- Saturday
- June 21st, 2025

பகிஸ்கரிப்பினை தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக விரிவுரையாளர் சங்க தலைவர் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார். கடந்த நான்கு மாத காலமாக நீடித்துவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களது பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை தொடர்பில் இன்றைய தினமே இறுதி முடிவு எட்டப்படவுள்ளதாக விரிவுரையாளர் சங்க தலைவர் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள்ளார். (more…)

இலங்கை- இந்திய ஒப்பந்தத்தின்படி கொண்டுவரப்பட்ட 13 வது சட்டத் திருத்தத்தை தமிழர் இனப் பிரச்சினைக்கான ஓர் அரசியல் தீர்வாக தாம் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்றும், ஐக்கிய இலங்கைக்குள் நடைமுறை சாத்தியமுள்ள ஒரு தீர்வையை தாம் நாடுவதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். (more…)
யாழ்ப்பாணத்தில் வைத்து, முன்னணி சோசலிச கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல மீது கழிவு எண்ணெய் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தமக்கு யாழ்ப்பாணத்தில் வைத்து கழிவு எண்ணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக முன்னணி சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் திமுது ஆட்டிகல தெரிவித்துள்ளார். (more…)
வடபகுதியில் காணி சுவீகரிப்புத் தொடர்பாக, எந்த ஒரு விடயமும் வர்த்தமானியில் பகிரங்கப்படுத்தப்பட்டதன் பின்னர், அந்த விடயத்தில் பிரதேச சபைகள் மட்டுமன்றி வேறு எந்தத் தரப்பினரும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. இவ்வாறு 51 ஆவது படையணியின் பிரிகேடியர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார். (more…)
அமெரிக்க கிறீன் கார்ட் லொத்தர் எனப்படுகின்ற வருடாந்த இலவச அதிஸ்ட சீட்டிழுப்பு விசா திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பங்கள் 02.10.2012 முதல் ஏற்றுக்கொள்ளப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் அறிவித்துள்ளது. www.dvlottery.state.gov என்ற இணையத்தளத்தின் ஊடாக அமெரிக்க கிறின் காட் விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களில் இருந்த கிட்டத்தட்ட 55000 விண்ணப்பங்கள் கணினி மூலம் தெரிவுசெய்யப்படும். (more…)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்ய வலியுறுத்தி கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு பகிரங்க வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) தலைவர் த.சித்தார்த்தன்,தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும்...
யாழ். வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருக்கு எதிராக கூட்டமைப்பினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் மேலதிகமாக ஒரு வாக்கினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டமை, மற்றும் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர். (more…)

'திவிநெகும' சட்டமூலம் தொடர்பில் வடக்கு மாகாண சபையின் கருத்து எது என்பதை வடக்கு மாகாண ஆளுநர் பிதிபலிக்க முடியாது. எனவே அவ்வாறு வடக்கு மாகாண சபையின் சார்பில் ஆளுநர் கருத்து வெளியிடமுடியாது என உத்தரவிடுங்கள் - இவ்வாறு கோரும் 'ரிட்' மனு ஒன்றை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை...
இன்று யாழ் பல்கலைக்கழகத்திற்கு அனைத்துப்பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ரஞ்சித் தேவசிறி விஜயம் செய்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்சங்கத்தின் பொதுக்கூட்டத்தில் பங்கெடுத்தார்.தமது போராட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம்தொடரும் எனவும் சூளுரைத்துள்ளார்! (more…)
மாகாணசபைகளுக்குரிய அதிகாரங்களை மத்திய அரசாங்கத்துக்கு தாரைவார்க்க முடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய உதவி உத்தியோகத்தர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள், (more…)
யாழ்ப்பாணத்தில் பௌத்த மதத்தைப் பரப்பும் நோக்கம் இராணுவத்திற்கு இல்லை. ஆனால் யாழ்ப்பாணத்திலுள்ள சில ஊடகங்கள் இராணுவத்தினர் பௌத்த மதத்தைப் பரப்புவதாகக் கூறி செய்திகளை திரிவுபடுத்திவருவதாக யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். (more…)
வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து ஐ.நா. அதிகாரிகளின் கண்ணில் மண்ணை தூவுவதற்காக அவசர அவசரமாக அழைத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் நடுக்காட்டில் அவலப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுதான் மகிந்த சிந்தனையா? ஆசியாவின் ஆச்சரியம் மிக்க நாட்டில் இதுவும் ஒன்றா என வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம். ரதன் கேள்வி எழுப்பியுள்ளார். (more…)
நேற்றிரவு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற சொகுசு பேரூந்தும் டிப்பர் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் டிப்பர் வாகனச் சாரதி சம்பவ இடத்திலேயே பலியானார்.இச் சம்பவம் ஆனையிறவு சோதனைச் சாவடிக்கு அருகில் இன்று அதிகாலை இடம் பெற்றுள்ளது.டிப்பர் வாகனச் சாரதியின் சடலம் இன்னும் அதே இடத்தில் இருப்பதாகத் தெரியவருகின்றது. (more…)
யாழ் பல்கலைகழகத்தின் முகாமைத்துவ வணிக பீடத்தின் கணக்கியல்த்துறையின் தலைவரும் வணிக மாணவர் ஒன்றியத்தின் காப்பாளருமான திரு கே.கே.அருள்வேல் அவர்கள் வவுனியா வளாகத்தின் முதல்வராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரால் நியமிக்கப்பட்டிருக்கிறார் அவர் திங்கட்கிழமை ( 01 . 10 . 2012 ) தனது பொறுப்புக்களை ஏற்கிறார்
புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்களில் சுமார் 2000 பேர் சிவில் பாதுகாப்புப் பிரிவில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பான நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெறும் என இலங்கையின் சிவில் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பாளர் மேஜர் ஜெனரல் மென்டிஸ் தெரிவித்தார். (more…)
கிளிநொச்சியில் அமையவுள்ள யாழ் பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம் மற்றும் பொறியியல் பீடங்களுக்கான காணியைத் துப்பரவாக்கும் மாபெரும் சிரமதானப் பணியில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் வரையில் உணர்வுபூர்வமாகப் பங்கேற்று தமது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். (more…)
கொக்குவில் இந்துக்கல்லூரியின் புதிய அதிபராக திரு ஞானகாந்தன் நியமனம் பெற்றுள்ளார் .வட மாகாண கல்வித்திணைக்களத்தில் இடம் பெற்ற நேர்முகத்தேர்வில் தெரிவு செய்யப்பட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் இவருக்கு நியமனக்கடிதம் இன்று வழங்கப்பட்டுள்ளது. (more…)
2012 ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றி வவுனியா மாவட்டத்தில் முதலாம் மற்றும் இரண்டாமிடங்களை வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகள் பெற்றுக்கொண்டனர்.வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவிகளான டர்சிகா குகநேசன், சாம்பவி குகநேசன் ஆகியோரே அம்மாணவிகளாவர். (more…)

All posts loaded
No more posts