பருத்தித்துறை கடற்பரப்பில் 14 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 தமிழக மீனவர்கள் நேற்று புதன்கிழமை (16) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறை கடற்பரப்புக்கு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினரால் குறித்த 14 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டதுடன் , அவர்களின் படகொன்றினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மீனவர்களை...

குளத்தில் மீன்பிடித்த இளைஞன் மாயம்!!

யாழ். செம்மணி குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இளைஞன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த குளத்தினை அண்மித்த பகுதியில் வசித்துவரும் இளைஞன் ஒருவரே தூண்டிலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவேளை இவ்வாறு காணாமல் போயுள்ளார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் குளத்தில் தேடுதல் நடாத்தி வருகின்றனர். எனினும் குறித்த இளைஞனை காணவில்லை. இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸ் நிலையத்தில்...
Ad Widget

இலங்கையில் இன்று முதல் அதிகரிக்கும் கட்டணங்கள்!!

இலங்கையில், அதிகரிக்கப்பட்ட கடவுச்சீட்டு கட்டணங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இன்றையதினம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து வகையான கடவுச் சீட்டு கட்டணங்களையும் திருத்த குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தீர்மானித்து, அது தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டிருந்தது. இதன்படி, ஒருநாள் சேவை கடவுச் சீட்டுக் கட்டணம் 15 ஆயிரம் ரூபாவில் இருந்து 20 ஆயிரம்...

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரியை இடமாற்றக் கோரி கர்ப்பிணி தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் ஒன்று கூடி கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுபோதை பாவித்து விட்டு வைத்தியம் பார்க்காதே, வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளர்களை அவமதிக்காதே, வெளியேறு வெளியேறு விடுதியை விட்டு வெளியேறு, சீரழிக்காதே...

வடக்கு மாகாண ஆளுநர் யாழ். சிறைச்சாலைக்கு விஜயம்!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டார். யாழ்ப்பாணத்தில் போதைப் பொருள் பாவனை , வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்படுவோரின் நிலை மற்றும் சிறைச்சாலையின் தற்போதைய நிலைமை தொடர்பில் குறித்த விஜயத்தின் போது ஆராய்ந்தார்.

சுமந்திரனின் அழைப்பு : தமிழ் தேசியக் கட்சிகள் புறக்கணிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற கூட்டத்தில் தமிழ் தேசியக் கட்சிகள் எவையும் பங்கேற்கவில்லை. இலங்கைத் தமிழரசுக் கட்சி மட்டும் இதில் பங்கேற்ற நிலையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் இதில் பங்கேற்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் வேண்டுகோளின்...

விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழியில் – அரச ஊழியர்களுக்கு அறிவிப்பு !

அரச நிறுவனங்களின் அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையை பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு எடுத்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம் உட்துறை அமைச்சில் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்....

ரணில் இனப் பிரச்சினை தீர்வுக்கு தமிழ் தரப்பை அழைப்பது ஓர் நாடகம் – கஜேந்திரகுமார்

இலங்‍கையில் சமஷ்டியாட்சி‍ முறையை ஏற்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என 2021 இல் கூறிய ரணில் விக்கிரமசிங்க தற்போது இனப் பிரச்சினை தீர்வுக்கு காண்பதாக கூறி, தமிழ் தரப்பினரை பேச்சுவார்த்தைக்கு அழைப்பது ஓர் நாடகமாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான கஜேந்திர குமார் பொன்னம்பலம் கடுமையாக சாடினார். நாட்டில் ஒற்றையாட்சி முறையை...

தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள அரச ஊழியர்கள்!!

அனைத்து அரச ஊழியர்களும் இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு குறிப்பிடப்படாததையடுத்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை. அந்த வருடம் பத்தாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பு...

யாழ். சர்வதேச விமான நிலையத்தின் சேவைகளை வருட இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை!

இந்த வருட இறுதிக்குள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய சேவை ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர், அவை விரைவில் சாத்தியமாக வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட துறைமுகங்கள் விமான சேவைகள்...

தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஆராய அனைத்து தரப்பிற்கும் கூட்டமைப்பு அழைப்பு !

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து தமிழ்க் கட்சித் தலைவர்களுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது, அதன்படி இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் சமஸ்டி அடிப்படையிலான தீர்வு மூலம் தமிழ் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணுவது குறித்து பேசப்படவுள்ளது. கட்சிகளுக்கிடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள்...

அஞ்சலிக்காக நல்லூரில் மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள்!

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலாயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. நவம்பர் 21ஆம் திகதி காலை 9மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள இக் கல்வெட்டுக்கள் நவம்பர் 27ஆம் திகதி வரையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருக்கும். அத்தருணத்தில் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அஞ்சலி செலுத்தமுடியும்....

நாட்டின் பல மாகாணங்களில் கனமழை பெய்யும் சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், வடக்கு, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில்...

நெருப்போடு விளையாட முயலாதீர்! – வடக்கு ஆளுநரிடம் சிறீகாந்தா வலியுறுத்து

வடக்கு மாகாண ஆளுநர் நெருப்போடு விளையாடுவதற்கு முயற்சிக்கக்கூடாது என்று தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி ந.சிறீகாந்தா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "வடக்கில் தனியார் காணிகளை படைத்தரப்புகளுக்கும் மற்றும் அரச திணைக்களங்களுக்கும் காணிகள் தேவைப்படுகின்றன என்ற பெயரில் சுவீகரிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகளின் ஓர் அங்கமாகவே வடக்கு...

விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக எரிபொருளை வழங்கும் சீனா!

இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றது. இந்நிலையில் நாட்டின் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சீனா எரிபொருளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீட்டர் எரிபொருளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் எரிபொருளில் 7.5 மில்லியன் லீட்டர் எரிபொருள் விவசாய...

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக நா.வேதநாயகன்!

வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவின் தலைவராக யாழ் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நா.வேதநாயகன் நியமிக்கப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் நவம்பர் 9ஆம் திகதியிடப்பட்டு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தின் பிரகாரம் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) முதல் செயல்படும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடமாகாண பொதுச்சேவை ஆணைக் குழுவில் அங்கம் வகித்த ஐவரில் மூவரின்...

யாழ். இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு சி.வி.கே.சிவஞானம் கண்டனம்!

யாழ்ப்பணத்தில் உள்ள இந்திய துணை தூதுவர் அலுவலகம் மீது கண்ணாடி போத்தலினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதுவர் அலுவகம் மீது நேற்று இரவு காரில் வந்த இனம் தெரியாத நபர் கண்ணாடி போத்தலினால் தாக்கி விட்டு சென்றதாக...

உயிரிழந்தவர்களின் பெயரில் போலி உறுதி முடிப்பு! சட்டத்தரணியும் பிரபல கல்லூரி முன்னாள் அதிபரும் கைது!

யாழ்ப்பாணம் – அராலி வீதியில் போலி உறுதி மூலம் காணி மோசடி இடம்பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவரும் முன்னாள் பாடசாலை அதிபரும் பொலிஸ் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர். அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் உள்ள காணி ஒன்று அதன் இறந்து விட்ட உரிமையாளர்களான தம்பதியின் போலிக்...

மிருசுவிலில் தாயும் 7 மாத குழந்தையும் கிணற்றில் இருந்து சடலமாக கண்டெடுப்பு!

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக கண்டெடுக்கபட்டுள்ளனர். கணவன் மனைவிக்கு இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு...

யாழ்.போதனா இருதய சத்திரசிகிச்சை பிரிவு புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலை இருதய சத்திர கிச்சை நிலையம் புனரமைக்கப்பட்டு, யாழ். பரியோவான் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர் கதிர்காமர் தம்பி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி ,பரியோவான் கல்லூரி முன்னாள் அதிபர் வணக்கத்துக்குரிய fr Rev FR N.J. ஞானபொன்ராஜ் உட்பட மருத்துவர்கள்,தாதியர்கள்,பழைய மாணவர்கள் என பலர் கலந்து...
Loading posts...

All posts loaded

No more posts