- Friday
- June 20th, 2025
யாழ். திருநெல்வேலிப் பகுதியில் புதிய படைமுகாம் ஒன்றினை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபைக்கு சொந்தமான காணியை இராணுவத்தினர் உரிமை கோரியுள்ளனர்.இது தொடர்பாக நல்லூர் பிரதேச சபையில் நேற்று நடைபெற்ற நிர்வாக சபையின் கூட்டத்தின்போதும் ஆராயப்பட்டுள்ளது. (more…)
வடமாகாண பூகோள வரைபடத்தில் எதிர்காலத்தில் மாற்றங்கள் செய்யப்படலாம் என இலங்கை நில அளவையியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் வட மாகாணத்திற்கு முழுமையான பூகோள வரைபடம் ஒன்று இருக்கவில்லை. தற்போது வடமாகாணத்தில் அபிவிருத்திகள் காணக்கூடியதாக இருப்பதால், அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், பூகோள வரைபட திணைக்களமும் பங்களிப்பு செய்வதாகக் குறிப்பிட்டுள்ள, நில அளவைத் திணைக்களத்தின் நில...

தியாக தீபம் திலீபனின் 25 ஆவது நினைவுதினம் உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் எழுச்சியுடன் இன்று ஆரம்பமாகிறது. அதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.பாரதப் படைகளுக்கெதி ராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு நாளும் அணுஅணுவாக உயிரை விட்டவர் தியாகி திலீபன். (more…)

2013 செப்டெம்பரில் வடமாகாண சபை தேர்தல் நடைபெறுமென தனக்கு கூறப்பட்டதாகவும், ஆனால் அதற்கு முன் விரைவாக அத்தேர்தல் நடைபெறுமென தான் நம்புவதாகவும், இத்தேர்தலை விரைவாக நடத்த தான் வலியுறுத்தியதாகவும் ரொபேட் ஒ பிளேக் தெரிவித்தார்.இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான செயலாளர் ரொபேட் ஓ பிளேக் இன்று கொழும்பில் நடைபெற்ற...

வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த பலாலி மக்களை, நேற்று மாலை அச்சுவேலி பிள்ளையார் ஆலயத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை. சோ. சேனாதிராசா சந்தித்து கலந்துரையாடினார்.இச் சந்திப்பில் இராணுவம் விடுவிக்காத வலி. வடக்கு பகுதியில் மீண்டும் மண் அணை கட்டப்படுவதாகவும் அதனால் வீடுகள் காணிகள் சேதமடைவதாகும் மக்கள் முறையிட்டார்கள்.இதனை தடுத்தி நிறுத்தி தங்களை சொந்த இடங்களில் குடியேறுவதற்கு வழிவகை...

யாழ். போதனா வைத்தியசாலையின் 24ம் விடுதியில் இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணம் மற்றும் நகை என்பன திருடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.சிகிச்சைக்காக விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளர்களது பணமே இவ்வாறு திருடப்பட்டதாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். (more…)

மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். அத்துடன் 13ம் திருத்தச் சட்டம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.மாகாணசபைகளுக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்கள் வழங்கப்படும் என ஜனாதிபதி அண்மையில் குறிப்பிட்டிருந்தார். அரசியல் கட்சி என்ற ரீதியில் மாகாணசபைகளுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. (more…)

பாகிஸ்தான் புலனாய்வுத்துறை யாழ்ப்பாணத்தில் அவதானிப்பு நிலையமொன்றை நிறுவியுள்ளது என இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு சிறிலங்கா அரசு மழுப்பல் போக்கில் பதிலளித்துள்ளது.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது, (more…)

2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு கல்வியாண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பப்படிவங்கள் இன்று முதல் (14.09.2012) ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இதற்கமைய பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்படிவங்கள் இன்று முதல் எதிர்வரும் செப்ரம்பர் 28 ஆம் திகதி வரை விண்ணப்பிக்குமாறு அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது. (more…)

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் தனது பிழைப்பை நடத்தும் சுயநல நோக்கத்திற்காகவே தென்னிந்திய பாடகர் உன்னிக்கிருஷ்ணன் பொதுமன்னிப்பு கோரியுள்ளார் என பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். (more…)

வட மாகாண நுழைவாயிலினூடாக ஏ – 9 வீதியில் பயணிக்கும் வாகனச் சாரதிகளுக்கான புதிய அறிவித்தலொன்றை வட மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா வெளியிட்டுள்ளார்.ஏ – 9 பிரதான வீதி புனரமைக்கப்பட்டு வருவதால் ஓமந்தையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் சாரதிகளுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடக பேச்சாளரும்...

கிழக்கில் நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அங்கு தேசிய அரசு ஒன்றை அமைக்கும் முயற்சியில் இலங்கை அரசு தீவிரமாக இறங்கி உள்ளமை கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து நம்பகமாகத் தெரிய வந்துள்ளது.தேர்தலில் 14 ஆசனங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வந்தபோதும் கிழக்கில்...

யாழ்ப்பாணம் வேலணை வைரவர் கோயிலடிப் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இரண்டு மனித மண்டையோடுகள் உட்பட மனித எச்சங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.குறித்த வைரவர் கோயிலடிப் பகுதியிலுள்ள கிணற்றினை துப்பரவு செய்ய முயன்ற சமயம் மேற்படி மண்டையோடு ஒன்று இருப்பதை பொது மக்கள் அவதானித்துள்ளனர். (more…)

பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி பயிலுநர்களை நாளை தங்கள் கடமைகளை பொறுப்பேற்குமாறு யாழ். மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவித்துள்ளார்.யாழ். மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 2 ஆயிரம் பேர் வரையில் பட்டதாரிப் பயிலுநர்களாக சகல பிரதேச செயலர் பிரிவுகள் மற்றும் மாவட்ட செயலகங்கள் தோறும் நியமிக்கப்பட்டனர். (more…)

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும், கிழக்கை மேலும் அபிவிருத்தி செய்யவும் எம்முடன் ஒன்றுபடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். (more…)

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட போதிலும், ஆளும் கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்திருப்போம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களைப் போன்றே எதிர்காலத்திலும் ஆளும் கட்சியுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவோம். எதிர்காலத்தில் கிழக்கு மாகாணசபை அமைப்பது தொடர்பில் ஆளும் கட்சி சாதகமான பதிலை எதிர்பார்க்கின்றோம். (more…)

வாள்களுடன் ஆட்டோக்களில் வந்த நபர்கள் இளம் குடும்பஸ்தர் ஒருவரைச் சினிமாப் படப் பாணியில் பலர் முன்னிலையில் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை செய்து விட்டு மறைந்தனர்.இதன் போது மேலும் இருவர் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடாநாட்டை பரபரப்பில் ஆழ்த்திய இந்தச்சம் பவம் திருநெல்வேலி சிவன் அம்மன் கோயிலுக்கு முன்னால் நேற்றுப்...

க.பொ.த. (உயர்தர) பரீட்சை விடைத்தாள் புள்ளியிடும் பணிகள் பல்கலைக்கழக ஆசிரியர்களின் மேற்பார்வையின்றி நடைபெறும் என உயர்கல்வி அமைச்சும் கல்வி அமைச்சும் கூறுகின்ற போதிலும், பல்கலைக்கழக நெருக்கடிக்கு தீர்வு கிடைக்கும்வரை ஆசிரியர்கள் புள்ளியிடும் கடமையில் ஈடுபட மாட்டார்கள் என ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன. (more…)

ஏனைய மாவட்டங்களில் பட்டதாரி பயிலுநர்கள் நியமனத்துக்கான உயர் தேசிய டிப்ளோமாதாரிகளின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ள போதிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் டிப்ளோமாதாரிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு ஏற்கப்பட்டது. (more…)

யாழ். நெல்லியடிப் பகுதியில் புலிக்கொடி காட்டிய விவகாரம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர் என யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், (more…)

All posts loaded
No more posts