- Thursday
- September 4th, 2025

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும். அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும்....

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில்...

வடக்கு மாகாண ஆளுநர் நெருப்போடு விளையாடுவதற்கு முயற்சிக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ந.சிறீகாந்தா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "வடக்கில் தனியார் காணிகளை படைத்தரப்புகளுக்கும் மற்றும் அரச திணைக்களங்களுக்கும் காணிகள் தேவைப்படுகின்றன என்ற பெயரில் சுவீகரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளின் ஓர் அங்கமாகவே வடக்கு...

இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றது. இந்நிலையில் நாட்டின் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சீனா எரிபொருளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீட்டர் எரிபொருளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் எரிபொருளில் 7.5 மில்லியன் லீட்டர் எரிபொருள் விவசாய...

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் நவம்பர் 9ஆம் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் பிரகாரம் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) முதல் செயல்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவில் அங்கம் வகித்த ஐவரில் மூவரின்...

யாழ்ப்பணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது கண்ணாடி போத்தலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவகம் மீது நேற்று இரவு காரில் வந்த இனம் தெரியாத நபர் கண்ணாடி போத்தலினால் தாக்கி விட்டு சென்றதாக...

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக்...

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு...

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை இருதய சத்திர கிச்சை நிலையம் புனரமைக்கப்பட்டு, யாழ். பரியோவான் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கதிர்காமர் தம்பி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,பரியோவான் கல்லூரி முன்னாள் அதிபர் வணக்கத்துக்குரிய fr Rev FR N.J. ஞானபொன்ராஜ் உட்பட மருத்துவர்கள்,தாதியர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து...

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரியாலை தபால்கட்டை சந்தியில் நேற்று (10) மதிய வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவ்வழியே வந்த வரை, குடைக்குள் மறைத்து வைத்திருந்த வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்...

நாட்டிற்குத் தென்கிழக்காக உருவாகிய கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை மேலும் விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா,வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலையில்...

சட்டவிரோதமான முறையில் கனடாவுக்கு கப்பலில் பயணித்த போது விபத்தில் சிக்கிய இலங்கையர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார். படகு ஆபத்தில் சிக்கிய போது அதிலிருந்த மாலுமி உட்பட தொழிலாளர்கள் தப்பி ஓடியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 303 இலங்கையர்களை ஏற்றிச் சென்ற LADY R3 என்ற...

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. இதன்போது சீரற்ற கால நிலையினால் ஏற்படவுள்ள பாதிப்புக்களில் இருந்து மக்களை பாதுகாத்தல் , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்தல் உடனடி உதவிகள் வழங்கல் , மற்றும் நிவாரணங்கள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டது. மாவட்ட...

கோவில் பிரச்சினை தொடர்பாக வடமாகாண அளுநரிடம் முறையிட்ட அவுஸ்திரேலிய நாட்டவர் மீது இன்று காலை வாள்வெட்டுக் குழு ரவுடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். பண்டத்தரிப்பில் உள்ள முருகன் ஆலயம் ஒன்றில் நீண்டகாலமாக நிர்வாகத்தில் மோசடி இடம்பெற்று வருவதாக அவுஸ்திரேலியாவில் இருந்து வருகை தந்த பண்டத்தரிப்பை சேர்ந்த கோயிலுக்கு நிதி பங்களிப்பை தொடர்ச்சியாக வழங்கி வரும் நபர் ஒருவர்...

லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரனுக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் குழுமத்தின் பிரதி தலைவர் பிரேம் சிவசாமியும் கலந்து கொண்டார். நீண்ட காலமாக நிலவிவரும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து லண்டனில் முன்னர் இடம்பெற்ற சந்திப்பில் விடுக்கப்பட்ட வேண்டுதலுக்கு அமைய 8 அரசியல்...

நெதர்லாந்து நாட்டை சேந்த 53 வயதான நபரை திருமணம் செய்யுமாறு தன்னை தனது பெற்றோர் வற்புறுத்தி தாக்கினார்கள் என 15 வயதான சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமி பிரான்ஸ் நாட்டில் இருந்து அச்சுவேலிக்கு திரும்பியிருந்த 20 வயதான இளைஞனுடன்...

யாழ் – கொழும்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரம்களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சி,சிவபரன் தெரிவித்தார். நேற்றைய தினம் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சில் இடம்பெற்ற...

யாழ்ப்பாணத்தில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ள நிலையில் , இருவேறு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடுவில் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர், வீதியில் சென்ற பெண்ணொருவரின் 3 இலட்ச ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலி , மோட்டார் சைக்கிளில் வந்த வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில்...

வடக்கு மீனவர்கள் போதை பொருள் கடத்தலில் ஈடுபடக்கூடாது அவ்வாறு ஈடுபடுவோர் தொடர்பில் தகவல் கிடைத்தால் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என யாழ்ப்பாணம் ஆரிய குளம் நாகவிகாரையின் விகாராதிபதி வடக்கு மீனவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். ஆரிய குளம் நாகவிகாரை விகாராதிபதியை வடக்கு மீனவர்கள் கடலட்டை விவகாரம் தொடர்பில் சந்தித்து கலந்துரையாடிய பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...

பொது தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சைக்கு பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகள் விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 25 ஆம் திகதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் தரம் 12 இல் கல்வி பயின்ற மாணவர்களே அந்தப் பரீட்சைக்கு...

All posts loaded
No more posts