- Thursday
- May 1st, 2025

யாழ் மாவட்டத்தில் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழவேண்டிய இடத்தில், இன்று சுமார் 1 இலட்சத்து 8 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 6 இலட்சத்து 15 ஆயிரம் மக்களே வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட செயலாளர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(18.12.2011) நடைபெற்ற ஆறுமுக நாவலரின் 132ஆவது குரு பூஜைத்தின...

யாழ் சதுரங்க சம்மேளனத்தால் யாழ் மாவட்டத்தில் முதல் முறையாக மின்னல்வேக சதுரங்கப்போட்டி, 20-20 சதுரங்கப்போட்டி என்பன நடாத்தப்படவுள்ளதாக சதுரங்க சம்மேளனத்தின் செயலாளர் கு.ஆதவன் தெரிவித்துள்ளார்.டிசெம்பர் மாதம் 26ம் திகதி முதல் 31ம் திகதி வரை நடைபெற உள்ள சதுரங்கப்போட்டியிலே இப்போட்டிகளை நடாத்தத் திட்டமிட்டுள்ளனர்.20-20 சதுரங்கப்போட்டி 9,11,13,15,17 ஆகிய வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் இருபாலாருக்கும் நடைபெறவுள்ளது.மின்னல்வேக சதுரங்கப்போட்டி...

ஓமந்தையில் இருந்து காங்கேசன்துறை வரையும் ரயில்வே பாதை அமைக்கும் ஆரம்ப கட்ட பணிகள் எதிர்வரும் ஜனவரியில் ஆரம்பிக்கப்பட உள்ளன. (more…)

இலங்கை மின்சார சபையின் யாழ்.பிராந்திய அலுவலகத்திற்கு எதிராக மின்பாவனையாளர்கள் மூவர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாக யாழ்.மவட்ட நீதிமன்றப் பதிவாளர் எஸ். ரெட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டத்தில் சட்ட விரோத மின்பாவனையாளர்கள் அண்மையில் கைது செய்தமை தொடர்பாக பிரபல வர்த்தகர்கள் இந்த வழக்கைத் தொடுத்திருப்பதாகவும் அவர்களுக்கான வழக்கு விசாரணைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி மன்றில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக யாழ்.நீதவான்...

கடந்த சில தினங்களாகச் செயலிழந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் குடாநாட்டுக்கான கேபிள் தொலை பேசி இணைப்புகள் இன்று வியாழக்கிழமை வழமைக்குத் திரும்பும் என ரெலிக்கொம் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.யாழ்.பண்ணைப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா ரெலிக்கொம் நிறுவனத்தின் தொலைத் தொடர்புக் கோபுரம் மீது கடந்த ஞாயிறன்று இடியுடன் கூடிய மின்னல் தாக்கியது. இதனால் அந்தக் கோபுரத்தில்...

யாழில் அதிவேகமாக பயணிக்கும் வாகனங்களினது வாகன உரிமைப் பத்திரம் யாழ்.மாவட்ட செயலகத்தினால் ரத்து செய்யப்படவுள்ளதாக யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்டத்தில் வீதிவிபத்துக்கள் அதிகரித்துள்ளதினால் இந்நடவடிக்கை எதிர்வரும் 2012 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. (more…)

வட மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துமாயின் அதில்த. தே. கூ நேரடியாகப் பங்கெடுக்கக் கூடாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமிழ் சிவில் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தமிழ் சிவில் சமூகத்திடமிருந்தான பகிரங்க விண்ணப்பம் என்றதலைப்பிலான மனுவொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (more…)

வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு சபையை கைப்பற்றுவேன் இவ்வாறு சூளுரைத்துள்ளார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. அத்துடன் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் முன்வர வேண்டும் எனவும் அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஊடகவியலாளர்களை அமைச்சர் டக்ளஸ் நேற்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்தார். இதன்...

"எனது மரணச் சான்றிதழை எனக்குப் பெற்றுத் தாருங்கள்" என்று உயிருடன் உள்ள ஒருவர் தன்னிடம் வந்து கோரியதாக யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.இந்த விநோதக் கோரிக்கை தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;கொக்குவிலைச் சேர்ந்த பெண்ணொருவர் நீண்ட காலத்துக்கு முன்னர் சுவிஸ் சென்றுள்ளார். தற்போது அவர் தனது 6 பிள்ளைகளுடன் இங்குள்ள தனது...

யாழ். வடமராட்சி கரணவாய் இமையாணன் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்ற விபத்துச் சம்பவமொன்றில் வாகன சாரதி உட்பட இருவர் பலியானதுடன், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை கடும் மழை பெய்தது. இந்த நிலையில் பருத்தித்துறையிலிருந்து யாழ். நகர் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பிக்கப்ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாகவிருந்த பனைமரம், மின்சாரக்கம்பம் ஆகியவற்றுடன்...

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் பிரான்ஸ் நாட்டில் சட்டபூர்வமான பிரஜைகளாக இருந்தால் அவர்கள் இலங்கையில் உள்ள தமது குடும்ப அங்கத்தவர்களையும் தங்களுடன் பிரான்ஸுக்கு அழைக்க விரும்பினால் அந்தக் கோரிக்கை பற்றிச் சாதகமாகப் பரிசீலிக்கப்படும். இவ்வாறு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரைன் றொடிச்சன், யாழ். மாவட்ட அரச அதிபருடனான சந்திப்பின் போது தெரிவித்தார். (more…)

வடமாகாணத்தில் சில பகுதிகளில் தமிழ் பௌத்தர்கள் வாழ்ந்தமைக்கு தொல்பொருளியல் சான்றுகள் உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.வடக்கில் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின்போது பௌத்த தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கூறினார். (more…)

பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்களாக பாடசாலை அதிபர்களே பதவி வகிக்க வேண்டும் என வட மாகாணக் கல்வி அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைவாக பாடசாலைகளின் பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்களாக குறித்த பாடசாலையின் அதிபர்களே இருக்க வேண்டும். பாடசாலை பழைய மாணவர் சங்கங்களின் நிதிச் செயற்பாடுகள் அரச...

தமிழக மீனவர்கள் கூறுவது போல ஒரு தமிழக மீனவராவது இலங்கைச் சிறையில் இல்லை. அனைவரும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டனர். போதைப் பொருள் கடத்தல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இந்தியர்களே இங்கு சிறை வைக்கப்பட்டுள்ளனர் என கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். (more…)

யுத்தம் முடிவடைந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள போதும் யுத்தத்தால் பாதிப்படைந்த தமிழ் மக்களின் வாழ்வாதரத்தில் இதுவரை எந்த முன்னேற்றமும் கிட்டவில்லை என குமரன் பத்மநாதன் (கே.பி.) தெரிவித்தார்.தற்போது இலங்கை அரசின் பாதுகாப்பில் உள்ள குமரன் பத்மநாதன் (கே.பி.) கடந்த ஞாயிற்றுக் கிழமை யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். (more…)