கடத்தப்பட்ட சிறுமியை மூன்று மாதங்களா தேடும் பொலிஸார்!

சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அவர் குறித்த தகவல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. (more…)

வடக்கு மாகாண சபை செயற்பாடுகளின் தடைக்கு காரணம் யார்? பகிரங்க விவாதத்திற்கு அமைச்சர் டக்ளஸ் அழைப்பு

தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்துக்கான எங்களது பயணத்தின் போது பல்வேறு தியாகங்களை செய்து நாங்கள் பெற்றுக் கொண்ட பொன்னான வாய்ப்பான வடக்கு மாகாண சபை இன்று செயலிழந்து காணப்படுகின்றது. (more…)
Ad Widget

மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களாகவும், குடும்பங்களை இழந்து அனாதைகளாகவும், விதவைகளாகவும் வாழும் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும் என வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

வடக்கு நீர் நிலை உயிரினங்களை நல்ல விலைக்கு ஏற்றுமதி செய்யலாம்

வடமாகாண நீர் நிலைகளில் பெருகி வரும் உயிரினங்களை நல்ல விலைக்கு சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என வியட்நாம் தூதுவர் டோன் சின் தான்ங் தன்னிடம் கூறியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். (more…)

இந்திய மீனவர்களை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு

இந்திய பாராளுமன்ற கூட்டு குழு கூட்டம் கூடியுள்ளதை முன்னிட்டு, இலங்கையின் பாதுகாப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ட்விட்டர் மூலமாகத் தெரிவித்திருக்கின்றார். (more…)

மோதல்களில் பாலியல் வன்முறையைத் தடுக்கும் மாநாட்டில் இலங்கை இல்லை

மோதல்களின் மோது பாலியல் வன்முறைகள் நடப்பதை தடுக்கும்நோக்குடன் நடத்தப்படும் உலகளாவிய மாநாடு தொடங்குகின்றது. (more…)

பரந்தன் விபத்தில் கோப்பாய் இளைஞர்கள் மரணம்!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்துக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற இளைஞர்கள் இருவர் பரந்தன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். (more…)

நடைபாதை வியாபாரிகளால் நகர வர்த்தகர்கள் பெரும் பாதிப்பு

வடமராட்சி பகுதியில் உள்ள வீதியோரங்களில் காணப்படும் நடைபாதை வியாபாரிகளினால் தாம் மிகவும் பாதிக்கப்படுவதாக நகர வர்த்தகர்கள் கவலை தெரிவிக்கின்றனர். (more…)

ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு நாட்டுக்குள் அனுமதியில்லை

இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போர் தொடர்பில் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முதல் ஐக்கிய நாடுகளின் சபையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை முற்று முழுதாக இலங்கை அரசு நிராகரித்துள்ள நிலையில், (more…)

வடக்கு முதல்வர் அவரது மனச்சாட்சியின் படி மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும் – பஷில்

வட மாகாண சபையின் முதலமைச்சர் என்னை சந்தித்தால் வடக்கு மக்களுக்கு அவர் சேவையாற்றுவதற்கான அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க தயாராக இருக்கின்றேன். வடக்கு முதல்வர் அவரது மனச்சாட்சியின் படி மக்களுக்கு சேவையாற்ற முன்வரவேண்டும். (more…)

போலி இணையத்தளம் ஊடாக மோசடி! மூவர் கைது

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி போலி இணையத்தளம் ஊடாக மோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். (more…)

திருடர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் இணைந்து திருடர்களை கைது செய்யும் புதிய செயற்றிட்டம் ஒன்றினை நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர். (more…)

போர்க்குற்ற சாட்சியமளிக்க நான் தயார், சொல்ஹெய்ம் அறிவிப்பு

போர்க்குற்றங்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்திலோ, எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக தீர்ப்பாயத்திலோ சாட்சியமளிக்கத் தான் தயார் என்று நோர்வேயின் முன்னான் சிறப்பு தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். (more…)

எனது கணவரை இராணுவத்தினர் சுட்டபின்னர் ‘ட்ரக்’கில் ஏற்றிச் சென்றனர்; ஆரையம்பதியைச் சேர்ந்த பெண் சாட்சியம்

"வீட்டிலிருந்து கோயிலுக்குச் சென்ற என் கணவரை இராணுவத்தினர் சுட்டு 'ட்ரக்'கில் ஏற்றிச் சென்றனர். இதுவரை அவர் வீடு திரும்பவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா? இறந்து விட்டாரா? என்பது கூடத் தெரியவில்லை." (more…)

பொலித்தீன், பிளாஸ்ரிக் கழிவுகள் அகற்றிய படையினர்

உலக சுற்று சூழல் தினத்தினை அனுஷ்டிக்கும் விதமாக யாழ். இராணுவத்தினரால் மாவட்டத்திலுள்ள பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை இல்லாதொழித்தல் என்னும் தொனிப்பொருளில் கழிவகற்றல் நடவடிக்கை நேற்றய தினம் முன்னெடுக்கப்பட்டது. (more…)

மிருகபலியை நிறுத்தாவிடில் வழக்குத் தாக்கல்

கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் சனிக்கிழமை (14) இடம்பெறவுள்ள மிருகபலியை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் (more…)

வாகனங்கள் தொடர்பான விபரங்கள் இனி இணையத்தளத்தில்

இலங்கையில் பதிவு செய்யப்படுகின்ற அனைத்து வாகனங்களின் விபரங்களையும் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என மோட்டார் பதிவு திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். (more…)

செவிப்புலனற்றோருக்கான இலவச சிகிச்சை முகாம்

பலாலி இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள செவிப்புலனற்றோருக்கான இலவச மருத்துவ முகாம் திங்கட்கிழமை(09) யாழ். சிவில் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ். பாதுகாப்புபடை தலைமையகத்தின் ஊடக இணைப்பாளர் மேஜர் மல்லவாரச்சி தெரிவித்தார். (more…)

பொலிஸ் அதிகாரத்தை வழங்குவதில் பிரச்சினை இல்லை – வாசு­தேவ நாண­யக்­கார

வட­மா­காண சபைக்கு பொலிஸ் அதி­கா­ரங்­களை வழங்­கு­வதில் எவ்­வி­த­மான பிரச்­சி­னையும் இல்லை. அவ்­வாறு அரசு தீர்­மானம் எடுத்தால் அதனை வர­வேற்­ப­தாக அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­வித்தார். (more…)

ஐநா விசாரணை குழு முன் மக்கள் சாட்சி சொல்ல வேண்டும்! – அப்பாத்துரை விநாயகமூர்த்தி

இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைக்குழு முன்பாக மக்கள் சாட்சியங்கள் சொல்ல தயாராக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். (more…)
Loading posts...

All posts loaded

No more posts