வரன் (33) ஸ்தலத்திலேயே பலியானார்.இந்த சம்பவம் காங்கேசன்துறை வீதியில் மருதனார்மடம் சந்திக்கு அண்மையில் இடம் பெற்றது.முன்னே சென்ற வாகனத்தை மோட்டார் சையிக்கிளில் வந்தவர் முந்திச் சென்று கடக்க முற்பட்ட வேளையில் எதிரே வந்த மோட்டார் சைக்களுடன்...

யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தில் மூழ்கி மாணவன் பலி

யாழ். மத்திய கல்லூரி நீச்சல் தடாகத்தில் மாணவரொருவர் மூழ்கி நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். வவுனியாவைச் சேர்ந்த வவுனியா தமிழ் மகாவித்தியாலய மாணவரான யோகேஸ்வரன் கிரிதரன் (வயது 15) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். (more…)

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் யாழில்

யாழ்ப்பாணத்தில் தற்போது அமைதி நிலவுகிறது அத்துடன் மக்களின் வாழ்வும் முன்னேறி வருவது போல் தெரிகின்றது என சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே. சண்முகம் தெரிவித்தார். இன்றைய தினம் யாழ் மாவட்டத்திற்கு வருகை தந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் யாழ். பொது நூலகத்திற்கு காலை 11:30 மணியளவில் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர் அதன் போது...

யாழ்.வலிகாமம் பிரதேச சபைக்கு சொந்தமான காணியை தருமாறு இராணுவத்தினர் அடம்பிடிப்பு

யாழ்.வலிகாமம் வடக்கில், அப்பகுதி பிரதேச சபைக்குச் சொந்தமான நிலத்தை தமக்குப் பெற்றுத் தருமாறு இராணுவத்தினர், சபைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த காணியை அதன் உரிமையாளர் அற்ரோனிப் பவர் மூலம் தந்திருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.சாப்பை கலட்டி என்ற பகுதியிலுள்ள 90பேச் அளவுள்ள காணிக்கே இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர். இதேவேளை குறித்த காணி 1971ஆம் ஆண்டு...
Loading posts...

All posts loaded

No more posts