Ad Widget

தென்னிந்திய பிரபலங்களை முற்றுகையிடுவோம்!

யாழுக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய பிரபலங்களுடன், புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு பணம் அறவிடப்பட்டால் அவர்கள் தங்கியுள்ள விடுதிகளை முற்றுகையிடுவோம் என அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியை முன்னிட்டு...

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 10 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை!!

சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட உணவகங்களில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் 12 உணவகங்கள் மீது வழக்குத்தாக்கல் மேற்கொள்ளப்பட்டது. பண்டத்தரிப்பு பொதுச் சுகாதாரப்பரிசோசகர் ஆர்.ஜே.பிரகலாதன் 3 பேருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்து 69000 ரூபா தண்டப்பணம் செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஆனைக்கோட்டை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கு.பாலேந்திரகுமார் 09 உணவகங்களுக்கு எதிராக தாக்கல்...
Ad Widget

இலங்கையில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் அபாயம்!!

நாட்டில் மீண்டும் மின்சார நெருக்கடி ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க மின் நிலைய திட்டங்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைகளை நடைமுறைப்படுத்தப்படா விட்டால், இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். வங்குரோத்து நிலைமைகளுக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்பிப்பதற்காக மின்சார சபையின் அதிகாரிகள் நாடாளுமன்ற...

பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் மீது தாக்குதல்!

சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மீது திருட்டுக் கும்பலொன்று தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாவகச்சேரி மந்துவில் பகுதியில் கும்பலொன்று வீதியில் பொருத்தப்பட்டிருந்த மின் குமிழ்களைத் திருடிக்கொண்டிருப்பதை அவதானித்த அப்பகுதி மக்கள் இது குறித்து சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கு. குகானந்தனுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த குகானந்தன்...

TIN இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை!!

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட வரி செலுத்துவருக்கான TIN இலக்கத்துடன் தொடர்புடைய வங்கிச் சேவை எனக் கூறி மக்களை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் வங்கிக் கணக்குகளில் பணத்தை ஏமாற்றும் ஹேக்கர் கும்பல் இயங்கி வருவதாக குருநாகல் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மோசடி கும்பலிடம் சிக்கி...

யாழில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது துப்பாக்கிச் சூடு!! மூவர் கைது!!

யாழில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு, மூவரைக் கைதுசெய்துள்ளனர். இன்று காலை பளையில் இருந்து புத்தூர் நோக்கிப் பயணித்த குறித்த டிப்பரை பொலிஸார் இடைமறித்த போது டிப்பரின் சாரதி, பொலிஸாரை உதாசீனம் செய்துவிட்டு வேகமாக சென்றுள்ள பொதே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் டிப்பர்...

வட்டுக்கோட்டை பொலிசார் தனக்கு அடித்ததாக நாடகமாடிய பல்கலைக்கழக மாணவன் ஐஸ் போதைக்கு அடிமை!!

வட்டுக்கோட்டை பொலிசார் தன்னை தாக்கியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் முறையிட்டது போலியான சம்பவம் என்பது உறுதியாகியுள்ளது. முறைப்பாடளித்த பலகலைக்கழக மாணவன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. பொலிசார் தன்னை காலில் பிடித்து தூக்கியடித்ததாக மாணவன் முறைப்பாடளித்துள்ள போதும், மாணவன் தாக்கப்பட்டதற்கான எந்தவொரு அறிகுறியும், தடயமும் அவரில் இல்லையென்பதும் மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது....

சாந்தன் மீண்டும் இலங்கைக்கு திரும்ப பாதுகாப்பு அமைச்சு அனுமதி!!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தன் மீண்டும் இலங்கைக்கு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லையென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அமைச்சர் அலி சப்ரி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடப்பட்டதன் அடிப்படையில்...

ஆவா குழுவை இயக்குபவர்கள் ஐரோப்பிய நாட்டில்! கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்!!

ஆவா குழுவினை இயக்குபவர்கள் ஐரோப்பாவில் வசிப்பதாக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஆவா குழுவின் அங்கத்தவர் ஒருவர் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு சந்தேகநபரே நேற்று (06.02.2024) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், தான் அந்த குழுவில் இரண்டு வருடங்களாக அங்கத்தவராக இருப்பதாக குறித்த சந்தேகநபர் பொலிஸாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அதேவேளை, ஆவா குழுவின்...

யாழில் ஹரிகரனின் இசை நிகழ்ச்சி!! ரம்பா மற்றும் கலா மாஸ்டர் வருகை!!

NORTHERN UNI இன் பிரமாண்ட இசை நிகழ்ச்சியை முன்னிட்டு தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் இன்று செவ்வாய்க்கிழமை (6) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர். இந்த இசை நிகழ்ச்சியானது எதிர்வரும் (9)ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெறவுள்ளது. நடைபெறவிருக்கும் ஹரிகரனின் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே இவர்கள்...

செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம்!

முழு செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2022 ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று அமைச்சரவை தீர்மானத்தின்படி, கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன்படி, அதன் பெறுபேறுகளுக்கு அமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர்...

வடக்கில் வறுமையினால் கேள்விக்குறியாகியுள்ள மாணவர்களின் கல்வி!

வறுமை காரணமாக வடமாகாணத்தில் உள்ள மாணவர்களின் அடைவு மட்டம் மிகவும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தலைமையில்,வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டத்தில்” வறுமைகாரணமாக மாணவர்களின் அடைவுமட்டங்கள் குறைவடைந்துள்ளமை இனங்காணப்பட்டுள்ளதோடு, மாணவர்களின் அடைவுமட்டங்களை அதிகரிப்பதற்கு முன்னெடுக்கவேண்டிய தேவை குறித்தும்...

சாதனை முயற்சியில் யாழ் இளைஞர்கள்!

இலங்கையில் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் சுற்றுலாத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். இத்திட்டத்தின் படி, மூன்று இளைஞர்களும் முச்சக்கர வண்டி மூலம் இலங்கையின் 25 மாவட்டங்களையும் 40 நாட்களில் சுற்றிவரத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சுற்றுலாவானது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – சக்கோடை முனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது. இது குறித்து குறித்த இளைஞர்கள்...

மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான செயல்!! – சுகாஸ்

மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மற்றும் அமைதியான வழியில் போராடிய மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஜனநாயகத்திற்கு எதிரான அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி நிற்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தினை கரிநாளாக அறிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் பலர் தாக்கப்பட்டமை குறித்து கொழும்பில் நாடாளுமன்ற...

வட்டுக்கோட்டை பொலிசாரிடமிருந்து காப்பாற்றுங்கள் – பல்கலை மாணவன் மன்றாட்டாம்

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளித்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று (05.2.2024) திங்கட்கிழமை காலை நடைபெற்றதாக பாதிக்கப்பட்டவரால் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை பொலிஸார் கொன்றாலும் என்ற பயத்திலேயே அங்கிருந்து ஓடி வந்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்தேன் என பாதிக்கப்பட்ட...

கில்மிஷாவுக்கு பாடசாலையில் கௌரவிப்பு!!

கில்மிஷாவின் வெற்றியை பாராட்டி, அவர் கல்வி பயிலும் சுண்டுக்குளி மகளிர் கல்லூரி சமூகத்தினரால் கௌரவமளிக்கப்பட்டுள்ளது. கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகளுக்கு பின்னர் நேற்று பாடசாலைகள் ஆரம்பமானது. இந்நிலையில் பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வில் கில்மிஷாவுக்கு கௌரவம் வழங்கப்பட்டது. இதில் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவிகள், அயல்பாடசாலை மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர். அண்மையில் இந்தியாவின் தனியார் தொலைக்காட்சியின்...

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை நேற்று(05.02.2024) முன்வைத்திருந்தார். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளில் ஒன்றாக கஞ்சா வளர்ப்பு மற்றும் விலைமாதர் தொழிலை சட்டரீதியாக அங்கீகரிக்க வேண்டும் என்று டயானா கமகே நீண்ட காலமாக குரல்...

இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியால் எயிட்ஸ் ஏற்படக்கூடிய அபாயம்!

தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை பயன்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களுக்கு எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி சிகிச்சையைப் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக கடந்த 2 ஆம் திகதி...

தொலைபேசிப் பாவனை : குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை இதற்கு முன்னர் 450 ஆக இருந்த நிலையில் ஒரு வருடத்தில் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார் அந்தவகையில் கையடக்கத் தொலைபேசிக்கு அடிமையாகுவதால் ஏற்படும்...

கிளிநொச்சியில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை!

சுதந்திர தினத்தை கரி நாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்தது போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்குமாறு ஏ9 வீதியை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் போராடத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தடைகளை அமைத்திருந்ததுடன், அதனை மீறி செல்ல முற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனையடுத்து மாணவர்களை...
Loading posts...

All posts loaded

No more posts