ஆர்ப்பாட்டத்தால் அதிர்ந்தது யாழ்ப்பாணம்!

அளுத்கம , பேருவளை, தர்கா நகரில் வாழும் முஸ்லீம் மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்து தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியும் இணைந்து யாழ். நகரப்பகுதியில் இன்று காலை கண்டனப் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர். (more…)

குடும்பஸ்தரைக் காணவில்லையென முறைப்பாடு

தொண்டைமனாறு பகுதியினைச் சேர்ந்த சிவபாதசுந்தரம் ஜெயசுந்தரம் (55) என்பவரைக் காணவில்லையென அவரது மனைவி நேற்று வியாழக்கிழமை (19) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வல்வெட்டித்துறை குற்ற ஒழிப்புப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)
Ad Widget

யாழ். பல்கலை துணைவேந்தருக்கு ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துடன் தொடர்புடைய நிகழ்வுகளுக்கு, அதுகுறித்த அமைச்சு மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கே அழைப்பு விடுக்கப்பட வேண்டும். (more…)

சூளைமேடு கொலை: டக்ளஸின் மேல்முறையீடு விசாரணைக்கு வருகிறது

கொலை வழக்கு தொடர்பாக பிணையில் வெளிவர முடியாத கைது ஆணை வழங்கி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி அமைச்சர் டக்லஸ் தேவானந்தா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். (more…)

அமெரிக்க அதிகாரி கூட்டமைப்பினரை கொழும்பில் சந்தித்துப் பேச்சு

இலங்கையில் ஐ.நா. விசாரணையை நடத்துவது குறித்து ஆராயும் நோக்கில் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு, (more…)

தொலைபேசியில் கொலை அச்சுறுத்தல்!, இளைஞன் தூக்கில் தொங்கி பலி!

வரணி வாழைத்தோட்டத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வந்தநிலையில் இன்று குறித்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். (more…)

83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே இன்றைக்கு முஸ்லிம் மக்களுக்கு நடக்கின்றது! – வடக்கு முதலமைச்சர்

அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்கள், 83களில் தமிழ் மக்களுக்கு நடந்தவையே (more…)

அடிப்படைவாத குழுக்களை தடைசெய்ய வேண்டும்!- இலங்கை முஸ்லிம் பேரவை ஜனாதிபதிக்கு கடிதம்

முஸ்லிம், கிறிஸ்தவர்கள் உட்பட இதர மதத்தினருக்கு எதிராக வன்முறை, வெறுப்புணர்வு மற்றும் அச்சுறுத்தல் பிரசாரங்களை மேற்கொண்டு வரும் அடிப்படைவாத குழுக்கள் குறித்து விசாரணை (more…)

இன ஐக்கியத்திற்காக முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்!- மேர்வின் சில்வா

நாட்டில் சீர்கெட்டு வரும் சிங்கள - முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தாம் முஸ்லிம் பெண்ணொருவரை திருமணம் செய்ய விருப்பத்துடன் இருப்பதாக அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். (more…)

ஐந்துசந்திப் பகுதியில் கதவடைப்பு, இராணுவம் குவிப்பு !

அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம்கள் கடையடைப்பை மேற்கொண்டனர். (more…)

பிக்குவிற்கு சுன்னத்து செய்ய முயற்சி

வட்டரக்கே விஜித தேரர் இன்று காலை இனந்தெரியாதோரால் கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். (more…)

முஸ்லிம்கள் மீதான வன்முறையைக் கண்டித்து யாழ்.பல்கலையில் ஆர்ப்பாட்டம்

முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொழும்பு அளுத்கம பகுதியில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்களை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. (more…)

சமூக வேலைத்திட்டங்களில் முன்னாள் போரளிகளே முன்னால் நிற்கிறார்கள் – பொ. ஐங்கரநேசன்

சமூக சேவைகள் மற்றும் பொதுநோக்கு வேலைத்திட்டங்களில் இப்போது அதிகம் முன்னாள் போராளிகளே முன்னால் நிற்கிறார்கள். (more…)

வவுனியாவில் பேரணி, கண்டனக் கூட்டத்திற்கு தடை

தென்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தக் கோரி வவுனியா நகர்ப் பகுதியில் முஸ்லிம் மக்கள் ஒன்று திரண்டு நடத்திய பேரணி பொலிஸாரால் தடுக்கப்பட்டுள்ளது. (more…)

யாழ், வவுனியா, முல்லைத்தீவில் ஹர்த்தால்

அளுத்கம மற்றும் பேருவளை ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் மற்றும் சொத்தழிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று வியாழக்கிழமை (19), யாழ்ப்பாணம், முல்லைத்தீவுமற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலுள்ள (more…)

அனந்தி சசிதரனது பாதுகாப்பு திடீரென இரத்து!

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனது காவல்துறை பாதுகாப்பு நேற்றிரவுடன் திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. (more…)

இனவெறி ஆட்சியை தூக்கி எறிய பேதமின்றி செயற்பட வேண்டும் – சிவாஜி லிங்கம்

சிறுபாண்மை மக்களுக்கு எதிராக செயற்படும் இந்த இனவெறி ஆட்சியை தூக்கி எறிவதற்கு எவ்வித கட்சி பேதமோ, இனபேதமோ, மதபேதமோ இன்றி நாட்டின் அனைத்து மக்களும் வீதியில் இறங்கி போராட முன்வர வேண்டும் (more…)

யுவதியை காணவில்லையென முறைப்பாடு

வல்வெட்டித்துறை சீருவில் பகுதியினைச் சேர்ந்த மோனதாஸ் திசாந்தினி (19) என்ற யுவதியைக் காணவில்லையென அவரது தாய் புதன்கிழமை (18) இரவு முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். (more…)

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைக்கு மன்னார் ஆயர் கண்டனம்

முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறையை தமிழ் சிவில் சமூக அமைப்பு வன்மையாக கண்டிப்பதாக தமிழ் சிவில் சமூக அமைப்புக்களின் சார்பில் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராஜப்பு ஜோசப் தெரிவித்துள்ளார். (more…)

எமது மக்களின் பாதுகாப்புக்கு யாராவது உத்தரவாதம் வழங்கினால் பதவி விலகத் தயார் – ஹக்கீம்

அமைச்சுப் பதவியை துறந்தால் எமது மக்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என யாராவது உத்தரவாதம் தருவார்களாயின் எனது அமைச்சுப் பதவியை துறக்கத் தயார் எனத் தெரிவித்தார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம், (more…)
Loading posts...

All posts loaded

No more posts