பிரதேச சபைகளை வலுவூட்டும் ஜனாதிபதி செயற்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்டத்தினைச் சேர்ந்த 4 பிரதேச சபைகளுக்கு தலா 1 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சித் திணைக்கள அமைச்சின் கொழும்பு அலுவலகத்தில் வைத்து புதன்கிழமை (09) மேற்படி நிதி பிரதேச சபைகளின் தவிசாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
யாழ்.மாவட்டத்திலுள்ள வலி.தெற்கு (உடுவில்), சாவகச்சேரி, சண்டிலிப்பாய், மற்றும் நல்லூர் ஆகிய பிரதேச சபைகளுக்கே மேற்படி நிதி வழங்கப்பட்டன.