யாழ். மாணவர் கைது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் உடன் தேவை – சர்வதேச மன்னிப்புச் சபை

கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு உள்நாட்டில் மாத்திரமன்றி வெளி நாடுகளிலிருந்தும் இலங்கை அரசுக்கு அழுத்தங்கள் குவிந்து வருகின்றன. (more…)

தனியார் பேரூந்து சேவை புல்லுக்குளத்திற்கு மாற்றம்

யாழ். மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சேவைகள் யாவும் புதன்கிழமை முதல் புல்லுக்குளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்தார். (more…)
Ad Widget

சங்கிலியன் பூங்கா என்ற பெயரில் புத்துயிர் பெறவுள்ள கிட்டு பூங்கா!

யாழ்ப்பாணம் நல்லூர் முத்திரைச்சந்தியில் உள்ள கிட்டு பூங்காவை நவீனமுறையில் புனரமைத்து மக்கள் பயன்பாட்டுக்காக முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இந்தக் கலந்துரையாடல் நேற்றையதினம்(04.12.2012) கொழும்பு மருதானையில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. (more…)

விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளி ஒருவர் காணாமல் போயுள்ளார்! வல்வை பொலிஸில் புகார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர் காணாமல் போயுள்ளார் என வல்வெட்டித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. (more…)

யாழில் விசேட பொலிஸாரால் ஒன்பது பேர் கைது

யாழ்ப்பாணத்தில் எவ்வித அறிவித்தலும் இன்றி 9 பேர் விசேட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். (more…)

இலங்கை அரசுக்கு எதிராக இடம்பெற்ற மிகப்பெரிய போராட்டம் இது.– ஏஎவ்பி

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து மூன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், அரசுக்கு எதிராக நூற்றுக்கணக்கான தமிழர்கள் இணைந்து யாழ்ப்பாணத்தில்போராட்டம் நடத்தினர். இது அங்கு சுமுகமான நிலை இல்லை என்பதற்காக,பதற்றம் அதிகரித்து வருவதற்கான அறிகுறி என்று ஏஎவ்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. (more…)

அம்பனில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வை நிறுத்தக்கோரி மகஜர்

வடமராட்சி அம்பன் பகுதியில் மகேஸ்வரி நிதியத்தினால் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வை உடன் நிறுத்துமாறு வலியுறுத்தி அப்பகுதி மக்கள் யாழ். அரச அதிபரிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர். (more…)

கனேடிய தூதரகத்தின் ஐ.நாவிற்கான அதிகாரிகள் யாழ் விஜயம்

யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தியும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் கனேடிய தூதரகத்தின் ஐ.நாவிற்கான அதிகாரிகள் யாழ் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்துடன் கலந்துரையாடியுள்ளனர். (more…)

தாயகத்தில் எங்களை நாங்களே ஆளவேண்டும் இராணுவம் இங்கிருந்து வெளியேற வேண்டும்

எங்கள் மண்ணில் எங்களை நாங்களே ஆளும் நிலை உருவாக வேண்டும். எமது தாயக மண்ணிலிருந்து இராணுவம் வெளியேற வேண்டும். இதனைச் சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா தெரிவித்தார். யாழ். நகரில் நேற்று இடம்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

யாழ்.பல்கலைக்கழக சூழலிலிருந்து படையினர் விலகிக்கொள்வர் :- கட்டளைத் தளபதி

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் விடுதலை; ஏனையவர்கள் எப்போது?

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சிறீலங்கா பயங்கரவாத தடுப்பு பொலீசாரினால் கைது செய்யப்பட்ட யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி சுதர்சன் என்பவரே விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. (more…)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்படடதைக் கண்டித்து ஐ.நாவுக்கு மகஜர்

யாழ் பல்கலைக்கழக மாணவா்கள் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்டவா்களை விடுவிக்கக்கோரியும் நடைபெற்ற ஆர்ப்பாட்ட முடிவில் சகல அரசியல் கட்சிகள், பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம், சிவில் சமூகம், சட்டத்தரணிகள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், பொது மக்களின் கையொப்பங்களுடன் மகஜர் ஒன்று ஐநாவுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. (more…)

“கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்”: யாழ். ஆர்ப்பாட்டத்தில் முழக்கம்

இ.போ.ச. பருத்தித்துறைசாலை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு

இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பருத்தித்துறை சாலை தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று தெரிவித்தனர். (more…)

யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மொஹமட் ஜெப்ரி நியமனம்

யாழ். பொலிஸ் நிலையத்தின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக எம்.சி.எம். மொஹமட் ஜெப்ரி நேற்றைய தினம் தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். (more…)

வீதி அகலிப்பின்போது சுகாதாரச் சீர்கேடுகள்; கவனிப்பார் இல்லையா என்று மக்கள் விசனம்

பிரதான வீதிகளின் அகலிப்பு நடவடிக்கைகளின் போது சுகாதார சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் அவற்றைத் தடுப்பதற்கு அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்று பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். (more…)

வலுவிழந்தோருக்கு உதவுங்கள்; விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் கோரிக்கை

விசேட தேவையுடையோரின் இன்னல்கள், இடையூறுகளை எடுத்துக்கூறி எமது செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமது தேவைகளை நிறைவேற்ற எம்முடன் கைகோர்த்து நின்று செயற்படுங்கள். யாழ். விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் வி.கனகசபை இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார். (more…)

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்; தா. பாண்டியன் கோரிக்கை

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள யாழ் பல்கலைக்கழக மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார். (more…)

மாணவர்களை விடுதலை செய்து பல்கலைச் சூழலையும் கற்றலுக்கு ஏற்றது போல மாற்றுங்கள்; யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் துணைவேந்தரிடம் கோரிக்கை

இராணுவம் மற்றும் பொலிஸாரின் தலையீட்டினை பல்கலைக்கழகத்தில் இருந்து விலக்கி மாணவர்களது கற்றல் நடவடிக்கைக்கு உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் துணைவேந்தரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. (more…)

யாழ். பல்கலை துணைவேந்தர் – கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்க சந்திப்பு!

யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவிற்கும் யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று பலாலியில் நடைபெற்றதாக தெரியவருகின்றது.பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர்கள் 4 பேருடைய விடுதலை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts