Ad Widget

மின்சாரம் தாக்கியதில் இளைஞன் உயிரிழப்பு

யாழ். சுழிபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். விளையாடுவதற்காக சென்ற குறித்த இளைஞன் சனசமூக நிலையத்தில் மின்குமிழ் ஒன்றை பொருத்துவதற்கு முற்பட்ட வேளையிலேயே மின்சாரம் தாக்கி நேற்று மாலை 5 மணியளவில் பலியாகியுள்ளார்.

சம்பவத்தில் 19 வயதான வசந்தன் தனுஷான் என்பவரே உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் யாழ். வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Posts