யாழ். மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் சஜித்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில் யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப் பிரகாசத்தினை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். ஜக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமாகிய சஜித் பிரேமதாச யாழ்ப்பாணம் விஜயம் செய்துள்ள நிலையில் அவர் பல்வேறு நிகழ்சிகளிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும்...

காணிகளை கையெற்க தயக்கம் காட்டும் பொது மக்கள்!

இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறையில் இராணுவத்தினிடமிருந்தும் கடற்படையினரிடமிருந்தும் 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த...
Ad Widget

யாழ்.போதனாவில் மருத்துவ கழிவுகள் தேக்கம்?

யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது கடந்த இரண்டு நாட்களாக தேங்கி கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தெல்லிப்பழை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த நிலையில் வைத்தியசாலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மருத்துவ கழிவுகளை எரிப்பதற்கான செயற்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே யாழ்.வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் நகரை அண்டிய கோம்பயன்...

பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் தொடர்பில் ஆளுநர் அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு

வட மாகாணத்தில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடி நீர் பாதுகாப்பானதா என உறுதிப்படுத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண மக்கள் அருந்தும் நீர் பாதுகாப்பு தொடர்பில் ஆளுநர் என்ற வகையில் உரிய பொறுப்பை நிறைவேற்றுவேன். வட மாகாண நீர் வழங்கல் வடிகால் அமைப்புச்...

இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50 பேர் வைத்தியாசலையில்!!

சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற இசை நிகழ்சியில் லேசர் கதிரொளிகள், புகைகள் (ஸ்மோக்) போன்றவை...

தற்போதைய வரிக் கொள்கை, சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை – ஜனாதிபதி

தற்போதைய வரிக் கொள்கையானது சாதாரண வரிக் கொள்கையன்றி மீட்பு நடவடிக்கை எனவும் இந்த செயற்பாடு சீர்குலைந்தால் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடுளை மேற்கொள்ள முடியாத நிலை மட்டுமன்றி எந்தவொரு நாட்டுடனும் கொடுக்கல் வாங்கல் செய்யும் வாய்ப்பை இலங்கை இழக்கவும் நேரிடும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதாரண...

உற்பத்தித்துறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் – ஆர்.ஜெயசேகரம்

உற்பத்தித்துறை சார்ந்தோருக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என யாழ்ப்பாணம் வணிக கழகத்தின் தலைவர் ஆர்,ஜெயசேகரம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் மின்சார கட்டணங்கள் 66% அதிகரிக்கப்பட்டுள்ளமையால் பல்வேறு துறைகளிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே உற்பத்தித்துறை சார்ந்தோருக்கு அரசாங்கம்...

பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக சேரும் மாணவர்களுக்கு உறுதிமொழிச் சான்றிதழ்!

மாணவர்களிடம் உறுதிமொழிச் சான்றிதழைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கும் புதிய திட்டம் ஆரம்பிக்கப்படும் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில், பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்க மாட்டோம், பல்கலைக்கழக வளாகத்தில் கலவரத்தை ஏற்படுத்தப் போவதில்லை என உறுதிமொழிச் சான்றிதழில் கையொப்பம் பெறப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கான உரிமையின்...

நெடுந்தீவுக்கு செல்லும் உள்ளூர் மக்கள் மற்றும் அரச ஊழியர்களை விலங்குகளைபோல் நடத்தும் கடற்படையினர்!

குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு கடல் போக்குவரத்தினை பயன்படுத்தும் உள்ளூர் மக்களை கடற்படையினர் விலங்குகள்போல் நடத்துவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வடதாரகை படகில் முன்னுரிமைப்படுத்தி சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் ஏற்றிவிட்டு, அதன் பின்னரே ஏனைய அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவ்வாறு தாமதமாகி படகில் அனுமதிக்கப்படுவதால் அரச உத்தியோகத்தர்கள்...

பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும்!!

கடந்த வெள்ளிக்கிழமை முடிவடைந்த 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் ஜூன் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கான விண்ணப்பங்களை எதிர்பார்த்த எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் சமர்ப்பிக்காதமை குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். விடைத்தாள்கள் திருத்தும் பணிக்காக வழங்கப்படும் நாளாந்த கொடுப்பனவு போதுமானதாக இல்லை என ஆசிரியர்கள் கவலை...

யாழ்.பல்கலைக்கழக மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டு; பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸ்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனின் மோட்டார் சைக்கிள் திருட்டுப் போயுள்ளமை தொடர்பில் அதனை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் சந்தியில் சிவராத்திரி தினத்தில் மோட்டார் சைக்கிள் திருடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவனினால் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மோட்டார் சைக்கிளின் விவரத்தை பகிரங்கப்படுத்தி அதனை...

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

தொடருந்து பேருந்து விபத்து!! மூவர் காயம்!!

கிளிநொச்சியில் பேருந்து மீது தொடருந்து மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்றைய தினம் (20.02.2023) காலை 8.15 மணியளவில் கிளிநொச்சி - அறிவியல் நகர் தொடருந்து நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற அரச பேருந்து, தொடருந்து கடவையைக் கடக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து முறிகண்டி நோக்கிப் பயணித்த யாழ்....

இனி பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலைகளில் இருந்தபடியே ஆளுநர், கல்வி அமைச்சின் செயலாளர், கல்வி பணிபாளருடன் பேசலாம்!

வடமாகாண பாடசாலைகளில் க.பொ.த சாதாரண மற்றும் உயர்தரம் கற்கும் மாணவர்கள் ஒவ்வொரு மாதமும் தமது பாடசாலைகளில் இருந்தவாறே வடமாகாண ஆளுநர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்வி பணிப்பாளருடன் தமது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் தொடர்பாக பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முன்கூட்டியே அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் ஆளுநருடன் பேச முடியும்....

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராக முறைப்பாடு!

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராகவும் சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராகவும் சபை உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அண்மையில் இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில் உறுப்பினர் பா.பத்மமுரளி “வைக்கோல் பட்டறை நாய் போன்று சிலர் செயல்படுவதாக” தெரிவித்தார். இதற்காக உறுப்பினர் பா.பத்மமுரளி மாநகர சபை நடவடிக்கையில் பங்கேற்க ஒரு...

தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் – மாவை சேனாதிராஜா

இனப்பிரச்சினை, நில விடுவிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் அழுத்தங்களை பிரயோகிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அனைவரும் ஒன்றாகவே செயற்படுவோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கட்சியின் அரசியலமைப்பின்படி தமிழரசு கட்சியின் கீழ் தான், கூட்டமைபின் பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராஜா, தேர்தலின் பின்னர் அனைவரும் ஒன்றிணைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில் கூட்டமைப்பாக...

ஜேர்மன் பிரஜையால் கிளிநொச்சியில் தரைமட்டமாக்கப்பட்ட வீடு! வீதிக்கு வந்த குடும்பம்

கிளிநொச்சியில் 1973 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து வசிக்கும் ஓர் குடும்பத்தினரின் வீட்டை,வெளிநாட்டு பிரஜை ஒருவர் இடித்து தரைமட்டமாக்கியுள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி பரந்தன் 3ஆம் ஒழுங்கையில் இடம்பெற்றுள்ளது. பல வருடங்களாக குறித்த பகுதியில் வசிக்கும் குடும்பத்தினரை, ஜேர்மனியில் இருக்கும் ஒருவர் ஜே.சி.பி வைத்து அவர்களது வீட்டை இடித்து தரைமட்டமாகியது மற்றுமன்றி குடும்ப உறுப்பினர்களை மதுவிற்கு அடிமையானவர்களின்...

க.பொ.த சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளியான தகவல்

2022ஆம் கல்வியாண்டுக்குரிய கல்விப்பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சையை எதிர்வரும் மே மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக கல்வியமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை 2023ஆம் கல்வியாண்டுக்குரிய உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையினை இவ்வருடம் நிறைவடைவதற்கு முன்னர் நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் கூறினார். 2022ஆம் ஆண்டிற்குரிய கல்விப் பொதுத் தராதர...

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் உள்ளிட்ட கொடுப்பனவுகள் 15 சதவீதம் குறைக்கப்பட்டது

சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை 15 சதவீதம் குறைத்து சுகாதார அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மாதாந்த சம்பளத்தினை நம்பியிருக்கும் தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்த தீர்மானத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த தீர்மானத்தினால் சுகாதார சேவை பாரிய அச்சுறுத்தலுக்கு...

கைது செய்யப்பட்ட குற்றவாளி – கொடுத்த வாக்குமூலம்!

குடும்பப்பெண் ஒருவரை அடித்துக் கொலை செய்து தலைமறைவாகியிருந்த நபர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். சமுக பாகுபாட்டை சுட்டிக்காட்டி பேசியதனால் ஏற்பட்ட சடுதியான கோபத்தினால் பெண்ணை தாக்கியதாக சந்தேக நபர் வாக்குமூலம் வழங்கினார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாநகர் அத்தியடியில் 55 வயதுடைய தாய் 12 ஆம் திகதி இரவு...
Loading posts...

All posts loaded

No more posts